என் மலர்
நீங்கள் தேடியது "Vijay Vasant"
- ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தேன்.
- வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் விஜய் வசந்த்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் நேற்று மற்றும் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் கல்வி விருது வழங்கும் விழா நேற்று மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், டாக்டர் தாரகை கத்பட், இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினோம்.
நெய்யூர் பேரூராட்சி பாதிரிகோட்டில் ஒரு அங்கன்வாடி அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14.80 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தேன்.

மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட 100% மானியத்தில் காய்கறி மற்றும் பழச்செடிகளின் தொகுப்புகளை இன்று வழங்கினேன்.

நேற்று சென்னை திருவேற்காடு நாடார் சங்கம் சார்பில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
- பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.
கன்னியாகுமரி:
இரணியல் ரெயில் நிலையத்தில் அமைய இருக்கும் ஜல்லி யார்டு பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்க்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.

இதனால் இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தின் முன்பு
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
- குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோடியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை வைத்தனர்.
இதைதொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகள் நிறைவுப்பெற்றன.

இந்நிலையில், இந்த புதிய வகுப்பறைகளை கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து, நாகர்கோவிலில் புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.

மேலும், மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனை ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, ஆவணி திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
- உலக சாதனை முயற்சியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெற்ற கண்ணனுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டு.
குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உலக சாதனை செய்யும் வகையில் லாரி ஒன்றை கயிறு மூலம் இழுத்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். இதை கன்னியாகுமரி எம்.பி.விஜய்வசந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாதனை செய்த கண்ணனுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை அவர் வழங்கி பாராட்டினார்.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள விஜய்வசந்த் எம்.பி., தனது உடல் மற்றும் தசை பலத்தால் பல சாதனைகளை புரிந்து வரும் குமரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், இன்று 13.5 டன் எடை கொண்ட லாரியை 4 நிமிடங்களில் தனது கரங்களால் 111 மீட்டர் இழுத்து சென்று சாதனை செய்துள்ளார். அவரால் தமிழகத்திற்க்கும், குமரி மாவட்டத்திற்கும் பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.






