search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்படாமல்"

    • வாடிக்கையாளர்கள் அவதி
    • ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகில் பள்ளிகூடம், பெட்ரோல் பங்க், தனியார் ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. இதனால் எப்போதும் வாடிக்கை யாளர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சம்மந்தப்பட்ட வங்கிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்.களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வங்கி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம்.யை செயல்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
    • முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது

    உடுமலை:

    உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அங்கு சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.அதை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது.இதனால் அலுவலகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகி றார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஒரு சில சேவைகளை தவிர மற்றவை அனைத்தும் ஆன்லைன் செய்யப்பட்டு விட்டது.சர்வர் கோளாறுகள் ஏற்படும் போது அலுவலக த்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் எந்திரம் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால் அலுவலகப் பணிக்காக வரக்கூடிய பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்ப டுகின்றனர். இதுகுறித்து நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

    இதனால் மூத்தகுடிமக்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள் வெளியில் சென்று தண்ணீர் குடித்து விட்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×