search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking water treatment plant"

    • பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
    • முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது

    உடுமலை:

    உடுமலை நகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த சூழலில் அடிப்படை அத்தியாவசிய தேவையான குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக அங்கு சுத்திகரிப்பு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.அதை முறையாக பராமரிக்காததால் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக செயல்பாடு இல்லாமல் உள்ளது.இதனால் அலுவலகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகி றார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

    ஒரு சில சேவைகளை தவிர மற்றவை அனைத்தும் ஆன்லைன் செய்யப்பட்டு விட்டது.சர்வர் கோளாறுகள் ஏற்படும் போது அலுவலக த்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் எந்திரம் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால் அலுவலகப் பணிக்காக வரக்கூடிய பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்ப டுகின்றனர். இதுகுறித்து நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

    இதனால் மூத்தகுடிமக்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள் வெளியில் சென்று தண்ணீர் குடித்து விட்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.உடுமலை நகராட்சி அலுவலகத்தில் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×