என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெரும்பான்மை"
- 266 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 அன்று நடந்தது
- பூட்டோ, நவாஸ் பேச்சு வார்த்தையை தொடங்கினர்
பாகிஸ்தான் பாராளுமன்றம், செனட் (Senate) எனும் மேல்சபை மற்றும் தேசிய அசெம்பிளி (National Assembly) எனும் கீழ்சபை ஆகிய இரு அவைகளை கொண்டது.
தேசிய அசெம்பிளியில் 342 இடங்கள் உள்ளன.
இவற்றில் 266 இடங்களுக்கான உறுப்பினர்கள் பொதுமக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இவற்றை தவிர 70 இடங்கள் பெண்களுக்கும், மைனாரிட்டி வகுப்பினருக்கும், 6 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 அன்று மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) இன்று முடிவுகளை வெளியிட்டது.
இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இன்சாஃப் (Pakistan Tehreek-Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வென்றுள்ளனர். இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபி கட்சி, அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களே பெற்றுள்ளது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Pakistan Muslim League) கட்சி 73 இடங்களில் மட்டுமே வென்றது.
பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party) வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக பலர் குற்றம் சாட்டினர்.
இம்ரான் கான், அதிபராவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.
வரும் நாட்களில் அதிபர் யார் என்பது உறுதியாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை அடுத்து, தலைமை செயலாளர் உடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவிகிதம் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்தார். #Karnataka #FloorTest
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்கள் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பா நேற்று முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.
கவர்னரின் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது எனவே, எடியூரப்பா பதவியேற்றதை தடுக்க வேண்டும் என கவர்னர் அழைப்பு விடுத்த அன்றே இரவில், சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. நள்ளிரவில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எடியூரப்பா பதவியேற்க தடையில்லை, எடியூரப்பா கவர்னரிடம் அளித்த கடித்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்று தள்ளி வைத்தனர்.
எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க தயாரா? என நீதிபதிகள் கேட்டனர். காங்கிரஸ் - மஜத கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆளுநரின் முடிவை ஆய்வு செய்வது அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு இரண்டில் எதாவது ஒன்றுதான் தீர்வு என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளையே பதவியேற்க வேண்டும். மூத்த எம்.எல்.ஏ ஒருவர் தற்காலிக சபாநாயகராக செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடக்காது என்பதை நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.
ஓட்டெடுப்புக்கு வரும் எம்.எல்.ஏ.க்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏவை நியமித்த கர்நாடக கவர்னரின் உத்தரவுக்கும் நீதிபதிகள் தடை போட்டனர். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எந்த நியமனமும் இருக்க கூடாது. எடியூரப்பா கொள்கை ரீதியிலான எந்த முடிவும் எடுக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் - பா.ஜ.க. வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்து வருகின்றனர். முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். சிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதியது.
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பலர், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட பல பா.ஜ.க. பிரமுகர்கள் கர்நாடக தேர்தல் களத்தை கலங்கடித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சளைக்காமல் ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாநிலத்தை வலம் வந்தார். இறுதிக்கட்ட பிரசாரத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாக உரையாற்றினார்.
மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரசாரத்தில் பின்தங்கவில்லை.
இந்நிலையில், இன்று பிற்பகல் ஒருமணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பா.ஜ.க. வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதை வைத்து பார்க்கும்போது, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க. செல்லலாம் என கருதப்படுகிறது.
ஒருவேளை ஆட்சி அமைக்க தேவையான 112 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை கொண்ட தனிப்பெரும்பான்மை பா.ஜ..க.வுக்கு கிடைக்காமல் போனால்.. எதிர்க்கட்சியாகும் அளவுக்கே உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என யூகிக்கப்படும் காங்கிரஸ் கட்சி, தற்போதைய முன்னிலை நிலவரப்படி, பா.ஜ.க.வின் 86-ஐ விட, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களின் ஒட்டுமொத்த முன்னிலை இடங்கள் 118 என மனக்கணக்கு போட தொடங்கி விட்டதாக தெரிகிறது.
சித்தராமையாவுக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரி பதவியில் அமர்த்த காங்கிரஸ் முன்வந்தால் தேவேகவுடாவின் மனதை வென்று மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுடன் தனது ஆட்சியை கூட்டணி ஆட்சியாக தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
ஒருவேளை, தனக்கோ தனது மகன் குமாராசாமிக்கோ முதல் மந்திரி பதவி தந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க ஒத்துழைப்பதாக தேவேகவுடா நிபந்தனை விதித்தால் அதற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல் இந்த கூட்டல், கழித்தல் கணக்குகளுக்கு இடம் அளிக்காமல் “எந்த கை மறைத்தாலும் தாமரை மலர்வதை தடுக்க முடியாது” என பா.ஜ.க. வேறொரு கணக்கு போடக்கூடும்.
இன்று வெளியாகும் முடிவுகள் போக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் மற்றும் ஒருவேளை குமாரசாமி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்யவுள்ள ஒரு தொகுதி என இந்த மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல்கள் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு பலம் சேர்க்கும் என்பது உறுதி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்