search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்குவாரியிலிருந்து அதிகபாரத்தில் கற்களை ஏற்றி செல்லும் லாரிகள்
    X

    பொதுமக்கள் மடக்கிய லாரிகள். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம், தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    கல்குவாரியிலிருந்து அதிகபாரத்தில் கற்களை ஏற்றி செல்லும் லாரிகள்

    • லாரிகளை மடக்கி பொதுமக்கள் வாக்குவாதம்
    • அதிகாரிகள் உத்தரவின் பேரில் கலைந்து சென்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை அடுத்த முசிறி கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த குவாரியிலிருந்து லாரிகள் மூலம் அதிக பாரத்தில் கற்களை ஏற்றிக்கொண்டு முசிறி-வாலாஜாப்பேட்டை சாலையில் செல்வதாக கூறப்படுகிறது.இதனால் முசிறி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் கற்கள் மேலே விழுமோ என்ற அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், நேற்று கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரிகளை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உத்தரவின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×