search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக தேர்தல்"

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    • பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பட்டீல் (வயது 68) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துர்விகால் களமிறங்கியுள்ளார். மேலும் இதே தொகுதியில் ஈஷப்பா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் தனது பெயரையும் ஈஷப்பா கவுடா பட்டீல் என மாற்றியுள்ளார். இவர் பிரதாப் கவுடா பட்டீல் போல் தோற்றத்தில் நெற்றியில் திருநீரு பூசி இருப்பதுடன் அவரை போல் மீசையும் வைத்துள்ளார்.

    பிரதாப் கவுடா பட்டீலை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி அவரை போல் முகதோற்றம் கொண்ட ஈஷப்பாவை இறக்கிவிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரே தோற்றம் கொண்ட 2 வேட்பாளர்களால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி ஓட்டலில் தோசை சுட்டார்.
    • அப்போது பிரியங்கா காந்தி, அதன் செய்முறையை கற்றுக்கொண்டேன் என கூறியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் கலந்து கொள்ள கர்நாடகாவுக்கு வந்துள்ளார்.

    அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கர்நாடக பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்நிலையில், சுற்றுப்பயணத்தின்போது மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரியங்கா காந்தி காலை உணவு சாப்பிட்டார். அப்போது இட்லி மற்றும் தோசை ஆர்டர் செய்து வாங்கினார். அது நன்றாக இருந்தது எனக்கூறிய அவர், தோசை சுடுவது எப்படி என்று கற்றுக் கொண்டேன் என்றும் வெளியே காத்திருந்த நிருபர்களிடம் கூறியுள்ளார்.

    ஓட்டலின் சமையலறை பகுதிக்குச் சென்ற பிரியங்கா காந்தி, அவரே விரும்பி தோசையை கல்லில் வார்த்து, தோசை சுடும் முறையை கற்றுக்கொண்டார்.

    • 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த நான்கு சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்ய முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இதர பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2பி பிரிவில் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான பணிகளில் மாநில அரசு தற்போதைக்கு ஈடுபடாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

     

    பிரிவு 1 மற்றும் பிரிவு 2-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அடங்கிய 17 துணை சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையில் கர்நாடக அரசு மே 9 ஆம் தேதி வரை ஈடுபட கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக இன்று செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, "வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை இந்த விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. நாங்கள் தான் உச்சநீதிமன்றத்தில், வழக்கை நீங்கள் முழுமையாக விசாரணை செய்யுங்கள். விசாரணை நிறைவுபெறும் வரை அதனை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கிறோம்," என்றார்.

    "இஸ்லாமியர்கள் இடையே- பிஞ்சார், டார்சி, சக்கர்பண்ட் உள்பட மொத்தம் 17 துணை சமூகங்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பிரிவு 1 மற்றும் 2ஏ கீழ் இருப்பவர்கள், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இந்த பிரிவுகளில் உள்ளனர். நான்கு சதவீத இட ஒதுக்கீடு பெற்று வருவோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான பத்து சதவீத இட ஒதுக்கீடு பெறும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் யாருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை." என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

    • அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கர்நாடகா சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை களமிறங்கியுள்ளது.

    அதேவேளை, கர்நாடக தேர்தலில் காந்திநகர் தொகுதியில் அ.தி.மு.க பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது.

    இதை எதிர்த்து கர்நாடக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமாருக்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியது. அ.தி.மு.க. பெயரில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் காந்திநகர் தொகுதியில் போட்டியிட தான் தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கர்நாடகத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி கனவில் இருந்து வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது. இரு தலைவர்களுமே தங்களுக்கு கிடைக்காத சி.எம். சீட்டுக்காக போராடி வருகிறார்கள்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் முக்கிய நோக்கம் அதிகாரமும், முதல் மந்திரி பதவியும் தான், கர்நாடக மக்களின் நலன் அல்ல என தெரிவித்தார்.

    கர்நாடக தேர்தலில் ரூ.6,500 கோடியை பா.ஜனதா செலவிட்டு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #KarnatakaElection #BJP #congress
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகிலேயே மிகப்பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பா.ஜனதா உள்ளது. கர்நாடக தேர்தலில் ரூ.6,500 கோடியை பா.ஜனதா செலவிட்டு உள்ளது. இந்தப் பணம் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து பா.ஜனதா விளக்கம் அளிக்க வேண்டும்.

    எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற பண பலத்தையும், அரசு எந்திரத்தையும் பா.ஜனதா தவறாக பயன்படுத்தியது. இது குறித்து சுதந்திரமான விசரணை நடத்தப்பட வேண்டும்.

    கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொண்டதற்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. ஆனால் அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை சுயநலத்துடன் பா.ஜனதாவும் ஏற்றுக்கொண்டது.



    ஆனந்த் சர்மா

    கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி அரசியல் கண்ணியத்தை தரம் தாழ்த்திவிட்டார். பிரசாரத்தின் போது அவர் பேசிய வார்த்தைகளின் மூலம் தன்னையும் பிரதமர் பதவியையும் தரம் தாழ்த்திவிட்டார். இதற்கு முன்பு பிரதமர்களாக இருந்த யாரும் மோடி போல் மோசமாக பேசியது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பாதி பொய்-பாதி உண்மைகளை கூட மோடி தெரிவிக்க வில்லை. அவர் பேசிய அனைத்தும் பொய்களே. இதனால் தான் பா.ஜனதா தோற்றது.

    ஆனால் அதே நேரத்தில் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு 2 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன. தேர்தலின் போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

    மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசு அமைத்து 4 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடுவதற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு மோடி பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.#KarnatakaElection2018 #BJP #congress
    கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து மந்திரிசபை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #JDS_Cong_Alliance #Kumaraswamy
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார்.

    அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார்.

    நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
    தோல்வியை வெற்றியாக சித்தரிக்கும் புதிய வழிமுறையை காங்கிரஸ் கட்சி கண்டறிந்துள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். #AmitShah #Congress
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உள்ள பரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது.

    தோல்வியை வெற்றியாக சித்தரிக்கும் புதிய வழிமுறையை காங்கிரஸ் கட்சி கண்டறிந்துள்ளது. இதுவே 2019 வரை தொடரும். கர்நாடக மாநிலத்தில் வெற்றியடைந்ததாக காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கொண்டாடி வருகின்றன. ஆனால், இங்கு உள்ள மக்களுக்கு எந்த கொண்டாட்டமும் இல்லை. காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கர்நாடக மக்கள் விரும்பவில்லை. எனவே, தான் அவர்களுடைய திடீர் கூட்டணியை புனிதமில்லா கூட்டணி என நாங்கள் கூறுகிறோம்.

    கர்நாடகத்தில் பா.ஜ.க.வே தனிப்பெரும் கட்சி, முந்தைய தேர்தலை விட தற்போது எங்களின் ஒட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் 15 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, இது காங்கிரஸ் கட்சிக்கு தான் மிகப்பெரிய தோல்வியாகும்.

    நாங்கள் குதிரை வியாபரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்துமாக குதிரை லாயத்தையே விலைக்கு வாங்கிவிட்டது. மின்னனு ஓட்டு பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது முன்னர் நம்பிக்கை இழந்திருந்த காங்கிரஸ் இப்போது இவற்றை எல்லாம் நம்ப தொடங்கியுள்ளது. #AmitShah #Congress
    கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பீகாரில் நாங்கள் தனிக்கட்சி நாங்கள் என்பதால் ஏன் ஆட்சியமைக்க கூடாது? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #RJD
    பாட்னா:

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

    பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

    குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

    பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பீகாரில் நாங்களே தனிப்பெரும் கட்சி ஏன் நாங்கள் ஆட்சியமைக்க கூடாது? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 80 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 71 தொகுதிகளிலும், பாஜக 53 இடங்களிலும் வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது போலவே, கூட்டணி ஆட்சி அமைத்தது.

    பின்னர், 2017-ம் ஆண்டு திடீரென ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணியிலிருந்து விலகி பின்னர் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடக தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் வெறும் 6 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். #KarnatakaVerdict
    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், மஜத 39 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

    இதனால், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க உள்ளது. இந்நிலையில், சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாலி வாட்டாள் பக்‌ஷா கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் வெறும் 5977 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். 
    பங்குச்சந்தை புள்ளிகளைப் போல் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பான முன்னிலை நிலவரங்கள் ஏற்ற - இறக்கங்களை சந்தித்துவரும் நிலையில் ஆட்சி நாற்காலி யாருக்கு? என பார்ப்போம். #KarnatakaElections #KarnatakaVerdict #BJP #Congress
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

    வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் - பா.ஜ.க. வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்து வருகின்றனர். முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். சிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதியது.



    இதையடுத்து, அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சூறாவளி பிரசாரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அனல் பறக்கும் வகையில் மேடைகளில் முழக்கமிட்டார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பலர், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட பல பா.ஜ.க. பிரமுகர்கள் கர்நாடக தேர்தல் களத்தை கலங்கடித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சளைக்காமல் ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாநிலத்தை வலம் வந்தார். இறுதிக்கட்ட பிரசாரத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாக உரையாற்றினார்.

    மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரசாரத்தில் பின்தங்கவில்லை.

    இந்நிலையில், இன்று பிற்பகல் ஒருமணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    இதை வைத்து பார்க்கும்போது, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க. செல்லலாம் என கருதப்படுகிறது.

    ஒருவேளை ஆட்சி அமைக்க தேவையான 112 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை கொண்ட தனிப்பெரும்பான்மை பா.ஜ..க.வுக்கு கிடைக்காமல் போனால்.. எதிர்க்கட்சியாகும் அளவுக்கே உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என யூகிக்கப்படும் காங்கிரஸ் கட்சி, தற்போதைய முன்னிலை நிலவரப்படி, பா.ஜ.க.வின் 86-ஐ விட, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களின் ஒட்டுமொத்த முன்னிலை இடங்கள் 118 என மனக்கணக்கு போட தொடங்கி விட்டதாக தெரிகிறது.

    சித்தராமையாவுக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரி பதவியில் அமர்த்த காங்கிரஸ் முன்வந்தால் தேவேகவுடாவின் மனதை வென்று மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுடன் தனது ஆட்சியை கூட்டணி ஆட்சியாக தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    ஒருவேளை, தனக்கோ தனது மகன் குமாராசாமிக்கோ முதல் மந்திரி பதவி தந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க ஒத்துழைப்பதாக தேவேகவுடா நிபந்தனை விதித்தால் அதற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல் இந்த கூட்டல், கழித்தல் கணக்குகளுக்கு இடம் அளிக்காமல் “எந்த கை மறைத்தாலும் தாமரை மலர்வதை தடுக்க முடியாது” என பா.ஜ.க. வேறொரு கணக்கு போடக்கூடும்.

    இன்று வெளியாகும் முடிவுகள் போக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் மற்றும் ஒருவேளை குமாரசாமி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்யவுள்ள ஒரு தொகுதி என இந்த மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல்கள் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு பலம் சேர்க்கும் என்பது உறுதி.
    ×