search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultation meeting for"

    • தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.
    • இக்கூட்டத்தில் தொழிலாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    கோவை கூடுதல் தொழி லாளர் ஆணையர் தமிழரசி வெளியி ட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:

    பஞ்சாலை தொழிலா ளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தொழிலாளர் தரப்பில் எல்.பி.எப். நெடுஞ்செழியன் உள்பட பலரும், நிர்வாக தரப்பில் சிமா, சிஸ்பா பிரதிநிதிகள் செல்வராஜூ, ஜெகதீஸ் சந்திரன் உள்பட சிலரும், அதிகாரிகள் தரப்பில் சிலரும் இடம் பெற்றுள்ள னர்.

    இக்குழுவினர் வரும் 12-ந் தேதி ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பஞ்சாலை தொழிற்சாலைகளில் கம்பேசிட், ஸ்பின்னிங், வீவிங், சைசிங், வார்பிங், ஸ்பின்னிங் மில்களில் பணி செய்யும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விபரம் பெற உள்ளனர்.

    ஈரோடு சென்னிமலை சாலை அரசு ஐ.டி.ஐ. பின்புறம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் இணை ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 12-ந் தேதி காலை 10.30 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றனர்.

    இக்கூட்டத்தில் தொழி லாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலை யளிப்போர், வேலை யளிப்போர் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×