search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்"

    • பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான கிராம பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மட்டும் இன்றி பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய காய்கறி சந்தைக்கு உள்ளூர், அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதியில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள், விவசாயிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    சுத்திகரிப்பு எந்திரம்

    இந்நிலையில் பஸ் நிலையத்தில் புதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக பழுதாகி குப்பைமேடாக காட்சியளித்து வருகிறது. இலவச கழிப்பிட கட்டிடம் பழுது பார்க்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டு அதுவும் மூடப்பட்டு அருகில் இருக்கும் கட்டண கழிப்பிடம் செல்லும் நிலையில் அதுவும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகிறது.

    மழைக்காலங்களில் பஸ் நிலையத்தினுள் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு குப்பைகள் அகற்றப்படாமலும், மதுக்குடிப்போரின் கூடாரமாகவும் பஸ் நிலையம் காட்சியளிக்கிறது. இதனால் பயணிகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது.

    பயணிகள் கோரிக்கை

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் புகார் செய்தும், அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தை சுத்தப்படுத்தி அங்கு குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
    • முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது

    உடுமலை:

    உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அங்கு சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.அதை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது.இதனால் அலுவலகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகி றார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஒரு சில சேவைகளை தவிர மற்றவை அனைத்தும் ஆன்லைன் செய்யப்பட்டு விட்டது.சர்வர் கோளாறுகள் ஏற்படும் போது அலுவலக த்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் எந்திரம் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால் அலுவலகப் பணிக்காக வரக்கூடிய பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்ப டுகின்றனர். இதுகுறித்து நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

    இதனால் மூத்தகுடிமக்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள் வெளியில் சென்று தண்ணீர் குடித்து விட்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியுமான சாமி சத்தியமூர்த்தி தனது சொந்த செலவில் மாணவர்களின் நலன் கருதி ரூ.1.05 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பள்ளிக்கு வழங்கினார். விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு சுத்திகரிப்பு எந்திரத்தை இயக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேலு, நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பாளர் சீனிவாசன், தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், ஆத்மா சேர்மன் ராஜேந்திரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


    ×