search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் ஏலம்"

    • ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார்.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்தியாவின் ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இவர் தான் நடப்பு சீசனில் அதிகம் ஏலத்துக்கு எடுக்கப்பட்ட இந்திய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அவரை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • நியூசிலாந்தின் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.
    • பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    ஏற்கனவே, சென்னை அணி ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மிகவும் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    • ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    • ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    இங்கிலாந்தின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே மிகவும் அதிகமாகும்.

    • ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    • நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

    இதேபோல், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    • ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
    • 10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள்.

    10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    • டிராவிஸ் ஹெட், ரவீந்திர சச்சின் ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.
    • மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோரும் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள் என கணிப்பு.

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச்- மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தான் ஐ.பி.எல். தேதி முடிவு செய்வது என்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கருதியுள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு காரணமாக ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள். இதில் 30 இடம் வெளிநாட்டு வீரர்களுக்கானது. 10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை போவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ஆர். அஸ்வின் வீரர்கள் ஏலம் தொடர்பான தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீரர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் ரூ.14 கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த சீசனில் அவரை விடுவித்துள்ளது. அவர் ரூ.10 முதல் 14 கோடிக்கு விலை போகலாம் என்று அஸ்வின் கணித்துள்ளார்.

    ஹர்ஷல் படேல் ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், சச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும், கோயட்சே (தென்ஆப்பிரிக்கா) ரூ.7 முதல் ரூ.10 கோடிக்கும், போவெல் (வெஸ்ட் இண்டீஸ்) ரூ.4 முதல் ரூ.7 கோடிக்கும் விலை போகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த டிரெவிஸ் ஹெட் ரூ.4 கோடி வரைதான் ஏலம் போவார் என்று கணித்துள்ளர். உமேஷ் யாதவுக்கு ரூ.4 முதல் ரூ.7 கோடி வரை கணித்துள்ளார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
    • இன்று நடைபெறும் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரிஷப் பண்ட். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். இதனால் கடந்த ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

    தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கிறார். தற்போது காயத்தில் இருந்து ஏறக்குறைய குணம் அடைந்துவிட்டார். இதனால் வருகிற ஐ.பி.எல். தொடரில் விளையாடுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்று மதியம் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தில் ரிஷப் பண்ட் கலந்து கொள்ள இருக்கிறார்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் ரிஷப் பண்ட்-யிடம் உடல் தகுதி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள இருப்பது புதிய அனுபவம். மேலும் உற்சாகமாக உள்ளது. இதற்கு முன்னதாக ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன்னதாக நான் செய்து கொண்டிருந்ததை விட (கிரிக்கெட் பயிற்சி) தற்போது சிறந்த வகையில் செய்து கொண்டிருக்கிறேன். 100 சதவீதத்திற்கு இன்னும் உடற்தகுதி பெற வேண்டியுள்ளது. ஆனால் இன்றும் சில மாதங்கள் உள்ளது. அதற்குள் நான் முழு உடற்தகுதியை எட்டி விடுவேன்" என்றார்.

    • 333 வீரர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 77 வீரர்கள் எடுக்கப்பட இருக்கிறார்கள்.
    • ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் தொடராக பிசிசிஐ-யின் ஐபிஎல் தொடர் பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

    2024 சீசனில் விளையாட தேவையான வீரர்களை எடுப்பதற்கான ஏலம் நாளை துபாயில் நடைபெற உள்ளது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப வீரர்களை ஏலம் எடுப்பார்கள்.

    ஏலம் விடும் நபர் (தொகுப்பாளர்) இதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். தன்னுடைய அசாத்திய திறமையால் வீரர்களின் ஏலத்தை சில சமயம் அதிகரிக்கக் கூட செய்வர். கடந்த அண்டு ஹக் எட்மேட்ஸ் ஏலத்தை தொகுத்து வழங்கினார்.

    ஆனால் இந்த முறை மல்லிகா சாகர் தொகுத்து வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான பிரிமீயர் லீக் ஏலத்தையும் இவர்தான் தொகுத்து வழங்கினார். ப்ரோ கபடி லீக்கிற்கான ஏலத்தையும் இவர்தான் தொகுதி வஙழகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏலத்தில் 333 பேர் வீரர்கள் பெயர் இடம் பிடித்துள்ளது. இதில் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் நியூசிலாந்தின் ரச்சின் ஜடேஜா ஆகியோர் முக்கியமான வெளிநாட்டு வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

    • இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
    • இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    மும்பை:

    இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்பித்தன.

    இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கேதர் ஜாதவ் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தங்களது அடிப்படை விலையை ரூ. 2 கோடியாக நிர்ணயம் செய்துள்ளனர். கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும். இதேபோல ஹர்சல் படேல் 92 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • ஐ.பி.எல். 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • வருகிற 26-ந்தேதிக்குள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் தெரிவிக்க வேண்டும்.

    போட்டியில் வெற்றி அல்லது தோல்வி என்பது இயல்பே. அதையெல்லாம் கடந்து செல்வதுதான் விளையாட்டின் இயல்பு. இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை ரசிகர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. தோல்வியில் இருந்து இன்னும் வெளியே வர முடியாத நிலையில், கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

    இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குகிறது. இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில்தான் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    2024 ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19-ந்தேதி துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன் ஒவ்வொரு அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது என்ற விவரத்தை நவம்பர் 26-ந்தேதிக்குள் ஐபிஎல் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அணிகள் தங்களுடைய வீரர்களை பரஸ்பர மாற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த வகையில், அதிகாரப்பூர்வமாக லக்னோ சூப்பர் செயின்ட்ஸ் அணி ஆவேஷ் கானை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுக்கிறது. அதற்குப் பதிலாக தேவ்தத் படிக்கல்லை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெறுகிறது.

    டெல்லி அணி சர்பராஸ் கான், மணிஷ் பாண்டே ஆகியோரை வெளியேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸை வெளியிட விரும்புகிறது. பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்த பெரும் தொகையை தக்கவைத்துக் கொண்டு ஏலத்தில் வீரர்களை வாங்க சி.எஸ்.கே. திட்டமிட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 2023 சீசனில் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

    இதைவிட மிகப்பெரிய செய்தி ஒன்று இணைய தளத்தில் உலா வருகிறது. அது ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப இருக்கிறார் என்பதுதான்.

    ஐபிஎல் தொடரில் மேலும் இரண்டு அணிகள் இணைக்கப்பட்டபோது, புதிதாக ஏலம் விடப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்ட்யா குஜராத் லயன்ஸ் அணிக்கு சென்றார். ஹர்திக் பாணட்யா தலைமையில் குஜராத் அணி 2-வது இடம பிடித்தது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் அணியில் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக ஜாஃப்ரா ஆர்சர் அல்லது ரோகித் சர்மாவை கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வதந்தி செய்தியாக கூட இருக்கலாம்.

    தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுமே தங்களுடைய தலைசிறந்த கேப்டன்களை வெளியிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    வருகிற 26-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் வீரர்களை பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. தக்கவைத்துள்ளது என்பது தெரியவரும்.

    • பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.
    • ஐ.பி.எல். வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13-ம் தேதி நடைபெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்கான 5 அணிகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டு விட்டன.

    இந்நிலையில், இந்தப் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு வாங்கியுள்ளது.

    ×