search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கேட்பு கூட்டம்"

    • கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்பு.

    சென்னை தலைமை செயலகத்தில், 2024- 2025ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது

    இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தின்போது, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

    • தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    பஞ்சாலை தொழிலுக்கு (வேலை பழகுனர்கள் தவிர) குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயலாளராக கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தற்சார்பு உறுப்பினர்களாக இணை இயக்குனர் பஞ்சாலை சென்னை, இணை இயக்குனர்-1 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் திருப்பூர், புள்ளியியல் உதவி இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியல்துறை கோவை ஆகியோர் உள்ளனர். தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குழுவால் வருகிற 17-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விவரங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலையளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழுவினரிடம் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    • கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இணை ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி வேலை பழகு நர்களை தவிர பஞ்சாலை தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் பொருட்டு கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் திண்டுக்கல் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் கோபால கிருஷ்ணன் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் உள்ளனர். இந்த குழுவினர் திண்டுக்கல் பகுதியில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களை நேரடியாக சந்தித்து விபரங்கள் பெற உள்ளனர்.

    இக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் இணை ஆணையர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் தொழி லாளர்கள் , தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் கருத்து க்களை தெரிவிக்க லாம் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

    • கல் குவாரி அமைப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார்.மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன், மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குவாரி உரிமையாளர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.அப்போது இருதரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அனைவரின் கருத்துக்களும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார்

    மங்கலம் : 

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டமானது 63 வேலம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 63வேலம்பாளையம், சுக்கம்பாளையம் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் "உள்ளூரில் கல்குவாரி வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும்"என கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரி இயங்க வேண்டும்" என்றனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கலந்து கொண்டவர்கள் "கல்குவாரி வருவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கல்குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது" என கருத்து தெரிவித்தனர்.

      சேலம்:

      சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      பஞ்சாலை தொழிலுக்கு 1948-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி, குறைந்தபட்ச ஊதிய நிர்ண யம் வகையில் கோவை கூடு தல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழுவில் தற்சார்பு உறுப் பினர்களாக சென்னை இணை இயக்குனர் (பஞ்சாலை), திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குனர், கோவை புள்ளியி யல் உதவி இயக்கு னர் ஆகி யோரும், தொழிலா ளர் தரப்பு பிரதிநிதிகளாக பலரும் இடம் பெற்றுள்ள னர். இக்குழுவானது நாளை (செவ்வாய்கிழமை) சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள பஞ்சாலை தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடி யாக சந்தித்து விபரங்கள் பெற முடிவு செய்துள்ளனர். இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சேலம் கோரிமேடு ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவ லக வளாகத்தில் அமைந் துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. எனவே, இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.
      • இக்கூட்டத்தில் தொழிலாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

      ஈரோடு:

      கோவை கூடுதல் தொழி லாளர் ஆணையர் தமிழரசி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

      பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலாளர் தரப்பில் எல்.பி.எப். நெடுஞ்செழியன் உள்பட பலரும், நிர்வாக தரப்பில் சிமா, சிஸ்பா பிரதிநிதிகள் செல்வராஜூ, ஜெகதீஸ் சந்திரன் உள்பட சிலரும், அதிகாரிகள் தரப்பில் சிலரும் இடம் பெற்றுள்ள னர்.

      இக்குழுவினர் வரும் 12-ந் தேதி ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலைகளில் கம்பேசிட், ஸ்பின்னிங், வீவிங், சைசிங், வார்பிங், ஸ்பின்னிங் மில்களில் பணி செய்யும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விபரம் பெற உள்ளனர்.

      ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.

      இக்கூட்டத்தில் தொழி லாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

      இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

      • கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
      • கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

      திருப்பூர் :

      பல்லடம் கோடங்கிப்பாளையத்தில் 4 புதிய கல் குவாரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 16 பழைய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்–டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுகட்–டுப்–பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

      கூட்டத்தில் பங்கேற்ற ஒருதரப்பினர், 'கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பசுமை வளையங்கள் முறையாக அமைக்கவில்லை. விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உரிய விதிமுறைகளை கடைபிடித்து கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்' என்றனர்.

      மற்றொரு தரப்பினர், 'கல் குவாரியால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் இதர தொழில்களும் சேர்ந்தே வளர்ச்சி பெறும். பல தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளதால் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

      • விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
      • பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      ஈரோடு:

      ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் விரிவாக்குதல்,

      புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

      இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

      கீழ்பவானி திட்ட பிரதானகால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொட ர்பாக விவசாயி பெருங்குடி மக்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடை பெற்றது.

      இக்கூட்டத்தில் விவசாயிகள் அவர்களுக்கு உள்ள கருத்துக்களை தெரி வித்துள்ளனர். அவர்களை பொறுத்தவரை பழைய கட்டுமான பணி களை தொட ங்குவதிலே எங்களு க்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தி ருக்கிறார்கள்

      நீர்வளத்துறையின் சார்பாக பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      மேலும் வாய்க்கால்களின் கதவனை களின் (சட்டர்) பழுதுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை நீக்க வேண்டுமெனவும்,

      அவற்றில் எந்த பணிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதனை உடனடியாக மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      மேலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களையும் வழங்கியுள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      இக்கூட்டத்தில் புலம்பெயர் தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (கோவைமண்டலம்) முத்துசாமி,

      கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடி நிலகோட்டம்) கவுதமன், கீழ்பவானி வடி நிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற் பொறியாளர்கள்,

      உதவி பொறியாளர்கள், விவசா யிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய துறை அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

      • பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
      • அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

      பவானி:

      பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டுவதற்கான கருத்து கேட்டு கூட்டம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையிலும், ஆணையாளர் (பொறுப்பு) கதிர்வேல், துணைத்தலைவர் மணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

      இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. நகர செயலாளர் நாகராசன், அ.தி.மு.க. நகர செயலாளர் சீனிவாசன்,

      கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில நிர்வாகி துரைராஜா, பா.ஜ.க. நகர தலைவர் நந்தகுமார், பா.ம.க. நகர செயலாளர் தினேஷ் குமார் நாயகர்,

      இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன், நாம் தமிழர் கட்சி நிர்வாகி முருகேசன், பவானி நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

      பவானி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் காவேரி ஆற்றங்கரை மற்றும் பொது மயானம் அருகில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

      சுமார் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொண்ட இந்த தினசரி காய்கறி மார்க்கெட் செல்லும் வகையில் 3 வழித்தடம் இருந்தும் சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று வர போதிய வசதி இல்லை.

      இதனால் ஓசூரில் இருந்து காய்கறிகள் கொண்டு வர பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. காலை 8 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் மார்க்கெட் பக்கம் வருவதே இல்லை. வெறிச்சோடியே காணப்படுகிறது. இதனால் வியாபாரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

      ஆகவே பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிய காய்கறி மார்க்கெட் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் மற்றும் வியாபாரிகள் உள்பட பவானி நகர பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலரும் விருப்பம் தெரிவித்தனர்.

      இந்த கூட்டத்தின் போது ஒரு சிலர் காய்கறி மார்க்கெட் இருக்கும் இடத்திலேயே புதிதாக புனரமைப்பு செய்து நடத்திட வேண்டும் எனவும், புதிய பஸ் நிலையம் அருகில் கொண்டு செல்லக்கூடாது எனவும் வலியுறுத்தி பேசினர்.

      அப்போது சிறிது நேரம் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பலரின் கருத்தும் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் காய்கறி மார்க்கெட் கொண்டு செல்லவே வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

      இது குறித்து நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோ வன் கூறுகையில்,

      சட்டசபை மானிய கோரிக்கையின் போது நகராட்சி பகுதிகளில் காய்கறி மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

      பவானி நகராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட் கட்ட ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. பவானி நகராட்சி பகுதியில் உள்ள பழைய காய்கறி மார்க்கெ ட்டை புதிப்பிப்பதா? அல்லது புதிதாக கட்டப்பட வேண்டுமா? என தாங்கள் கருத்துக்களை கூற இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று உள்ளது.

      இங்கு விவாதிக்கப்பட்ட விவாத ங்கள் குறித்து உயர் அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என தெரிவித்தார்.

      இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பவானி புதிய பஸ் நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் கொண்டு வந்தால் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.

      மேலும் போக்குவரத்து வசதியால் மார்க்கெட் வந்து செல்ல வசதியாக இருக்கும். அதே போல் பழைய இடத்தில் உழவர் சந்தை ஒன்று கொண்டு வந்தால் விவசாயிகள் பயனடை வார்கள் என்றும் விவாதிக்கப்பட்டது.

      அப்போது ஒரு சிலர் இருக்கும் இடத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும், மாற்ற கூடாது எனவும் பேசியதால் கூட்ட த்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

      முடிவில் ஆணையாளர் பொறுப்பு கதிர்வேல் கூறுகையில், கூட்டம் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

      பவானி நகரத்தின் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்பினர், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு 3 மணி நேரத்திற்கு மேலாக பேசியும் எந்த விதமான இறுதி முடிவும் எடுக்க முடியாமல் போனது குறிப்பிடதக்கது ஆகும்.

      • நான்கு வழிச் சாலைப்பணிக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.
      • தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நில உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

      ஆலங்குளம்:

      நெல்லை- செங்கோட்டை- கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்கு கூடுதல் நிலம் கையகப் படுத்துதல் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது.

      நான்குவழிச்சாலைப் பணிகள் தொடங்கி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான இடங்கள் கையகப் படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிவாரணமும் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிக்கு கூடுதல் இடங்கள் தேவைப் படுவதால் அவற்றை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் ஆட்சேபனைகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

      தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி அம்மாள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டம் பகுதி 2, திருச்சி நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் இருந்து நிலம் வைத்திருக்கும் அழைப்பானை கொடுக்பட்ட உரிமை யாளர்கள் பங்கேற்றனர்.

      இதில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிலம் கையகம் செய்வதற்கு ஆட்சேபனை இல்லை என கடிதம் அளித்தனர்.

      • குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
      • அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

      மடத்துக்குளம்:

      மடத்துக்குளத்தில் குவாரிகள் அமைக்க ஜனவரி 6ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து பல்லடத்தில் உள்ள திருப்பூா் மாவட்ட ( தெற்கு) மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளா் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமம் க.ச.எண் 688, 689, 657 ஆகிய இடங்களில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் சாா்பில் 10.98 ஹெக்டோ் பரப்பளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இந்தநிலையில் உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் கல்குவாரி குறித்த கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என நேர்மை மக்கள் இயக்கம் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

      மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில் தனியார் கல்குவாரி குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லை. 176 பக்க அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால், குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.

      கல்குவாரிகளால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வார்கள் என்கிற அறிக்கை தாய்மொழியில் இருந்தால்தான் மக்கள், அதனை புரிந்துகொண்டு தங்கள் கருத்து தெரிவிக்க முடியும்.

      சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லாததாலும், உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாலும் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும். அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

      ×