search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்வசந்த்"

    • காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
    • நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. பொருளாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர் சிவக்குமார் கட்சியிலிருந்து விலகி, விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினரும் இணைந்தனர்.

    தொடர்ந்து விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி பழமையான கட்சியாகும். பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. விஜயதரணி எம்.எல்.ஏ. கட்சியை விட்டு சென்று விட்டதால் கட்சி பலவீனம் அடைந்து விடாது. விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். 

    காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினரை விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.

    காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்றுக்கட்சியினரை விஜய்வசந்த் எம்.பி. சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.


    காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விளவங்கோடு தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விஜயதரணி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இங்கு பாதுகாப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்.

    அவருக்கு கேட்ட பதவி வழங்க வேண்டும். இப்போது கேட்ட பதவி வழங்கவில்லை என்பதற்காக கட்சி மாறி சென்று உள்ளார். பா.ஜனதாவை விமர்சித்த விஜயதரணி எப்படி அவர்களை புகழ் பாட முடிகிறது என்று தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சட்டமன்ற தொகுதி வாரியாக மினி ஸ்டேடியங்களை அமைத்து வருகிறது.

    நான் காங்கிரசில் இருப்பதையே பெருமையாக கருதுகிறேன் என்று எனது தந்தை கூறினார். காங்கிரசில் இருப்பது தான் எங்களுக்கு பெருமை. காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபடுவோம். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை வழங்கியுள்ளோம்.

    நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் கிடப்பில் கிடந்தது. அந்த திட்டத்தை செயல்படுத்த 1041 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. இது ஒரு கனவு திட்டமாகும். புதிய ரெயில்வே திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெயில்களை இயக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

    கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். பா.ஜனதாவிற்கு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதற்காக குறை கூறி வருகிறார்கள். ஜி.எஸ்.டி. வரி பிடித்தத்தை கூட மத்திய அரசு கொடுக்காமல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார்.
    • கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

    திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சர்மா நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ஆய்வுக்காக வருகை தந்த போது அவருடன் விஜய்வசந்த் எம்.பி.யும் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

    வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார். ஐதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது போன்ற ரெயில் நீட்டிப்பிற்கான கோரிக்கைகளை முன் வைத்தார்.

    கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகமாக பயணம் செய்யும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் கூடுதலாக ஒரு நிறுத்தம் தேவை என்றும் கேட்டு கொண்டார். நாகரகோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் இந்த ரயில் நிலையங்களை நவீன மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய்வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.

    • கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும்
    • தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும்

    நாகர்கோவில் :

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி தலைவர் ராகுல் காந்தியின் பிரம்மாஸ்திரமான 'பாரத் ஜோடோ 'யாத்திரையை பிரதிபலிக்கும் வகையிலும், பிரியங்கா காந்தியின் உணர்ச்சிகரமான பிரசாரத்தின் மூலமும் இன்று கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும். தனிப்பெரும் பான்மையோடு ஆட்சி அமைக்கும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது வாழ்த்துகள். கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளனர்.

    சிலிண்டர் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவரையும் ஒடுக்கும் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் நாள்தோறும் கடந்த 9 ஆண்டுகளில் சந்தித்து வந்திருந்தனர். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு மதப் பிரச்னைகளை தூண்டி குளிர் காய நினைத்த பா.ஜ.க அரசை கர்நாடக மக்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். என்னென்ன சதி வேலைகள், என்னென்ன ஒடுக்குமுறைகள் எதற்கும் அடங்காமல், ஒடுங்காமல் கர்நாடக மாநிலத்தையே பம்பரம் போல் வலம் வந்து, இன்று மதசார்பின்மைக்கு எதிரான மாநிலங்களில் கர்நாடகமும் இணைந்திருப்பது தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த பரிசு. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பணிபுரிவதற்கு வாய்ப்பாக ஹாசன் நாடாளுமன்ற தொகுதி மேலிடபார்வையாளராக என்னை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெற்று தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும், நாடு வளம் பெறட்டும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, மேற்பார்வையில் செயல்படும்.
    • வரவேற்புக் குழு விஜய் வசந்த் எம்.பி., தங்கும் வசதி ஏற்பாடுக்குழு எஸ்.ஜோதி மணி எம்.பி.,

    நாகர்கோவில்:

    ராகுல்காந்தி வரும் செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாள் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த காங்கிரஸ் கட்சியால் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இக்குழுக்கள் இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்.பி, மேற்பார்வையில் செயல்படும்.

    வரவேற்புக் குழு விஜய் வசந்த் எம்.பி., தங்கும் வசதி ஏற்பாடுக்குழு எஸ்.ஜோதி மணி எம்.பி., பொதுக்கூட்ட ஏற்பாடு குழு டாக்டர் ஏ.செல்லக்குமார் எம்.பி., நிகழ்ச்சி கண்காணிப்பு குழு டாக்டர் இ.எம்.சுதர்சன் நாச்சியப்பன், மக்கள் தொடர்பு குழு சி.டி. மெய்யப்பன், நடைபயண அலங்கார குழு கிறிஸ்டோபர் திலக், மக்களை திரட்டும் குழு மயூரா எஸ்.ஜெயக்குமார், விளம்பர பொருட்கள் விநியோக குழு டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. நிதிக்குழு டாக்டர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., ஊடகம் மற்றும் விளம்பர குழு ஆ.கோபண்ணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு பொன். கிருஷ்ண மூர்த்தி, போக்குவரத்துக குழு கீழானூர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் ஒருங்கிணைப்பு குழு செங்கம் ஜி குமார், முன்னணி அமைப்புகள் ஒருங்கிணைப்பு குழு வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், துறைகள் மற்றும் பிரிவுகள் ஒருங்கிணைப்பு குழு எம்.பி. ரஞ்சன் குமார், சமூக ஊடக குழு லட்சுமி காந்தன், அரசு அனுமதி பெறும் குழு வழக்கறிஞர் சந்திரமோகன், உணவு குழு பவன் குமார் ஆகிேயார் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள் ளார்.

    ×