search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்
    X

    பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்

    • பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மேலூர் பகுதி விவசா யத்திற்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சட்டமன்ற சட்டசபை அரங்கில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறியருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து மேலூர் ஒருபோக பாசன விவசாயம் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 133 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் இருபோக பாசனப்பகுதியில் அதிக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் ஒருபோக பாச னத்திற்கு போதுமானதாக இருக்கும். எனவே மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×