search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணி"

    • இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது.
    • உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று மதியம் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில் இந்த அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • இந்திய கிரிக்கெட் அணி உள்ளூர் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் ஏலம் விடப்பட்டது.
    • ஐந்து ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் கைப்பற்றியது.

    இந்திய கிரிக்கெட் அணி உள்நாட்டில் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் உள்ளூர் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை முகேஷ் அம்பானியின் வியாகாம் 18 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    அதன்படி பி.சி.சி.ஐ. சார்பில் உள்நாட்டில் நடத்தப்படும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமைத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 963 கோடிகளை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.

    இதில் ரூ. 3 ஆயிரத்து 101 கோடி டிஜிட்டல் உரிமத்திற்கு செலுத்துகிறது. அந்த வகையில் டிஜிட்டலில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 35 கோடியே 23 லட்சம் ஆகும். டி.வி.-யில் ஒரு போட்டியை ஒளிபரப்புவதற்கான தொகை ரூ. 32 கோடியே 52 லட்சம் ஆகும்.

    • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    • ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    புதுடெல்லி:

    1951-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 48 விளையாட்டுகளில் இருந்து மொத்தம் 481 பந்தயங்கள் அரங்கேறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க மொத்தம் 850 வீரர், வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம், மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து இருந்தது. இந்த பட்டியலில் இருந்து 38 விளையாட்டுகளை சேர்ந்த 634 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி ஆசிய போட்டியில் கலந்து கொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று அனுமதி அளித்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்தியா அனுப்பும் 'மெகா' எண்ணிக்கை கொண்ட அணி இதுதான். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் அதிகபட்சமாக 572 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொண்டு 16 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது.

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் தடகளத்தில் அதிகபட்சமாக 65 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 34 வீரர்கள், 31 வீராங்கனைகள் அடங்குவர். இதற்கு அடுத்தபடியாக கால்பந்து அணியில் 44 வீரர், வீராங்கனைகளும், ஹாக்கி அணியில் 36 வீரர், வீராங்கனைகளும், கிரிக்கெட் அணியில் 30 பேரும், துப்பாக்கி சுடுதல் அணியில் 30 பேரும், பாய்மரப்படகு அணியில் 33 பேரும் அங்கம் வகிக்கின்றனர்.

    பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி ஆகிய விளையாட்டுகளில் வீரர்கள் யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா (65 கிலோ) தகுதி சுற்று போட்டியில் கலந்து கொள்ளாவிட்டாலும், அவரது பெயரை மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்கும் ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை செய்ததால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியில் இடம் பெற்று இருப்பவர்களில் நீரஜ் சோப்ரா, ஜோதி யர்ராஜி (தடகளம்), பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து (பேட்மிண்டன்), ஷிவதபா, நிகாத் ஜரீன் (குத்துச்சண்டை), பவானி தேவி (வாள்வீச்சு), பிரித்விராஜ் தொண்டைமான், மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), சரத்கமல், சத்யன், மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), மீராபாய் சானு (பளுதூக்குதல்), டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி (செஸ்), சவுரவ் கோஷல், ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்), ரோகன் போபண்ணா, ராம்குமார் (டென்னிஸ்) உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

    • இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது.
    • எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஒரு அரை சதம் 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இளம் வீரர் திலக் வர்மா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்தது. ஆனால், இது மிகவும் பெரியது. அடுத்தடுத்த மாதங்களில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு நான் தயாராகிக் கொண்டுள்ளேன்.


    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எனது மாநில அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகம் விளையாடி உள்ளேன். அந்த நம்பிக்கையை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலும் காட்டுவேன்.

    என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.

    மேற்கிந்திய தீவுகளில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பெற செய்தது என அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார்,

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
    • ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை

    ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

    ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

    இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது.
    • இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

    ஐந்து 20 ஓவர் போட்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது.

    • ஆண்கள் சீனியர் பிரிவில் சுபம் தோட்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • ஜூனியர் பிரிவில் சித்தாந்தா 260 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார்.

    காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் என மூன்று பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இன்று 61 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான சீனியர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுபம் தோட்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அவர், இன்றைய இறுதிப்போட்டியில் மொத்தம் 259 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 115, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 144 கிலோ) எடையை தூக்கி முதலிடத்தை பிடித்தார்.

    ஜூனியர் பிரிவில் சித்தாந்தா 260 கிலோ (112kg+148kg) எடையை தூக்கி சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் சக வீரர் சங்கர் லபுங்கை 12 கிலோ எடை வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மகளிர் பிரிவில் இந்தியாவின் பாபி ஹசாரிகா 189 கிலோ (84+105) எடையை தூக்கி தங்கம் வென்றார். கடந்த முறை வெள்ளி வென்ற நிலையில் இந்த முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் மால்டா நாட்டின் தெனிஷயி வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் ஆப்பிரிக்க வீராங்கனை அன்னேக் ஸ்பைஸ் வெண்கலம் வென்றார். 

    • இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.
    • குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    பெங்களூருவில் 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் அரை இறுதி சுற்றின் முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    சாம்பியன் பட்டத்ததை தக்க வைக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் துவக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அதேபோல் முதல் முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் குவைத் வீரர்களும் பதிலடி கொடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

    சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட குவைத் அணி லீக் சுற்றில் இந்தியாவுடன் 'டிரா' செய்தது. நேபாளம், பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியிலும் குவைத் அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய நிலையில், ஆட்ட நேர இறுதியில் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் சுனில் சேத்ரி கோல் அடிக்க இந்தியா 1-0 என முன்னிலையில் இருந்தது.

    பின்னர் அடித்த கோலை குவைத் தவறவிட, சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்து 2-0 என இந்தியா முன்னிலையில் இருந்தது. இருப்பினும், குவைத் தனது இரண்டாவது வாய்ப்பில் கோல் அடித்ததால் 2-1 ஆனது.

    இரண்டு பெனால்டிகளும் மாற்றப்பட்ட நிலையில், 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது.

    இதையடுத்து, உதாந்தா சிங் தனது கோலை தவறவிட்டார். ஆனால் சுபாஷிஷ் போஸ் கோல் அடித்ததால் ஸ்கோர் பின்னர் 4-4 என்று கோல் கணக்கில் சமமானது.

    பின்னர், குர்பிரீத் சிங் சந்து கோல் அடித்ததை அடுத்து இந்தியாவுக்கு 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.

    இதன்மூலம், குவைத்தை வீழ்த்தி 9வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.

    • நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.
    • இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என இந்தியா வென்றது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதியில் இந்தியா, லெபனான் அணிகள் மோதின.

    போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    கூடுதல் நிமிடத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் இந்தியா தனது முதல் 4 வாய்ப்புகளை கோலாக்கியது. ஆனால் லெபனான் அணி 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. இதன்மூலம் இந்திய அணி 4 - 2 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    வரும் 4 ம் தேதி நடக்க உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - குவைத் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
    • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. இதில், ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார் என பிசிசிஐ குறிப்பிடவில்லை. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டனாக ரோகித்தும், துணை கேப்டனாக பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடர் மற்றும் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பிடித்துள்ளார். ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல்.ராகுல், கோலி, சூர்யகுமார், இஷான் கிஷன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

    டெஸ்ட் அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர் ), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர் ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல். ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட். இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மார்ச்1 ம் தேதி தொடங்க உள்ளது.

    • மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவை இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்தால் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியது. இந்தியா 114 தரநிலை புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி 111 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றினால், தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும்.

    • எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
    • இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

    இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.

    இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

    இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.

    ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

    இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

    ×