search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்
    X

    பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்

    • பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்.
    • கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையை முல்லைப் பெரியாறு கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டியும் பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன்ஜி, புறநகர் மாவட்ட தலைவர் ராஜ நரசிம்மன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் தமிழ்முரசு மற்றும் நிர்வாகி கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன்ஜி கூறியதாவது:-

    உங்கள் தொகுதியின் ஸ்டாலின் முதலமைச்சர் நிகழ்ச்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை மாவட்டத்தின் முதல் கையெழுத்து முல்லைப் பெரியாறு கால்வாய்- சாத்தையாறு அணை இணைப்பு திட்டம் என கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை யில் மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். சாத்தியார் அணையை தூர்வார வேண்டும்.

    சிறுமலை பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியில் அதிகப்படியான மரங்கள் நடுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். சாத்தையாறு அணை மதகு பழுதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×