search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election report"

    • கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதே வேளையில் இந்தியா கூட்டணியில் புதுவை பாராளுமன்ற தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

    கடந்த காலங்களில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரசே போட்டியிட்டது.

    கடந்த தேர்தலிலும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தம் உள்ள 30 தொகுதியில் காங்கிரஸ் 2 தொகுதியிலும், தி.மு.க. 6 தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    இதனால் தங்கள் கட்சிக்கே பலம் உள்ளதாக கூறி வருகிற பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி கூறி வருகிறது.


    அதே வேளையில் சிட்டிங் எம்.பி. என்ற பெயரில் காங்கிரசே போட்டியிடும் என்று அக்கட்சி தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:-

    புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு அப்போதைய கவர்னர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை.

    தற்போது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்களுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. புதுச்சேரியில் கமிஷன் அரசு நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. போட்டியிடுவார். அவரின் பெயரை கட்சி தலைமைக்கு பரிந்துரைத்துள்ளோம். அவரை அபார வெற்றி பெற செய்ய வேண்டும்' என்றார்.

    • எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.
    • பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்று கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டுமானத் தொழிலில் உள்ள சிக்கல்களை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நிலங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியது போன்று, வீடுகளுக்கு தெரு அடிப்படையில் மதிப்பு நிர்ணயிக்க முடிவெடுத்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதுவும் மக்கள் மீது கூடுதல் சுமையை திணிப்பதற்கான நடவடிக்கையே தவிர வேறொன்றும் இல்லை. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்கெனவே வழிகாட்டி மதிப்பீடு மற்றும் பதிவுக் கட்டணங்களின் பல வகைகள், பல ரூபங்களில் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், மீண்டும் அதனை உயர்த்துவது என்பது கட்டுமானத் தொழிலை சீர்குலைப்பதோடு, ஏழையெளிய மக்களின் வீடு வாங்கும் கனவையும் சிதைத்துவிடும். தற்போதுள்ள சூழ்நிலையில், எந்தக் கட்டண உயர்வையும் தாங்கிக் கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை. பத்திரப் பதிவுத் துறையில் தற்போதுள்ள நடைமுறை தொடர வேண்டுமென்றும், எந்தவிதமான கட்டண உயர்வையும் அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும் முதலமைச்சரை தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.
    • விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடாமல் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சி தொகுதியில் உள்ள நிபுணர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை சேகரித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

    இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    யுகாதி, விநாயக சதுர்த்தி மற்றும் தீபாவளி மாதங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

    கர்நாடக காவல்துறையில் மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

    போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். ஏழைகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்கப்படும்.

    உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

    விதவை பெண்களுக்கான ஓய்வூதியம் தற்போதைய ரூ.800ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.

    திருப்பதி, அயோத்தி, காசி மற்றும் பிற இடங்களுக்கு புனித யாத்திரை செல்ல ஏழைக் குடும்பங்களுக்கு ஒருமுறை 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    மாநிலம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும்.

    ஆயுஷமான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை தற்போதுள்ள ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

    அனைத்து தாலுகாக்களிலும் கீமோதெரபி மற்றும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் மலிவு மற்றும் தரமான உணவை வழங்க ஒவ்வொரு மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அடல் ஆஹாரா கேந்திரா அமைக்கபப்டும். 'சர்வாரிகு சுரு யோஜனே' திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்,.

    கர்நாடக அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டம், 1972-ஐ சீர்திருத்தவும், குறை தீர்க்கும் வழிமுறையை நவீனப்படுத்தவும் கர்நாடக குடியிருப்போர் நல ஆலோசனைக் குழுவை அமைக்கும்.

    மூத்த குடிமக்களுக்கு இலவச வருடாந்திர முதன்மை சுகாதார பரிசோதனை நடத்தப்படும். பெங்களூருவை 'மாநில தலைநகர் மண்டலமாக' நியமித்து, விரிவான, தொழில்நுட்பம் சார்ந்த நகர மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

    மேற்கண்டவை உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறுகையில், இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், மேலும் மாநிலத்தில் ஆட்சியமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.

    காங்கிரஸ் கட்சி இலவசம் என்ற பெயரில் அளித்த வாக்குறுதிகளை விமர்சித்த பா.ஜ.க. தற்போது வாக்காளர்களை கவர பல திட்டங்களை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

    • தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
    • தேர்தல் அறிக்கையில் கொடுத்த எதையுமே நிறைவேற்றவில்லை.

    மதுரை

    மத்திய பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக மக்களை தி.மு.க. அரசு தொடர்ந்து ஏமாற்று வதற்கு முயற்சி செய்து கொண்டே வருகிறது. அவர்கள் தேர்தல் அறிக்கை யில் கொடுத்த எதையுமே நிறைவேற்றவில்லை. குறிப்பாக குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக நிதியமைச்சர் விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்து வருகிறார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டு பலாத்காரம் அதிகம் நடந்து வருகிறது.

    என் மீது இதுவரை தி.மு.க. அரசும், அமைச்சர்களும் ரூ. 620 கோடிக்கு மானநஷ்டஈடு வழக்கு போட்டு உள்ளனர். எந்த மிரட்டலுக்கும் பா.ஜ.க. பயப்படாது.தி.மு.க.வின் ஊழலை தொடர்ந்து தட்டிக் கேட்போம். ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. குரல் கொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

    தமிழகத்தில் திராவிட மாடல் என்ற பெயரில் சினிமா மாடல் ஆட்சிதான் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தொடர்பாக மதுரை ஆதீனம் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை. ஆதீனத்தை மிரட்டி அடிபணிய வைத்து விடலாம் என தி.மு.க. அரசு நினைக்கிறது. அவரை தொட்டால் பா.ஜ.க. தட்டிக்கேட்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மத்திய இணை மந்திரி முரளிதரன் பேசுகையில், தமிழக மக்கள் பிரதமர் மோடியின் இதயத்தில் இடம் பிடித்துள்ளனர். அதனால் அவர் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலகிற்கு முன்மாதிரியாக மோடி அரசு திகழ்ந்தது என்றார்.

    இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், அன்னை பாத்திமா கல்வி நிறுவன ங்களின் குழுமத் தலைவர் எம்.எஸ். ஷா, கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கே. ஜெய வேல், மாநில கூட்டுறவு பிரிவு தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான மாணிக்கம், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் வினோத்குமார், இளங்கோ மணி, கோகுல் அஜித், மனோகரன், பழனிவேல், வடமலையான், மதுரை புறநகர் கூட்டுறவு பிரிவு தலைவர் உங்குசாமி, மதுரை நகர் கூட்டுறவு பிரிவு தலைவர் ஆர்.வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Congress #PChidambaram
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    இதற்காக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், குலாம்நபி ஆசாத், ஜெயராம் ரமேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    தேர்தல் அறிக்கையில் எத்தகைய அம்சங்களை இடம் பெற செய்வது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக ப.சிதம்பரம் மாநில தலைவர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

    இது தவிர தேர்தல் அறிக்கை பொதுமக்களை மிக அதிக அளவில் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். இதற்காக பல்வேறு தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடமும் இது தொடர்பாக யோசனை பெறுவதற்கு ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் வகையில் புதிய கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை எளிதாக அனுப்புவதற்கு வசதியாக காங்கிரஸ் சார்பில் வாட்ஸ்அப் வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் 72920 88245 என்ற எண் மூலம் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். #Congress #PChidambaram 
    ×