search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின.

    பாரீஸ்:

    ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெறுகிறது. ஆனால் கால்பந்து, ரக்பிசெவன்ஸ் போட்டிகள் நேற்று தொடங்கின.

    கால்பந்து போட்டியில்'ஏ' பிரிவில் நடந்த ஆட்டம் ஒனறில் பிரான்ஸ்-அமெரிக்கா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் சீனியர் அணியை தோற் கடித்தது.

    'டி' பிரிவில் ஜப்பான் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. இஸ்ரேல்-மாலி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    'பி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அர்ஜென்டினா-மொராக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டி னா 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டம் ஈராக் 2-1 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. பெண்கள் பிரிவு ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    ரக்பி செவன்ஸ் போட்டி யில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிஜி, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றன. வில் வித்தை, ஹேண்ட்பால் போட்டிகள் இன்று தொடங்கியது.

    வில்வித்தை போட்டியின் ரேங்கிங் சுற்றில் இந்தியா சார்பில் தீபக், தருண்தீப்ராய், பிரவீன் ஜாதவ் மற்றும் வீராங்கனை பஜன்கவுர், தீபிகா குமாரி, அங்கீதா பகத் ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

    • அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

    அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிகாகோ பயர் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர் மியாமி க்ளப் வெற்றி பெற்றது.

    இப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு கால்பந்து வரலாற்றில் அதிக கோப்பைகள் (45) வென்ற ஜாம்பவான் மெஸ்ஸியை இன்டர் மியாமி க்ளப் கௌரவித்தது.

    ஆண்டு வாரியாக வென்ற 45 கோப்பைகளின் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்தது.
    • இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் இரண்டாவது சுற்றில் இந்திய ஆண்கள் கால்பந்து அணி தோல்வி அடைந்து 3-வது சுற்றுக்கு வரத் தவறியது. கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இகோர் ஸ்டிமாக் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், இந்திய ஆண்கள் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினைச் சேர்ந்த மனோலோ மார்கிசை நியமனம் செய்தது அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு.

    மனோலோ மார்கிஸ் தற்போது எப்.சி கோவா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
    • தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார்.

    2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய இந்துமதி 5 கோல் அடித்தார்.

    கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

    • பிரான்ஸ் கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.
    • அந்த அணியில் எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே. கிளப் போட்டிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வந்த எம்பாப்பே, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்தார்.

    இதையடுத்து, அவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பிரான்சின் பிரபல கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைந்ததாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கிளப் தலைவர் புளோரெண்டினோ பெரெஸ் முன்னிலையில் அவர் அணியில் இணைந்தார்.

    ரியல் மாட்ரிட் அணியின் பிரபல வீரரான லூகா மோட்ரிக்கிற்கு 10-வது நம்பர் ஜெர்சி எண்ணாக இருப்பதால், எம்பாப்பேவுக்கு 9-ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

    • பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
    • பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது.

    பிரெஞ்சு தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த கால்பந்தாட்ட ஜாம்பவான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். யூரோ 2024 பிரான்சுடனான தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று பிரெஞ்சு ஸ்ட்ரைக்கர் ஒலிவியர் ஜிரூட் ஏற்கனவே கூறியிருந்தார்.

    துரதிர்ஷ்டவசமாக, பிரான்ஸ் அணிக்கான தனது கடைசி ஆட்டம் தோல்வியில் முடிந்தது. ஒலிவியர் ஜிரூட் பிரான்ஸ் வரலாற்றில் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர். பிரெஞ்சு தேசிய அணியைத் தவிர, ஜிரூட் தற்போது MLS என்ற அமெரிக்க லீக்கில் விளையாடி வருகிறார்.

    பிரான்ஸ் அணிக்காக 137 போட்டிகளில் விளையாடி 57 கோல்கள் அடித்து பிரான்ஸின் ஆல் டைம் முன்னணி கோல் அடித்த கால்பந்தாட்ட வீரராக ஜிரோட் உள்ளார்.

    பிரான்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஹ்யூகோ லோரிஸ் மற்றும் லிலியன் துராம் ஆகியோருக்குப் பிறகு, ஜிரூட் பிரான்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய மூன்றாவது வீரர் ஆவார்.

    தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த பிரெஞ்சு அணியுடன் நான் பணியாற்றிய 13 ஆண்டுகள் என் இதயத்தில் என்றும் மறையாது, இது எனது மிகப்பெரிய பெருமை மற்றும் எனது அன்பான நினைவகம்.

    என்று கூறினார்.

    • அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    • போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் கோல் அடித்தார்.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. தொடர்ந்து விளையாடிய இரு அணிகளும் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

    போட்டியின் 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்து வெற்றி காரணமாக திகழ்ந்தர். முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது பாதியில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலேயே அழுதார். பின்னர் வெளியேறியும் அவரது அழுகையை நிறுத்த முடியாமல் கண்ணீர் விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    இதனையடுத்து பரபரப்பான இறுதி நிமிடங்களை வெளியில் இருந்து பதட்டத்துடன் மெஸ்ஸி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அர்ஜெண்டினா அணி கோல் கம்பத்தை நெருங்கியது. அதனை ஒற்றை காலில் பார்த்துக் கொண்டிருந்த மெஸ்ஸி, கோல் அடித்ததும் சந்தோஷத்தை கொண்டாடினார். நொண்டி கொண்டே சக வீரரை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது.
    • கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.

    உலகின் அதிக பிரபலமான கால்பந்து தொடர் யூரோ கோப்பை. 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பையை வென்று சாதனை படைத்தது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நடைபெற்று முடிந்த யூரோ கோப்பை 2024 தொடர் ஸ்பெயின் அணியின் லமின் யமால் என்ற இளம் வீரருக்கு அற்புதமான நினைவுகளை பரிசாக கொடுத்துள்ளது. இந்த தொடரில் வைத்து தான் லமின் யமால் இளம் வயதில் கோல் அடித்த அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை யமால் முந்தினார்.


     

    16 ஆண்டுகள் 362 ஆவது நாளில் ஸ்பெயின் வீரர் லமின் யமால் தனது அணிக்காக கோல் அடித்தார். இதன் மூலம் அவர் உலகின் பார்வையை தன்பக்கம் திருப்பினார். உலகிலேயே இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த லமின் யமால், இறுதிப் போட்டியில் தனது அணி கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தினார்.

    ஜூலை 13 ஆம் தேதி 17 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய லமின் யமால் மறுநாளே தனது அணி நான்காவது முறை யூரோ கோப்பையை வெல்ல காரணமாக செயல்பட்டார். நேற்று நள்ளிரவு நடைபெற்ற யூரோ கோப்பை 2024 இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.


    தனது அணி கோப்பை வென்றது குறித்து பேசிய இளம் வீரர் லமின் யமால், "நான் இதைவிட சிறப்பான பிறந்தநாள் பரிசை எதிர்பார்க்க முடியாது. இது கனவு நனவான தருணம். அவர்கள் கோல் அடித்து போட்டி சமனில் இருந்த போது, கடினமாக இருந்தது. இந்த அணி எப்படி உருவாக்கப்பட்டது என்றே தெரியவில்லை, இது மீண்டும் மீண்டும் போராடும்," என்று தெரிவித்தார்.

    போட்டிக்கு பிந்தைய கொண்டாட்டங்களைத் தொடர்ந்து லமின் யமால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இன்று கால்பந்து வெற்றி பெற்றது" என தலைப்பிட்டு கூடவே "கோட்" எமோஜி மற்றும் யூரோ கோப்பையுன் இருக்கும் தனது புகைப்படம், கோபா அமெரிக்கா கோப்பையுடன் மெஸ்ஸி இருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளார்.

     


    ஓரே இரவில் யூரோ கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா தொடர்களின் இறுதிப் போட்டி நடைபெற்றது. முதலில் யூரோ கோப்பை போட்டி முடிந்த நிலையில், இரண்டாவதாக நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியனம் பட்டம் வென்றது.

    • இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர்.
    • போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடியும் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

     


    இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் நிலவியது. போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் அவகாசத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிய இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின.

    போட்டியின் 112 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லோ செல்சோ அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார். இது அர்ஜென்டினா கோப்பையை வெல்ல காரணமாக மாறியது. போட்டி நிறைவில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    • எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பை வென்றதில்லை.
    • யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று முடிந்தது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. இதில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக யூரோ கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதுவரை எந்த அணியும் நான்கு முறை யூரோ கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று யூரோ கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. முன்னதாக 2020 ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

     


    தற்போது நடைபெற்ற யூரோ கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இருமுறை யூரோ கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணியாக இங்கிலாந்து உள்ளது.

    நடைபெற்று முடிந்த 2024 யூரோ கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச அளவில் (யூரோ/ உலகக் கோப்பை) ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.

    முன்னதாக 2002 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி இதே போன்று ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் அணி நடந்து முடிந்த யூரோ கோப்பை தொடரில் 15 கோல்களை அடித்துள்ளது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் ஒரே தொடரில் இத்தனை கோல்களை அடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.
    • நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெற்றன. லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதின. இதில் வெற்றி பெற்ற ஸ்பெயின், ஃபிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

    முதலாவது அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் துவக்கம் முதலே கோல் அடிப்பதில் முனைப்பு காட்டினர்.

    போட்டியின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி வரை போட்டி 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து கோப்பையை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிரமாக விளையாடினர். போட்டியின் 47 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் யமால் அசிஸ்ட் செய்ய நிகோ வில்லியம்ஸ் அதனை கோலாக மாற்றினார்.

     


    இதன்பிறகு ஆட்டம் சூடுபிடிக்க துவங்கியது. துவக்கம் முதலே போராடி வந்த ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியில் ஒரு கோல் அடிக்கப்பட்டதை தொடர்ந்து விறுவிறுப்பாக மாறியது. ஸ்பெயின் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.

    இதன் முயற்சியாக 73 ஆவது நிமிடத்தில் பெலிங்கம் அசிஸ்ட் செய்ய இங்கிலாந்து வீரர் கோலெ பால்மர் கோல் அடித்து அசத்தினார். இதனால் போட்டி முடியும் தருவாயில் பரபர சூழல் உருவானது. இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் மற்றொரு கோல் அடித்து வெற்றி வாகை சூட இரு அணி வீரர்களும் களத்தில் மல்லுக்கட்டினர்.

    நீண்ட நேரம் நீடிக்காத போராட்டத்தால் 86 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மிகெல் ஒயர்சபால் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இவர் கோல் அடிக்க ககெரெல்லா அசிஸ்ட் செய்தார். இதைத் தொடர்ந்து போட்டி முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக ஸ்பெயின் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி நான்காவது முறைாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. யூரோ கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த அணியும் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கி இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    இதனிடையே அரையிறுதியில் தோல்வியை தழுவிய கனடா மற்றும் உருகுவே அணிகள் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 8-வது நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    மறுபுறம் கனடா அணி போட்டியின் 22-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. இதன் காரணமாக இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் அடுத்த கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டினர். எனினும், முதல் பாதியில் கனடா 1-1 உருகுவே அணிகள் சமநிலையில் இருந்தன.

     


    இதைத் தொடர்ந்து 2-வது பாதியில் வெகு நேரம் ஆகியும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாத அளவுக்கு போட்டி நெறுக்கமாக இருந்தது. போட்டியின் 80-வது நிமிடத்தில் கனடா அணி தனது 2-வது கோலை அடித்து முன்னிலை பெற்றது.

    இதைத் தொடர்ந்து 90-வது நிமிடத்தில் உருகுவே அணியும் தனது 2-வது கோலை அடித்ததால் போட்டி மீண்டும் சமனுக்கு வந்தது. இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதிலும் இரு அணி வீரர்களால் வெற்றிக்கான கோல் அடிக்க முடியாமல் போனது.

    இதன் காரணமாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் 3-4 என்ற கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது அசத்தியது. இதன் காரணமாக நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே மூன்றாவது இடம்பிடித்தது.

    ×