என் மலர்
நீங்கள் தேடியது "IPL Auction 2024"
- ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 10 அணிகளும் 77 இடத்துக்கான வீரர்களை ஏலம் மூலம் தேர்வு செய்வார்கள்.
10 அணிகளும் மொத்தம் ரூ.262.95 கோடியை செலவழிக்கலாம்.
- முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட போகிறேன்
- சென்னை ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பேன்.
17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்தஏலத்தில் பேட் கம்மின்ஸை 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஸ்டார்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி விலைக்கு வாங்கியது. இதற்கு அடுத்தப்படியாக டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு சென்னை அணி வாங்கியது. மேலும் சென்னை அணியில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரி ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னை ரசிகர்களை நான் மகிழ்விப்பேன் என சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட போகிறேன். சிறந்த வீரர்களான டோனி மற்றும் ஜடேஜா போன்ற சிறந்த வீரர்களை கொண்ட சென்னை அணியில் விளையாடபோவதை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் வரவேற்பு, மைதானத்தில் நிலவும் சூழல் குறித்தெல்லாம் நியூசிலாந்து வீரர்கள் நிறைய கூறியுள்ளார்கள். சென்னை ரசிகர்களை நிச்சயம் மகிழ்விப்பேன்.
இவ்வாறு ரச்சின் ரவீந்திரா கூறினார்.
- சென்னை சூப்பர் கிங்சிடம் ரிஷப்பண்டை ஏலம் எடுக்க பட்ஜெட் இல்லை.
- ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.
18-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தில் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடிப்பார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரிஷப் பண்டின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தும் பண்புகளை கொண்டுள்ளார். இதனால் எந்த ஒரு அணி உரிமை யாளரோ அல்லது பயிற்சி யாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பண்ட் எடுக்கப் படுவார்.
பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு அணிகளிடம் ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது.
ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில் ரூ.25 கோடியை தாண்டி இன்னும் 4-5 கோடிகள் அதிக தொகைக்கு ரிஷப் பண்ட் ஏலம் போவார். ரிஷப் பண்ட்டை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் 3 ஆண்டுகள் விளையாடுவார்.
சென்னை சூப்பர் கிங்சிடம் அவரை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக பெங்களூரு அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் என தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப்பண்ட் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்தது சாதனையாகும்.






