என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
கோலியை நீக்க வேண்டும்: கபில்தேவ் கருத்துக்கு ரோகித்சர்மா பதிலடி
- விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
- ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும்.
மும்பை:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சமீப காலமாக ரன் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். அவர் பார்ம் இன்றி இருப்பதால் கடும் விமர் சனத்துக்குள்ளாகி இருக்கிறார்.
இதுதொடர்பாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறும்போது, 'பல ஆண்டுகளாக கோலி பேட்டிங் செய்ததை போல் தற்போது செயல்படவில்லை. 20 ஓவர் போட்டியில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
உலகின் நம்பர் 2 பந்து வீச்சாளரான அஸ்வினை டெஸ்ட் அணியில் நீக்கும் போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியையும் நீக்கலாம்' என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து கபில்தேவ் தெரிவித்த கருத்துக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு ரோகித்சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கபில்தேவ் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
அவர் (கபில்தேவ்) வெளியில் இருந்து விளையாட்டை பார்க்கிறார். அணிக்குள் என்ன நடக்கிறது என்பது அவருக்கு தெரியாது. நாங்கள் எங்கள் அணியை உருவாக்குகிறோம். இதற்கு பின்னால் நிறைய சிந்தனை இருக்கிறது.
நாங்கள் வீரர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். இவை வெளியில் இருந்து நீங்கள் அறியாத விஷயங்கள். எனவே வெளியில் நடப்பது முக்கியமல்ல. உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பார்மை பற்றி பேசினால், எல்லோரும் ஏற்ற-தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் வீரரின் தரம் பாதிக்கப்படாது.
ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் போது ஒன்று அல்லது இரண்டு மோசமான தொடர்கள் அமையும். இது அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால ஆட்டத்தை பார்க்கக்கூடாது. அணியில் அந்த வீரரின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்.
விமர்சனம் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அது எங்களுக்கு அதிகம் முக்கியத்துவமல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்