search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்குவாரி"

    • தூசியால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு விடுத்தனர்.
    • முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை அடுத்த மாஸ்திபாளையம் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக கல்குவாரி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.

    குவாரியை சுற்றிலும் மாஸ்தி பாளையம், இரும்பறை, பட்டக்கா ரம்பாளையம், இட்டிடே பாளையம், பாசக்குட்டை, மொக்கையூர், தாச க்காளியூர், சண்முகாபுரம், ஓதிமலை கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கல்குவாரியில் பாறை வெடிப்பதனால் ஏற்படும் தூசி சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் பரவி வருகிறது.

    இந்த காற்று மாசுபாட்டால் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் மேயக்கூடிய இடங்களிலும் தூசி படிந்து இருக்கிறது.

    இதனை கால்நடைகள் சாப்பிடுவதால் வயிற்று கோளாறு ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    மேலும் வாழை உள்ளிட்ட அனைத்து பயிர்கள் மீது தூசு படிவதால் அவை போதிய அளவில் வளர்ச்சி அடையாமல் மகசூல் பாதிக்கப்படுகிறது. எனவே மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இதனிடையே தூசி பரவுவதை தடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் பொதுமக்கள் கல்குவாரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து விவசாயி ரமேஷ் கூறுகையில், இந்த கல்குவாரியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓதிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழித்தடம் மறிக்கப்பட்டு இந்த கல்குவாரி செயல்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக கூறியும் இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே இந்த கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்றார்.

    விவசாயி பொன்னுசாமி கூறும்போது, கல்குவாரியி்ல் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்துவதால் நிலத்தடி போர்வெல் பாதிக்கப்பட்டு தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது. வருடத்தில் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அப்போது பயிரிட்டால் கல்குவாரியின் உரிமையாளா் எங்களை மிரட்டுகிறார்.

    இதனை அரசின் கவனத்திற்கு தெரிவிப்பதற்காகவே நாங்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மூலம் எங்களின் போராட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

    • அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்தார்.
    • அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நல்லறம் பட்டியலைச் சேர்ந்தவர் அசோக் (வயது 20). தறி தொழிலாளி. இவர் நேற்று தன்னுடைய நண்பர்களுடன் கோரிமேட்டை அடுத்த ஜீவா நகரில் உள்ள கல்குவாரி அருகே மது அருந்திவிட்டு அங்குள்ள குட்டையில் குளித்தார்.

    அப்போது அசோக் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீரில் அசோக் மூழ்கியுள்ளார். அவருடைய நண்பர்கள் அவரை மீட்க முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் அசோக் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    அசோக் உடலை மீட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
    • அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளத்தில் குவாரிகள் அமைக்க ஜனவரி 6ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து பல்லடத்தில் உள்ள திருப்பூா் மாவட்ட ( தெற்கு) மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளா் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமம் க.ச.எண் 688, 689, 657 ஆகிய இடங்களில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் சாா்பில் 10.98 ஹெக்டோ் பரப்பளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் கல்குவாரி குறித்த கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என நேர்மை மக்கள் இயக்கம் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில் தனியார் கல்குவாரி குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லை. 176 பக்க அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால், குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.

    கல்குவாரிகளால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வார்கள் என்கிற அறிக்கை தாய்மொழியில் இருந்தால்தான் மக்கள், அதனை புரிந்துகொண்டு தங்கள் கருத்து தெரிவிக்க முடியும்.

    சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லாததாலும், உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாலும் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும். அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது.
    • விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சிக்கரசம்பாளையம், ஜீவா காலனி, ராமபட்டிணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் வாழும் பகுதிக்குஅருகில் இயங்கும் கல் குவாரிகள் செயல் பாடுகளால் அதீத வாழ்வியல்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இக்குவாரிகளின் செயல் பாடுகள் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக வெடிகளை பயன்படுத்துவதால் அதிக ரசாயன மாசு ஏற்படுகிறது.

    மாசுக் காற்றை சுவாசிப்பதால் நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் முறையாக புகை மாசுகளை கட்டுப்படுத்தக் கூடிய எந்த ஒரு நடவடிக்கையும்மேற்கொள்ளாத காரணத்தால் அதிக மாசு மற்றும் குழந்தைகள் வெடிச்சத்தம் கேட்டு அழுது கொண்டும் விரக்தியிலும்உள்ளார்கள். விவசாய பயிர்கள் பாழடைகிறது. கால்நடைகள் பருகும் தண்ணீர் வீணாகிறது.கிணற்றின் சுற்றுச்சுவர்கள் சேதமடைகிறது. ஆகவே உடனடியாக நடவடிக்கைஎடுத்து மேற்கண்ட குவாரிகளில் இயக்கத்தை நிறுத்தி உரிமத்தை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா்.
    • மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த தனியாா் கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா். அபராத தொகையை தவணை முறையில் செலுத்த அவகாசம் அளித்தும், முழு அபராத தொகையை செலுத்துவதற்கு முன்பாகவே மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

    முழு அபராத தொகையை செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு தடை விதிப்பதுடன், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லாரிகளை மடக்கி பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலைந்து சென்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த முசிறி கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரியிலிருந்து லாரிகள் மூலம் அதிக பாரத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு முசிறி-வாலாஜாப்பேட்டை சாலையில் செல்வதாக கூறப்படுகிறது.இதனால் முசிறி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கற்கள் மேலே விழுமோ என்ற அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், நேற்று கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரிகளை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.

    இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • பல்லடம் போலீசில் புகார் செய்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

    இந்நிறுவனத்தின் லாரி குவாரியில் இருந்து மண் எடுத்து வரும்போது அவிநாசியை சேர்ந்த விஜயகுமார் ,சக்திவேல், விஜயன், கணேஷ் , மகாசாமி உள்ளிட்ட 5 நபர்கள் அத்துமீறி குவாரிக்குள் நுழைந்து லாரியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குவாரி மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு பல்லடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரி நிறுவனம் அரசின் சட்டவிதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக கூறி கடந்த 7 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் மாசுக்கட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் வனஜா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    இந்தநிலையில் அதன் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் புதியதாக உரிமம் வழங்கப்பட்டு மண் மட்டுமே தோண்டி எடுக்கப்பட்டு வரும் தனியார் கல்குவாரி நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்குவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனியார் கல்குவாரி நிறுவனத்தினர் கூறுகையில் ,அரசின் விதிமுறைகளை பின்பற்றி தான் கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு. தற்போது குழி எடுத்து மண் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ஏரி அமைக்கப்பட்டு அதில் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

    தரிசாக இருக்கும் இடங்களில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.பாறை எடுக்க 6 மாத காலங்கள் ஆகும். இந்தநிலையில், தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • தாசில்தார் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி -கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று (செவ்வாய்க்கிழமை) 8-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று ( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் , மற்றும் பல்வேறு இயக்கங்கள் , விவசாயிகள்,பொதுமக்கள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் .இதனைத் தொடர்ந்து நேற்று காலை விஜயகுமார் வீட்டில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் போலீசார் ஆகியோர் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு தயாராக இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .பின்னர் சாமளாபுரம் வருவாய்த்துறை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்லடம் டி.எஸ்.பி, கோட்டாட்சியர், பல்லடம் தாசில்தார், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் "கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் விவசாயிகளிடம் "கல்குவாரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,ஆய்வின் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர். அதிகாரிகள் "கல்குவாரியை ரத்து செய்யப்படும்"என உத்திரவாதம் அளிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விவசாயி விஜயகுமாரின் வீட்டில் இருந்து கல்குவாரியை நோக்கி கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.பின்னர் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.இதனால் போலீசாருக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

    கல்குவாரிக்கு செல்லும் வழியில் போலீசார் பேரிகார்டு வைத்திருந்தனர். இதனால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தர்ணா வில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல்லடம் டி.எஸ்.பி.விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் போலீசாரிடம்" தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் இணைந்து வருகிற 9-ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விஜயகுமாருக்கு ஆதரவாக 25 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்குவதாக தெரிவித்து விட்டு சென்றனர். 

    • 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 6-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தற்போது தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சமீபத்தில் பல்லடம் எம்.எல்.ஏ.,எம்.எஸ்.எம்.ஆனந்தன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி விஜயகுமாரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை 5-ந்தேதி( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் விவசாயிகள் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×