search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஞ்சாலை தொழிலுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணய கருத்து கேட்பு கூட்டம்
    X

    பஞ்சாலை தொழிலுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணய கருத்து கேட்பு கூட்டம்

      சேலம்:

      சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      பஞ்சாலை தொழிலுக்கு 1948-ம் ஆண்டு குறைந்த பட்ச ஊதிய சட்டப்படி, குறைந்தபட்ச ஊதிய நிர்ண யம் வகையில் கோவை கூடு தல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழுவில் தற்சார்பு உறுப் பினர்களாக சென்னை இணை இயக்குனர் (பஞ்சாலை), திருப்பூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குனர், கோவை புள்ளியி யல் உதவி இயக்கு னர் ஆகி யோரும், தொழிலா ளர் தரப்பு பிரதிநிதிகளாக பலரும் இடம் பெற்றுள்ள னர். இக்குழுவானது நாளை (செவ்வாய்கிழமை) சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் உள்ள பஞ்சாலை தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடி யாக சந்தித்து விபரங்கள் பெற முடிவு செய்துள்ளனர். இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சேலம் கோரிமேடு ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவ லக வளாகத்தில் அமைந் துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவல கத்தில் நடைபெறுகிறது. எனவே, இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      Next Story
      ×