search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாலி அதிபர் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு
    X

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மாலி அதிபர் தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு

    மாலி அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் யாரும் 50 சதவீதம் வாக்குகள் பெறாததால் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita
    பமாக்கோ:

    தங்கம் மற்றும் பருத்தி உற்பத்தியில் சிறப்பிடம் வகிக்கும் மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதல்முறையாக மிக மந்தமான வாக்குகளே பதிவாகின.

    தேர்தல் வன்முறை சம்பவங்களால் சுமார் 5 சதவீதம் வாக்குச்சாவடிகள் இழுத்து மூடப்பட்டன. மேலும் நாட்டின் பல பகுதிகளில் 644 வாக்குச்சாவடிகளை (சுமார் 3 சதவீதம்) பயங்கராவாதிகள் கைப்பற்றி கொண்டதால் ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் வெறும் 43 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகி இருந்தன.


    பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்ட்டா 41.4 சதவீதமும் அவரை எதிர்த்து களமிறங்கிய சவுமைலா சிஸ்ஸி 17.8 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதிபராவதற்கு பெற வேண்டிய அதிகபட்ச அளவான 50 சதவீதம் வாக்குகளை இருவரும் பெறாததால் விரைவில் இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. #Malielectionrunoff #Malielection # IbrahimBoubacarKeita
    Next Story
    ×