search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "periyar canal"

    • பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர்

    மேலூர் பகுதி விவசா யத்திற்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சட்டமன்ற சட்டசபை அரங்கில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறியருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து மேலூர் ஒருபோக பாசன விவசாயம் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 133 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் இருபோக பாசனப்பகுதியில் அதிக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் ஒருபோக பாச னத்திற்கு போதுமானதாக இருக்கும். எனவே மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்.
    • கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையை முல்லைப் பெரியாறு கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டியும் பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன்ஜி, புறநகர் மாவட்ட தலைவர் ராஜ நரசிம்மன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் தமிழ்முரசு மற்றும் நிர்வாகி கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன்ஜி கூறியதாவது:-

    உங்கள் தொகுதியின் ஸ்டாலின் முதலமைச்சர் நிகழ்ச்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை மாவட்டத்தின் முதல் கையெழுத்து முல்லைப் பெரியாறு கால்வாய்- சாத்தையாறு அணை இணைப்பு திட்டம் என கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை யில் மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். சாத்தியார் அணையை தூர்வார வேண்டும்.

    சிறுமலை பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியில் அதிகப்படியான மரங்கள் நடுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். சாத்தையாறு அணை மதகு பழுதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    மேலூரில் மதகுகளை பராமரிக்காததால் பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறி குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.

    மேலூர்:

    தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை பெய்ததின் காரணமாக முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரித்து 142 அடி நீர்மட்டம் எட்டியது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்து வைகை அணைக்கு இரைச்சல் பாலம், பெரிய குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.

    இதனைத் தொடர்ந்து மதுரை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் விவசாயத்திற்காக பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேலூர் பகுதியில் ஒருபோக பாசனத்திற்காக நேற்று முன்தினம் வந்தடைந்தது.

    மேலூர் ஆத்துக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பெரியாறு கால்வாய் மதகு பழுதாகி உடைந்துள்ளது. இதனால் சுந்தரப்பன் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல முடியாமல் வீணாகி வெளியேறுகிறது. 2 நாட்களாக அந்த தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.

    பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ×