search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் விளையாட்டு"

    • காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின் வாங்கியது.
    • 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வமாக இருக்கிறது.

    காந்திநகர்:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்தது.

    23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் 17 முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காமன் வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதில் இருந்து ஆஸ்திரேலியா பின் வாங்கியது. போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விக்டோரியா மாகாணம் திடீரென விலகியது. போட்டியை நடத்த திட்டமிட்ட தொகையை விட அதிகமாக செலவாகும் என்பதால் இந்த முடிவை எடுத்தது.

    இதனால் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் கடும் அதிர்ச்சி அடைந்தது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் நடத்த குஜராத் அரசு ஆர்வமாக இருக்கிறது. அகமதாபாத் நகரில் போட்டியை நடத்துவதற்காக ஏலத்தில் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இதற்கான ஏற்பாடுகளை குஜராத் அரசு செய்யும்.

    2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உள்கட்டமைப்புகள் அகமதாபாத்தில் செயல்பட்டு வருகின்றன.

    இதனால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தி விடலாம் என்பதில் அம்மாநில அரசு தீவிரமாக உள்ளது.

    • காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விக்டோரியா மாகாணம் விலகியது.

    மெல்போர்ன்:

    2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் நேற்று விலகியது. இதனால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் உருவாகி இருக்கிறது.

    இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946-ம் ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி ரத்தானது. மற்றபடி தங்குதடையின்றி நடந்து வருகிறது.

    கடைசியாக 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி அரங்கேறியது. இதில் 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 20 வகையான விளையாட்டுகளும், 9 வகையான பாரா போட்டிகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தும் பொறுப்பில் இருந்து விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு நேற்று தடாலடியாக அறிவித்தது. போட்டியை நடத்த தாங்கள் மதிப்பிட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிக தொகை பிடிக்கும் என்று தெரியவந்து இருப்பதால் இந்த கடினமான முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விக்டோரியா மாகாண பிரதமர் டேனியல் ஆன்ட்ரூஸ் கூறுகையில், 'அடுத்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு எனது அரசு கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டது. அதற்காக எந்த விலை கொடுத்தாவது அதனை நடத்துவோம் என்று அர்த்தம் கிடையாது. 5 பிராந்திய நகரங்களில் இந்த போட்டியை நடத்த 2.6 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரத்து 500 கோடி) தேவைப்படும் என்று முதலில் கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது இதற்கான தொகை 7 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக (ஏறக்குறைய ரூ.39 ஆயிரம் கோடி) அதிகரிக்கும் என்று தெரியவருகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிக்காக நாங்கள் 7 பில்லியன் டாலரை செலவழிக்கும் நிலையில் இல்லை. இந்த தொகையை நாங்கள் செலவழித்தாலும் அதனால் எங்களுக்கு பெரிய அளவில் ஆதாயம் எதுவும் கிடைக்காது. இதனால் இந்த போட்டியை நடத்துவதில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம். இது குறித்து காமன்வெல்த் விளையாட்டு அமைப்புடன் சுமுகமாக விவாதித்தோம். எங்கள் முடிவை தெரிவிக்கும் முன்பு போட்டியை மெல்போர்னுக்கு மாற்றலாமா? என்பது உள்பட எல்லா அம்சங்களையும் பரிசீலனை செய்தோம்' என்றார்.

    விக்டோரியா அரசின் திடீர் அறிவிப்பால் 2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு திட்டமிடப்படி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    போட்டியை நடத்துவதில் இருந்து விலகி இருக்கும் விக்டோரியா மாகாண அரசின் முடிவால் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த சம்மேளனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'விக்டோரியா மாகாண அரசின் விலகல் முடிவு கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த முடிவை அரசு எடுப்பதற்கு முன்னதாக சூழ்நிலை குறித்து எங்களுடன் விவாதித்து கூட்டாக சுமுக தீர்வு காண வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. நமது வீரர்களின் நலன் கருதி இந்த போட்டி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆண்கள் சீனியர் பிரிவில் சுபம் தோட்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • ஜூனியர் பிரிவில் சித்தாந்தா 260 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார்.

    காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் என மூன்று பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இன்று 61 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான சீனியர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுபம் தோட்கர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அவர், இன்றைய இறுதிப்போட்டியில் மொத்தம் 259 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 115, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 144 கிலோ) எடையை தூக்கி முதலிடத்தை பிடித்தார்.

    ஜூனியர் பிரிவில் சித்தாந்தா 260 கிலோ (112kg+148kg) எடையை தூக்கி சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் சக வீரர் சங்கர் லபுங்கை 12 கிலோ எடை வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    மகளிர் பிரிவில் இந்தியாவின் பாபி ஹசாரிகா 189 கிலோ (84+105) எடையை தூக்கி தங்கம் வென்றார். கடந்த முறை வெள்ளி வென்ற நிலையில் இந்த முறை தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் மால்டா நாட்டின் தெனிஷயி வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் ஆப்பிரிக்க வீராங்கனை அன்னேக் ஸ்பைஸ் வெண்கலம் வென்றார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்ற சரத்கமலுக்கு 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் வழங்கினார் முதல்வர்
    • கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள பிரணவ் வெங்கடேஷ்-க்கு 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தில் (Elite Sportsperson Scheme) ஏ.சரத்கமல், சத்தியன் செல்வி பவானி தேவி ஆகியோருக்கும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் (Mission International Medals Scheme) சவுரவ் கோஷல், தீபிகா பல்லிகல் ஆகியோருக்கும் தொடர் பயிற்சி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், கடந்த 28.7.2022 முதல் 8.8.2022 வரை இங்கிலாந்து நாட்டின், பர்மிங்காமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ. சரத்கமலுக்கு மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டி, கலப்பு இரட்டையர் போட்டி, ஒற்றையர் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி, என மொத்தம் 4 பதக்கங்களை வென்றதற்காக உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடியே 80 இலட்சம் ரூபாயும்,

    மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டியில் 1 தங்கம், இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி மற்றும் ஒற்றையர் போட்டியில் 1 வெண்கலம், என மொத்தம் 3 பதக்கங்களை வென்றதற்காக ஜி. சத்தியனுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாயும்,

    ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக் உயரிய ஊக்கத்தொகையாக 40 இலட்சம் ரூபாயும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 20 இலட்சம் ரூபாயும் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக 51 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 91 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

    மேலும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் பெண்கள் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பவானி தேவிக்கு ஊக்கத்தொகையாக 35 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், இந்தியாவின் 75-வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ஊக்கத்தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.

    இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் / உறுப்பினர் செயலர் கா. ப. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 92 கிலோ குத்துச் சண்டை போட்டி இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் சாகர் தகுதி,
    • மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா வெண்கலம் வென்றார்.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ரோகித் டோகாஸ் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதேபோல் ஆண்களுக்கான 92 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சாகர், நைஜீரியாவின் இஃபியானிவை எதிர் கொண்டார். இப்போட்டியில் சாகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  


    ஆண்களுக்கான 97 கிலோ மல்யுத்த பிரிவில் இந்திய வீரர் தீபக் நெஹ்ரா பாகிஸ்தானின் தயாப் ரசாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 10-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்திய தீபக் நெஹ்ரா வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    • காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 12 தங்கம் வென்றுள்ளது.
    • பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 74  கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தானின் முகமது ஷெரீப் தாஹிரை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    இதன் மூலம் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 6-வது தங்கப்பதக்கம் கிடைத்தது. பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, வினேஷ் போகட் மற்றும் ரவி குமார் தஹியா ஆகியோர் மல்யுத்தத்தில் ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். காமல்வெல்த் போட்டியில் இந்தியா 12 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

    • ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து இருந்தன.
    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா ஒரு கோல் அடித்தது.

    இண்டாவது பாதி ஆட்டத்தின்போது இந்திய மகளிர் அணி பதில் கோல் அடித்தது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் இருந்தன. வெற்றியை நிர்ணயிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது.

    இதில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணி அடுத்ததாக வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறது.

    • வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
    • இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்பு

    பர்மிங்காம்:

    பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் அனைவரும் விளையாட்டு கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருக்கிறார்கள்.

    இந்நிலையில், காமன்வெல்த் கிராமத்தில் இருந்து இலங்கையைச் சோந்த 2 வீரர்கள் மற்றும் ஒரு அதிகாரியை திடீரென காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீரர்கள் காணாமல் போனதையடுத்து, போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும், அவர்கள் தங்கியிருக்கும் விளையாட்டு கிராம அதிகாரிகளிடம் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் இருந்து 51 அதிகாரிகள் உள்ளிட்ட 161 உறுப்பினர்கள் கொண்ட குழு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
    • காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

    பிரிட்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 109 கிலோ எடைப்பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரீத் சீங், மொத்தம் 355 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த பிரிவில் கேமரூன் நாட்டின் ஜூனியர் நியாவே 361 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். சமோவா நாட்டின் ஜேக் ஓபலாக் 358 கிலோ எடை தூக்கி வெற்றிப் பதக்கம் வென்றார்.

    காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது.

    • பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப் பதக்கம் வென்றார்.
    • ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஜெரிமி தங்கம் வென்றார்.

    ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவில் 300 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஜெரேமி லால்ரின்னுங்கா முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

    பெண்கள் பிரிவில் மீராபாய் சானு ஏற்கனவே தங்கப்பதக்கம் வென்றுள்ள நிலையில், ஜெரிமி இரண்டாவது தங்கம் வென்றுள்ளார்.

    இந்நிலையில், காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், " நமது யுவசக்தி சரித்திரம் படைத்து வருகிறது! ஜெரேமி ல்ரினுங்காவுக்கு வாழ்த்துக்கள். அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் மற்றும் ஒரு அற்புதமான சாதனையையும் படைத்துள்ளார்.

    இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும், புகழையும் கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

    • பளுதூக்கும் பிரிவில் இந்தியா தங்கம் வெள்ளி உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது.
    • பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் மேலும் சாதனை படைக்க பிரதமர் வாழ்த்து.

    காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

    பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பிந்த்யாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனை அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும், மேலும் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், 55 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சங்கேத் சர்காருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அபாரமான முயற்சியால் மதிப்புமிக்க வெள்ளியை வெல்வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    இதேபோல் 61 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பி. குருராஜாவிற்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விளையாட்டுப் பயணத்தில் மேலும் பல மைல்கல் சாதனைகள் படைக்க வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    • முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம், இந்தியா தோல்வி
    • இன்றைய போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிக்கு போராடும் என எதிர்பார்ப்பு

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

    முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இன்றைய  ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனைகள் தீவிரமாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    ×