search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "with farmers"

    • விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் விரிவாக்குதல்,

    புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமை ச்சர் முத்துசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

    கீழ்பவானி திட்ட பிரதானகால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல், பழுதுநீக்குதல் மற்றும் நவீனப்படுத்துதல் தொட ர்பாக விவசாயி பெருங்குடி மக்களுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் அவர்களுக்கு உள்ள கருத்துக்களை தெரி வித்துள்ளனர். அவர்களை பொறுத்தவரை பழைய கட்டுமான பணி களை தொட ங்குவதிலே எங்களு க்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தி ருக்கிறார்கள்

    நீர்வளத்துறையின் சார்பாக பழைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் வாய்க்கால்களின் கதவனை களின் (சட்டர்) பழுதுகளை நீர்வளத்துறை அலுவலர்கள் முறையாக ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை நீக்க வேண்டுமெனவும்,

    அவற்றில் எந்த பணிக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதனை உடனடியாக மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களையும் வழங்கியுள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் புலம்பெயர் தமிழர் நலவாரியம் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, உதவி கலெக்டர் (பயிற்சி) பொன்மணி , நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (கோவைமண்டலம்) முத்துசாமி,

    கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடி நிலகோட்டம்) கவுதமன், கீழ்பவானி வடி நிலகோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவிசெயற் பொறியாளர்கள்,

    உதவி பொறியாளர்கள், விவசா யிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட தொடர்புடைய துறை அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.

    ×