search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gujarat titans"

    • அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.
    • சந்தீப் வாரியர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கல் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது.

    குறைந்த இலக்கை துரத்திய டெல்லி அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பிரித்வி ஷா 7 ரன்களிலும், ஜேக் ஃபிரேசர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் பொரெல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடினர்.

    அபிஷேக் பொரெல் 15 ரன்களிலும், ஷாய் ஹோப் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 92 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
    • முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரித்திமான் சாஹா மற்றும் கேப்டன் சுப்மன் கில் சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடியும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டப்ஸ், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், கலீல் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதன் மூலம் குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை குவித்தது. அந்த வகையில், ஐ.பி.எல். தொடரில் குறைந்த பட்ச ரன்களை குஜராத் அணி பதிவு செய்தது. 

    • குஜராத் அணி மூன்று போட்டிகளில் தோல்வியுற்றது.
    • டெல்லி அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 32 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • புள்ளிபட்டியலில் குஜராத் அணி 6-வது இடத்தில் உள்ளது.
    • டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 2 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் நிர்ணயித்த 197 ரன் இலக்கை கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது.

    அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில், சாய் சுதர்சன் வலுவான அடித்தளம் அமைத்தனர். ஆனால் மிடில் வரிசை பேட்டிங்கில் தடுமாற்றம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ரஷித் கான், மொகித் ஷர்மா, உமேஷ் யாதவ், நூர் அகமது வலுசேர்க்கிறார்கள்.

    டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3-வது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷாவும், பந்து வீச்சில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் ஷர்மாவும் நல்ல நிலையில் உள்ளனர். மூன்று துறைகளிலும் அந்த அணி நிலையான திறனை வெளிப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்தை தொடர இரு அணிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். இருப்பினும் உள்ளூர் அனுகூலத்துடன் களம் காணும் குஜராத்தை சமாளிப்பது டெல்லி அணிக்கு சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • குஜராத் தரப்பில் சாய் சுதர்சன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லக்னோ அணிக்கு பேட்டிங்கில் துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் குவிண்டன் டி காக் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஏழு ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

    எடுத்ததும் இரண்டு விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணிக்கு கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாயினிஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். கே.எல். ராகுல் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்டாயினிஸ் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    இறுதியில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் - சுதர்சன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது. மெதுவாக விளையாடி கில் 21 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் 1 ரன்னில் வெளியேறினார்.

    அதனை தொடர்ந்து குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். சரத் 2, விஜய் சங்கர் 17, நல்கண்டே 12, ரஷித்கான் 0, உமேஷ் யாதவ் 2, என விக்கெட்டுகளை இழந்தனர். அதிரடியாக விளையாடிய தெவாட்டியா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் குஜராத் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் யாஸ் தாகூர் 5 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றின. 

    • 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 21-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 4 ஆட்டங்களிலுமே குஜராத் அணியே வாகை சூடியுள்ளது.

    • அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
    • குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.

    பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

    அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது.
    • பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 17-வது லீக் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக குஜராத் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.

    தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.

    • குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல்.-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சாய் கிஷோர். 2024 ஆசிய கோப்பை தொடர் மூலம் இந்திய அணியில் அறிமுகமான சாய் கிஷோர் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

    சென்னை சேர்ந்தவரான சாய் கிஷோர் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சித்தா படத்தில் இடம்பெற்ற "அமுத கடல் உனக்குத் தான்" பாடலை பாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சித்தார்த் நடித்து வெளியான சித்தா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த பாடலும் சமூக வலைதளங்களில் வைரலானது.



    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆடம் ஜம்பா விளகியுள்ளார்.
    • குஜராத் அணியில் இருந்து ராபின் மின்ஸ் விலகியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இடம் பிடித்திருந்தார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் இருப்பதால், அதிக பணிச்சுமை (heavy workload) காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை 1.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்திருந்தது.

    இந்த நிலையில் ரஞ்சி தொடரில் அசத்திய மும்பை அணியின் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கொடியானை ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் சேர்த்துள்ளது.

    கொடியான் ரஞ்சி தொடரில் 502 ரன்கள் அடித்ததுடன், 29 விக்கெட்டுக்கள் கைப்பற்றி தொடர்நாயகன் விருது வென்றார். 8-வது இடத்தில் களம் இறங்கிய அவர் 120, 89 ரன்கள் எடுத்து பாரோடா, தமிழ்நாட்டு அணிகளுக்கு எதிராக அசத்தினார்.

    அதேபோல் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த ராபின் மின்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அவருக்குப் பதிலாக கர்நாடகா மாநிலத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பி.ஆர். சரத்தை குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துள்ளது.

    பிஆரு் சரத் 28 ஒருநாள், 20 முதல்தர கிரிக்கெட், 43 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×