search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "majority"

    • 266 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 அன்று நடந்தது
    • பூட்டோ, நவாஸ் பேச்சு வார்த்தையை தொடங்கினர்

    பாகிஸ்தான் பாராளுமன்றம், செனட் (Senate) எனும் மேல்சபை மற்றும் தேசிய அசெம்பிளி (National Assembly) எனும் கீழ்சபை ஆகிய இரு அவைகளை கொண்டது.

    தேசிய அசெம்பிளியில் 342 இடங்கள் உள்ளன.

    இவற்றில் 266 இடங்களுக்கான உறுப்பினர்கள் பொதுமக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    இவற்றை தவிர 70 இடங்கள் பெண்களுக்கும், மைனாரிட்டி வகுப்பினருக்கும், 6 இடங்கள் மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8 அன்று மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (Election Commission of Pakistan) இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இணையதொடர்பு தட்டுப்பாடு காரணமாக சுமார் 60 மணி நேரம் கடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இன்சாஃப் (Pakistan Tehreek-Insaaf) கட்சியை சேர்ந்தவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட 264 இடங்களில் 101 இடங்களில் வென்றுள்ளனர். இம்ரான் கான் கட்சியை சேர்ந்த பலர் சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிடிபி கட்சி, அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மைக்கு குறைவாக 32 இடங்களே பெற்றுள்ளது.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Pakistan Muslim League) கட்சி 73 இடங்களில் மட்டுமே வென்றது.

    பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (Pakistan People's Party) வேட்பாளர்கள் 54 இடங்களில் வென்றுள்ளனர்.

    வாக்கு எண்ணிக்கையில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக பரவலாக பலர் குற்றம் சாட்டினர்.

    இம்ரான் கான், அதிபராவதை தடுக்கும் முயற்சியாக நவாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோ இருவரும் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டனர்.

    வரும் நாட்களில் அதிபர் யார் என்பது உறுதியாகி விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    தேர்தலுக்கு பின் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். #mkstalin #parliamentelection #edappadipalanisamy

    சங்கரன்கோவில்:

    தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து சங்கரன்கோவிலில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தற்போது நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் தான். அதே நேரத்தில் தமிழகத்தில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தபோது சூலூர் தவிர மீதமுள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

    ஆனால் இடைத்தேர்தலை நடத்த விடாமல் அ.தி.மு.க. அரசு சூழ்ச்சி செய்தது. ஏனென்றால் தி.மு.க. அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிட்டால் தமிழகத்தில் நமது ஆட்சிக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் கருதினர். இதனால் திட்டமிட்டு மத்திய அரசின் உதவியுடன் தேர்தல் கமி‌ஷனின் ஒத்துழைப்புடன் 3 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. ஆனால் நாம் அதை விடவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தேர்தல் நடத்த உத்தரவு பெற்று உள்ளோம். தற்போது சூலூரையும் சேர்த்து 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இது நமக்கு கிடைத்த வெற்றி.

    இந்த தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி வீட்டுக்கு சென்று விடுவார். அடுத்த நொடி தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் வீட்டுக்கு சென்று விடும். ஏனென்றால், தமிழகத்தில் தற்போது நமது அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நடைபெற உள்ள 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றால் நமது எண்ணிக்கை 119 ஆக உயரும்.

    தமிழகத்தில் மொத்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 234. அதில் மெஜாரிட்டிக்கு தேவையானது 117 எம்.எல்.ஏ.க்கள் தான். நம்மிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் வந்ததும் நமது ஆட்சி அமையும். இந்த கணக்கு வந்து விடக்கூடாது என்று தான் அவர்கள் கருதுகிறார்கள். 40க்கு 40 முடிவாகும்போது 22க்கு 22ம் நாம்தான் வெற்றி பெறுகிறோம். ஆகவே நாம் தயாராக வேண்டும். ஆட்சியில் இருந்து போவதற்கு அவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

    இந்தியாவின் பிரதமராக இளம் தலைவர் ராகுல்காந்தி வர இருக்கிறார். மோடி நான் ஏழைத்தாயின் மகன் என்று தற்போது கூறி வருகிறார். ஏழைத்தாயின் மகன் பணக்காரர்களுக்கு மட்டுமே ஆட்சி நடத்தி உள்ளார். சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை என அனைத்து விலைவாசியையும் உயர்த்தி விட்டார்.


    தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் என விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக ஆட்சி நடத்தினார். ஆனால் எப்படியெல்லாம் ஆட்சி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக தற்போதைய ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் ஆட்சி தான் நடக்கிறது.

    தென்காசி தொகுதியில் ஜி.எஸ்.டி.யால் பீடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பீடி கம்பெனிகள் 1,000 பீடிகள் சுற்றுவதற்கு 800 பீடிக்கான மூலப்பொருட்களையே கொடுக்கிறது. இதனால் பீடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பீடி மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும். எனவே தி.மு.க. வேட்பாளர் தனுஷ் குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.  #mkstalin #parliamentelection #edappadipalanisamy

    அ.ம.மு.க.வில் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரிவினை கிடையாது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    வேலூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று வேலூர் மண்டி தெருவில் திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதோடு தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்துள்ளது. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். ஏனென்றால் இந்த 18 தொகுதிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால் மோடி என்ன?, அவர்களுக்கெல்லாம் டாடி வந்தால் கூட இவர்களை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்.

    துரோகிகளுடன் இணைந்து தற்போது இரட்டை இலையை தூக்கி கொண்டு வருகிறார்கள். இரட்டை இலைக்கு பின்னால் மோடி இருக்கிறார் என்று யாரும் மறந்து விடக்கூடாது. இந்த அமைச்சர்களுக்கு பின்னாலும் மோடி தான் இருக்கிறார். ஜெயலலிதாவின் கட்சி இது.


    ஆனால் இந்த படுபாவிகள் ஆட்சியையே மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். ஜெயலலிதா கட்சி தொடங்கியதில் இருந்து கடைசி காலம் வரை அனுமதிக்கபடாதவர்கள் இன்று இரட்டை இலையை தூக்கிக் கொண்டு வந்து நம்மிடம் வாக்கு கேட்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.

    மற்றொரு வேட்பாளரை அவரது தந்தை தத்து கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே பிரியாணி கடைகள், பியூட்டி பார்லர், டீ கடைகள் அடித்து நொறுக்குகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் இவர்களை ஆட்சி கட்டிலில் அனுமதிக்கவில்லை.

    தற்போது அவர்கள் ராகுலுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஒருவேளை நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள் என்றால் அடுத்த நிமிடமே அவர்கள் மோடியின் பக்கம் சென்று விடுவார்கள்.

    ஏனென்றால் அவர்களின் வரலாறு அப்படி. கட்சி மாறுபவர்கள் அவர்கள். ஆட்சி அதிகாரத்துக்காக என்ன வேண்டும் என்றாலும் கூறுவார்கள். தமிழை வைத்து பிழைப்பு நடத்துவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வாய் மூடி நின்றவர்கள் அவர்கள்.

    வேலூர் மக்கள் அரசியல் அறிவு கொண்டவர்கள். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது. பாலாறு, காவிரி, மீத்தேன், நீட் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்துக்குள் வர அவர்கள் கதவை திறந்து விடுவார்கள்.

    தத்து கொடுத்து விட்டார்கள் என நினைத்து நீங்கள் ஏமாந்து வாக்களித்தால் உங்களது சொத்துகள் அனைத்தும் பறிக்கப்படும். அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் நாடு சுருட்டப்படும். தமிழகத்தை விற்று விடுவார்கள். தமிழகத்தில் மக்கள் ஆட்சி மலர எங்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    சின்னம் கிடைப்பதற்காக நாங்கள் துரோகிகளிடம் போராடி நீதிமன்றம் சென்று சின்னம் பெற்றுள்ளோம். கூட்டணி கட்சியினரும் நம்முடைய வெற்றி சின்னமான பரிசு பெட்டகம் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்கள். நம்மிடம் பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பிரிவினை கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran

    மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. #pmmodi #majority
    புதுடெல்லி:

    இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்லி ஹன்ட்’ மற்றும் நீல்சென் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு தொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் சுமார் 54 லட்சம் மக்களிடம் ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது.

    தற்போது  வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு ஆட்சி தொடர்பாக 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என இவர்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த கருத்துக் கணிப்பை பொய் தகவல் என்றும் வீண்வேலை எனவும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. #pmmodi #majority
    மாலி அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் யாரும் 50 சதவீதம் வாக்குகள் பெறாததால் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita
    பமாக்கோ:

    தங்கம் மற்றும் பருத்தி உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதல்முறையாக மிக மந்தமான வாக்குகளே பதிவாகின.

    தேர்தல் வன்முறை சம்பவங்களால் சுமார் 5 சதவீதம் வாக்குச்சாவடிகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் 644 வாக்குச்சாவடிகளை (சுமார் 3 சதவீதம்) பயங்கராவாதிகள் கைப்பற்றி கொண்டதால் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் வெறும் 43 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.


    பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா 41.4 சதவீதமும் அவரை எதிர்த்து களமிறங்கிய சவுமைலா சிஸ்ஸி 17.8 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதிபராவதற்கு பெற வேண்டிய அதிகபட்ச அளவான 50 சதவீதம் வாக்குகளை இருவரும் பெறாததால் விரைவில் இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita
    தமிழக சட்டசபையில் எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். #admkgovernment #mkstalin

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசலில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமையை பெற்றதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெரும் பங்கு உள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு சரியான வாதத்தை முன்வைத்ததன் மூலமாக காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைத்துள்ளது. மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் 80 அடி நீர் இருந்தால் மட்டுமே அணையை திறக்க முடியும் என்பது வழக்கம். இருப்பினும் குருவை சாகுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினையை உணர்வு பூர்வமாக அணுகவில்லை. அரசியலாகவே பார்க்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி பிரச்சினையை காரணம் காட்டி தான் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால் அ.தி.மு.க. அரசு பெரும்பான் மையை நிரூபிக்க எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது.


    கடந்த தி.மு.க. ஆட்சி தான் மைனாரிட்டி ஆட்சி. தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி மெஜாரிட்டியுடன் தான் செயல்படுகிறது. எந்த நேரத்திலும் அ.தி.மு.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் காம ராஜ் கூறினார். #admkgovernment #mkstalin

    தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் 6 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பாரதிய ஜனதாவின் வியூகம் கர்நாடக மாநிலத்தில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. #KarnatakaElection2018 #BJP
    பெங்களூர்:

    தேசிய அளவில் காங்கிரசை வீழ்த்தி பா.ஜனதா செல்வாக்கு பெற்று வருகிறது. மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி வருகிறது.

    காங்கிரசுக்கு கர்நாடக மாநிலம் மட்டுமே பெரிய மாநிலமாக இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது.

    கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. அந்த வகையில் முதலில் பா.ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உடனடியாக ஆட்சி அமைக்க உரிமை கோராமல் 2 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறார்.

    எதிர் முகாமில் இருந்து அதிருப்தியாளர்கள் தங்கள் பக்கம் வருவார்கள் அல்லது அவர்களை இழுக்கலாம் என்பதற்காக பா.ஜனதா அவகாசம் கேட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கு முந்தைய தேர்தல்களில் பா.ஜனதா நடந்துகொண்ட விதமே இந்த சந்தேகத்துக்கு காரணம்.

    1996 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் 161 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனார். 13 நாட்களில் அவரது ஆட்சி கவிழ்ந்தது.

    2008-ம் ஆண்டு ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 96 தொகுதிகளையும், பா.ஜனதா 78 தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில் முதலிடம் பிடித்த காங்கிரசை ஆட்சி அமைக்க விடாமல் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா, பகுஜன் சமாஜ் மற்றும் 9 சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

    2013-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 32 இடங்களில் வெற்றிபெற்றது. ஆம் ஆத்மி 28 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. 49 நாட்களில் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

    2014-ல் மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 122 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. சிவசேனா ஆதரவை வற்புறுத்தி பெற்று பா.ஜனதா ஆட்சி அமைத்தது.

    கடந்த ஆண்டு (2017) கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜனதா 13 இடங்களிலும் வெற்றிபெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுக்காக காத்து இருந்தபோது திடீர் என்று 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவை பெற்று ஆட்சியில் அமர்ந்தது.


    இதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 28 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. அப்போது 21 எம்.எல்.ஏ.க்களுடன் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா சிறிய கட்சிகள் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது.

    கோவா, மணிப்பூரில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தில் இருந்தும் 2-வது இடத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சி அமைத்தது. இது காங்கிரஸ் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த ஆண்டு மேகாலயாவில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

    19 இடங்களுடன் 2-வது இடத்தில் இருந்த தேசிய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற பா.ஜனதா சிறிய கட்சிகளை சேர்த்துக் கொண்டு ஆதரவு அளித்து ஆட்சி அமைக்க வழிவகுத்தது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி அமையவிடாமல் பா.ஜனதா தடுத்துவிட்டது.

    எனவே கர்நாடகத்திலும் பா.ஜனதா குறுக்கு வழியில் செல்லுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #KarnatakaElection2018 #BJP
    ×