என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vijayvasant"
- விஜய் வசந்த், அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மேலும் ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
- நாகர்கோவிலில் மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம்.
- விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-
நாகர்கோவிலில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம் நடைபெற்றது. இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் கேசவன்புத்தன்துறை புனித மரியன்னை உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் தேவை என்ற பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடித்த 2 வகுப்பறைகளை விஜய் வசந்த் நேற்று திறந்து வைத்தார்.
- பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது
திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் திரு. சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு. கே.டி.உதயம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் குமார், திரு. பிரின்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. லாரன்ஸ், திரு யூசுஃப் கான், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு டைசன் ,மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி வதன நிஷா, மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தெரிவித்த வாழ்த்தினை ஏற்று வாங்கினேன்.
பெருந்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
- செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து.
- காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
கன்னியாகுமரி:
விஜய்வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகையை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
இந்த தேர்தல் வெற்றிக்கு துணை நின்ற மாநில தலைவர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நேற்று வெற்றி கண்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்