search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபில் தேவ்"

    • நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


    லால் சலாம்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.


    ரஜினிகாந்த் -கபில்தேவ்

    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதன்படி, இப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், "முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதர் கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    • ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்திலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார்.
    • ரஜினியுடன் கபில்தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    • ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
    • இந்திய அணியில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.

    விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்றார் ரோகித் சர்மா. கேப்டனான பிறகு ஹிட்மேன் என்ற தனது பெயருக்கேற்றார் போல் அதிரடியாக ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறிய அவர் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக அடிக்கடி ஓய்வெடுத்ததால் 2022-ம் ஆண்டு வரலாற்றிலேயே 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய பரிதாபம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

    இதனையடுத்து ரோகித் சர்மா, ராகுல் போன்ற வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. மேலும் கடைசி வாய்ப்பாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி விளையாடும் என்றும் நம்பப்படுகிறது.

    இருப்பினும் ரோகித் சர்மா 35 வயதை கடந்து விட்டதால் 2023 உலகக் கோப்பை வென்றாலும் இல்லையென்றாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அத்தொடருக்கு பின் ஹர்திக் பாண்டியா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது.

    இந்நிலையில் இளம் வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதில் தவறில்லை ஆனால் ஒரு சில தோல்விகளுக்காக அவரை அவசரப்பட்டு கேப்டன் பதவியிலிருந்து நீக்க கூடாது என்று பிசிசிஐக்கு முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

    முதலில் கேப்டன் பொறுப்பு வழங்கும் நீங்கள் உலகம் என்ன சொல்லும் என்பதை பார்க்காமல் அணியை பார்த்து அவர் எப்படி சிந்திக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா அங்கே கேப்டனாக இருந்தால் நீங்கள் ஒரு தொடரில் தோற்றால் உங்களை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவோம் என்று யாரும் அவரிடம் சொல்ல கூடாது.

    ஏனெனில் நீங்கள் ஒருவரை கேப்டனாக நியமித்தால் முதலில் அவரை நம்பி நியாயமான நீண்ட கால வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் அவரால் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியும். பாண்டியா உட்பட யாராக இருந்தாலும் தவறுகள் செய்வார்கள். ஆனால் அதற்காக அந்த தவறை பார்க்காமல் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் எந்தளவுக்கு அணியை எடுத்து செல்கிறார் என்பதை பார்க்க வேண்டும். .

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார்.
    • சூரியகுமார் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என்றார் கபில்தேவ்.

    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 7 பவுண்டரி, 9 சிக்சருடன் 112 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்தார்.

    இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனாக வலம் வரும் அவருக்கு, இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக கபில்தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    சூர்யகுமார் யாதவின் இன்னிங்சை விவரிக்க சில சமயம் வார்த்தைகளே கிடைக்காது. சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் விளையாடுவதை பார்க்கும்போது, இவர்களை போன்ற ஒரு ஆட்டக்காரர் எப்போதாவது வருவார் என்று நாம் நினைப்போம். அந்த வரிசையில் இப்போது சூர்யகுமார் யாதவ் இணைந்து விட்டார் என்று நினைக்கிறேன்.

    சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் விளையாடும் விதம் அற்புதம். குறிப்பாக 'பைன் லெக்' திசைக்கு மேல் அடிக்கும் சிக்சர்கள் பந்து வீச்சாளர்களை பயமுறுத்துகிறது. அவரால் நின்ற இடத்திலேயே 'மிட் ஆன்' மற்றும் 'மிட் விக்கெட்' திசையிலும் சிக்சர்கள் விரட்ட முடிகிறது. பந்து வீச்சாளர்கள் சரியான அளவில் பந்தை பிட்ச் செய்து வீசினாலும் அதையும் தெறிக்க விடுகிறார். அதனால் அவருக்கு எதிராக பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது கடினம்.

    எனது வாழ்நாளில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், டிவில்லியர்ஸ், விராட் கோலி உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் ஒரு சிலரே சூர்யகுமார் போன்று பந்தை துல்லியமாக நொறுக்குகிறார்கள். அவருக்கு பாராட்டுகள். அவரை போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள் என தெரிவித்தார்.

    • 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது.
    • இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2011ம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் உலக கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:-

    2023 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2-3 வீரர்களை, தனிப்பட்ட வீரர்களை நம்பிப் பயனில்லை உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட நலன்கள் புறந்தள்ளப்பட வேண்டும். அவர்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2-3 வீரர்கள் உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நீங்கள் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். நம்மிடம் அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதற்குக் கண்டிப்பாக எங்களிடம் குறிப்பிட்ட மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்களா? ஆமாம் கண்டிப்பாக! உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர் என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு தன்னம்பிக்கையுடன் ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டும். எப்போதும் 2-3 வீரர்கள் அணியின் தூண்களாகத் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களைச் சுற்றியே அனைத்தும் பின்னப்படுகிறது, தேர்வு செய்யப்படுகிறது, இப்படி இருக்கக் கூடாது. ஆனால், நாம் இந்தப் போக்கை உடைத்து குறைந்தது 5-6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும்.

    அதனால்தான் சொல்கிறேன், விராட் மற்றும் ரோகித்தை நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து 'இது எங்கள் நேரம்' என்று சொல்ல வேண்டும்.

    இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

    • இந்த வயதில் காரில் வேகமாக செல்ல வேண்டுமென்று தோன்றுவது இயற்கை தான்
    • என்னை கேட்டால் நீங்கள் ஒரு டிரைவரை எளிதாக வாங்கியிருக்கலாம்.

    இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதியன்று கார் விபத்துக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

    துரதிஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். அனைவரது பிரார்த்தனைக்கேற்ப எலும்பு முறிவுகளை சந்திக்காமல் ஆபத்து கட்டத்தை தாண்டிய ரிஷ்ப் பண்ட் தொடர்ந்து டேராடூனில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இருப்பினும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்துள்ள அவர் முழுமையாக குணமடைந்து வருவதற்கு குறைந்தது 6 மாதங்கள் அல்லது ஒரு வருடங்கள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

    இந்நிலையில் இந்த வயதில் காரில் வேகமாக செல்ல வேண்டுமென்று தோன்றுவது இயற்கை தான் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் கபில் தேவ் அவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கிய ரிசப் பண்ட் ஒரு ஓட்டுனரையும் நியமித்திருக்க வேண்டும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-

    உங்களிடம் பார்ப்பதற்கு சிறப்பாகவும் வேகத்தில் அதிரடியாகவும் செல்லும் கார் உள்ளது. ஆனால் அதில் நீங்கள் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். என்னை கேட்டால் நீங்கள் ஒரு டிரைவரை எளிதாக வாங்கியிருக்கலாம். அதனால் நீங்கள் தனியாக ஓட்டியிருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. மேலும் ஒருவருக்கு கார் ஓட்டுவது ஒரு பொழுதுபோக்கு அல்லது ஆர்வம் கொண்ட எண்ணமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். குறிப்பாக அவருடைய வயதில் அது இருப்பது இயற்கையானது.

    ஆனால் உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களை உங்களால் மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும். அதற்கு தேவையான விஷயங்களை நீங்க தான் தீர்மானிக்க வேண்டும். இதுவும் அவருக்கு ஒரு பாடமாகும்.

    சொல்லப்போனால் நானும் இளம் வயதில் கிரிக்கெட் வீரராக வருவதற்கு முன்பு இதே போல மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்துள்ளேன். அப்போதிலிருந்து என்னுடைய சகோதரர் என்னை மோட்டார் பைக்கை தொட விடமாட்டார். எனவே ரிசப் பண்ட் காப்பாற்றப்பட்டதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீங்கள் பயந்தால் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை.
    • நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும்.

    இந்திய அணியின் முன்னணி வீரர்களை கபில்தேவ் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். தற்போது போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பி.சி.சி.ஐ ஓய்வு வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் முன்னணி வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவின் உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கபில் தேவ் பேசியது பின்வருமாறு:-

    நான் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறோம் எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது என்ற வார்த்தை தற்போது உள்ள வீரர்கள் இடையே மிகவும் சர்வசாதாரணமாக மாறிவிட்டது. நான் அவர்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அப்போது எதற்கு இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள். உங்களை யார் விளையாட சொல்கிறார்கள்.

    இவ்வளவு அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர் உங்களை திட்டுவார்கள். இந்த திட்டுவதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் இந்தியாவுக்காக விளையாடவே தேவையில்லை. நீங்கள் உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது உங்களுக்கு எப்படி நெருக்கடி ஏற்படும். அது எப்படி சாத்தியமாகும்? 100 கோடி மக்கள் இருந்து வெறும் 20 பேர் தான் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

    இதை பெருமை என்று சொல்லுங்கள் இதனை நீங்கள் எப்படி நெருக்கடி ,அழுத்தம் என்று சொல்வீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

    நீங்கள் மக்களிடமிருந்து அவ்வளவு அன்பை பெறுகிறீர்கள். இனி அழுத்தம் என்ற வார்த்தையை விட்டுவிட்டு பெருமை கொள்கிறேன் என்ற வார்த்தையை பயன்படுத்துங்கள். அழுத்தம் என்பது அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் வார்த்தை.

    உங்களால் விளையாட முடியவில்லை என்றால், பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் செய்யாதீர்கள். உங்களை யார் செய்து ஆக வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது. எங்கேயாவது சென்று மளிகை கடை திறவுங்கள். அங்கு வாழைப்பழம் முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.

    என்று கபில்தேவ் விமர்சித்துள்ளார்.

    • விராட் கோலி போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம்.
    • விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் கிரிக்கெட் தொடர்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்களை எடுக்காததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த பல வருடங்களாக 3 வகையான அணியிலும் ரன் மெஷினாக ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் அடித்து பல வெற்றிகளை குவித்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று தன்னை நிரூபித்த அவர் கடைசியாக கடந்து 2019-ல் சதமடித்திருந்தார்.

    அதன்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 3 வருடங்களுக்கும் மேலாக 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் ஆனார்.

    எத்தனை நாட்கள் பெரிய அளவில் ரன்களை எடுக்காமல் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பை கொடுக்க விடாமல் காலத்தை தள்ளுவீர்கள் என்று கடுமையாக விமர்சித்த கபில்தேவ் டெஸ்ட் அணியில் அஷ்வின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் டி20 அணியில் விராட் கோலியை நீக்குவதில் எந்த தவறுமில்லை என்று கூறியிருந்தார்.

    இந்த நிலைமையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலி ஓய்வெடுப்பது எந்த வகையிலும் ஃபார்முக்கு திரும்புவதற்கு உதவாது என்று தெரிவித்துள்ள கபில் தேவ் நீக்கப்பட வேண்டியவரை ஓய்வு என்ற பெயரில் அணியிலிருந்து தேர்வு குழுவினர் விடுவிப்பதில் எந்த தவறுமில்லை என்று கூறியுள்ளார்.

    விராட் கோலி குறித்து கபில் தேவ் கூறியதாவது:-

    விராட் கோலி போன்ற பெரிய வீரரை நீக்குங்கள் என்று நான் சொல்ல முடியாது. அவர் மிகப்பெரிய வீரர். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் ஓய்வு கொடுக்கப்பட்டதாக நீங்கள் கூறியிருந்தால் அதில் எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும் அவரைப்போன்ற வீரரை எப்படி பார்முக்கு திரும்ப வைக்க முடியும் என்பது முக்கியமான கேள்வியாகும்.

    தனித்துவம் நிறைந்த வீரரான அவர் நிறைய பயிற்சிகளை எடுத்து அதிக போட்டிகளில் விளையாடினால் தான் பார்முக்கு திரும்ப முடியும். டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை விட பெரிய வீரர் இருக்க முடியாது என்று நான் கருதுகிறேன். ஆனால் நீங்கள் சரியாக செயல்படவில்லையெனில் தேர்வுக் குழுவினர் அவர்களின் முடிவை எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படாத யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் அல்லது நீக்கலாம் என்று தெரிவித்தார்.

    விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற அக்கறையிலேயே இந்த விமர்சனங்களை தெரிவிப்பதாக கபில் தேவ் கூறினார்.

    அவரைப் போன்ற தரமான வீரர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரை நீக்கினாலும் ஓய்வு கொடுத்தாலும் அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.

    அதற்காக ரஞ்சி கோப்பை அல்லது வேறு ஏதேனும் தொடர்களில் பெரிய அளவில் ரன்களைக் குவித்தால் அது அவரின் தன்னம்பிக்கையை மீண்டும் கொண்டுவரும். மேலும் சிறந்த வீரருக்கும் மிகச்சிறந்த வீரருக்கும் அதுதான் வித்தியாசமாகும். மிகச்சிறந்த வீரர்கள் பார்முக்கு திரும்ப இத்தனை நேரங்களை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த வகையில் அவர் ஃபார்முக்கு திரும்ப இவ்வளவு நாட்கள் எடுத்துகொள்வது கவனிக்க வேண்டியுள்ளது.

    விராட் கோலி ஓய்வெடுத்தாலும் நீக்கப்பட்டாலும் எனக்கு பிரச்சினை கிடையாது. அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது ஆசையாகும். அவரைப் போன்ற நல்ல வீரர் ஃபார்முக்கு திரும்ப ஒரு சிறந்த இன்னிங்ஸ் போதுமானது. இருப்பினும் அது எப்போது வரும் என்று நமக்கு தெரியவில்லை. அதற்காக நாம் 2 வருடங்களாக காத்திருக்கிறோம் என்று ஆதரவு கலந்த விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    • விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
    • ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் பார்ம் இன்றி இருப்பதால் கடும் விமர் சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.

    இதுதொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது, 'பல ஆண்டுகளாக கோலி பேட்டிங் செய்ததை போல் தற்போது செயல்படவில்லை. 20 ஓவர் போட்டியில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    உலகின் நம்பர் 2 பந்து வீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும் போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியையும் நீக்கலாம்' என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் விராட் கோலி குறித்து கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கபில்தேவ் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.

    இதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    அவர் (கபில்தேவ்) வெளியில் இருந்து விளையாட்டை பார்க்கிறார். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது. நாங்கள் எங்கள் அணியை உருவாக்குகிறோம். இதற்கு பின்னால் நிறைய சிந்தனை இருக்கிறது.

    நாங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவை வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயங்கள். எனவே வெளியில் நடப்பது முக்கியமல்ல. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற-தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது.

    விராட் கோலி

    விராட் கோலி

    ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும். இது அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால ஆட்டத்தை பார்க்கக்கூடாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.

    விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.
    • விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இடம் பெறாத கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த போட்டிக்கு திரும்பியுள்ளனர். இந்த போட்டிக்கு ஆடும் லெவன் எடுப்பதில் கடும் போட்டி நிலவும். விராட் கோலி, பும்ரா கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார்கள். இதனால் டாப் ஆர்டரிலும் பந்து வீச்சாளர் பக்கமும் மாற்றம் இருக்கலாம்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வினை நீக்கும் போது டி20 போட்டியில் இருந்து விராட் கோலியையும் நீக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கபில்தேவ் கூறியதாவது:-

    தற்போது உள்ள சூழ்நிலையில் விராட் கோலி டி20 ஆடும் லெவனில் விளையாடுவதை விட பெஞ்சில்தான் அமர வேண்டும். 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் உலக தரவரிசையில் 2-ம் இடத்தில் இருக்கிறார். அவரை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும் என்றால் விராட் கோலியையும் டி20 அணியில் எடுக்காமல் உட்கார வைக்க முடியும்.

    விராட் கோலி பார்மில் இல்லை. அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் அவரை உட்கார வைக்கக் கூடாது, ஆனால் பார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக்கூடாது.

    நான் அணியில் ஆரோக்கியமான போட்டியை விரும்புகிறேன். இந்த இளம் வீரர்கள் விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு விராட் கோலி ஓய்வளிக்கப்பட்டார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றே விவரம் அறிந்த வேறு சிலர் கருதுவார்கள். ஒரு பெரிய வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர் சரியாக ஆடவில்லை என்பதே காரணமாக இருக்கும்.

    இவ்வாறு கபில் தேவ் காட்டமாக பேசியுள்ளார்.

    விராட் கோலி 2019-ம் ஆண்டு முதல் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது இந்தியா.

    இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது. இதில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்-ன் 40 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் கபில் தேவ்வை பின்னுக்கு தள்ளி பும்ரா முன்னேறி உள்ளார். 1981-1982-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அந்த சாதனை தற்போது பும்ரா (23 விக்கெட்டுகள்) முறியத்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    மேலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா (SENA) ஆகிய நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 6-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். இந்திய வீரர்களில் அனில் கும்ளே (141), இஷாந்த் சர்மா (130), ஜாகீர் கான் (119), முகமது சமி (119) கபில் தே (119) ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 11-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

    ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இதற்கான பணியில் தீயாய் வேலை செய்து வருகின்றன. சீனா, துருக்கி நாட்டு தலைவர்கள் வருகை தருவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

    அதேபோல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், வராமல் புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் நடந்து வருகிறது.



    கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

    அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது. திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது.
    ×