search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஊழியர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
    • குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இறப்பின் கீழ் வேலை பெற்ற அரசு ஊழியர்கள், இறந்த ஊழியரை சார்ந்த பிறரை புறக்கணித்தால், அவரது சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    குடும்பத்தினர் இறப்பின் கீழ் அரசு பணியில் சேரும் ஊழியர்கள் தங்களை சார்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்புக்கு உள்ளவர்கள் ஆவர். மேலும் அவர்களது தேவைகளான உணவு, சொத்து, தங்குமிடம், சிகிச்சை பராமரிப்பு உள்ளிட்டவைகளை கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதுபோல் கவனிக்காமல் இருக்கும் அரசு ஊழியர் மீது எழுத்துப்பூர்வமான புகாரை நியமன அதிகாரியிடம் பதிவு செய்யலாம்.

    அரசு முடிவின்படி அத்தகைய ஊழியர்கள் மீது பெறப்படும் புகார் உண்மை யென நிரூபிக்கப்பட்டால், அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 25 சதவீதம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் அவர்களைச் சார்ந்தவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிம வளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை சோதனையிடும் பணி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வருகிறது.

    கருங்கல் அருகே மானான்விளை பகுதியில் கல்குளம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர்.

    பின்னர் லாரியை எடை போடுவதற்காக லாரியுடன் உதவியாளர் அசோக்குமார் என்பவரை தனி வட்டாட்சி யர் ரமேஷ் அனுப்பி வைத்தார். இதற்கு லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து அசோக்குமாரை தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனி வட்டாட்சியர் ரமேஷ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.

    அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது படிப்பு சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களை அவரிடம் கொடுத்தார். அப்போது அதில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து கொண்டு தினமும் பிரபாகரன் அவரிடம் பேசிவந்தார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் பலஇடங்களில் காதலர்களாக சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

    இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்தார். அவர் பலமுறை பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரபாகரன் கற்பழித்து விட்டதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
    • நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 62). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    ஞானதாஸ் நேற்று மதியம் புன்னைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானதாஸ் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொது மக்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஞானதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    ஞானதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    இது தொடர்பாக போக்கு வரத்து பிரிவு போலீசார் அரசு பஸ் டிரைவர் அனீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
    • மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு துணைத்தலைவர் பொன் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார்.

    துணைத்தலைவர் மோகனசுந்தரம் வர வேற்றார். செயலாளர் முத்துமாடன் அறிக்கை வாசித்தார். பொருளா ளர் திருமாவளவன் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் திரவியம், மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான், செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் தங்கவேலு ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

    கணேசன் செயலாளராகவும், ஞானசேகரன் மாவட்ட பிரதிநி தியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி இயக்கவேண்டும்.

    ராமேசுவரம் மார்கத்தில் இருந்து பகலில் ெரயில் வசதி இல்லாத நிலையில் காரைக்குடி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மதுரையில் அரசு ஊழியர் திடீரென இறந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 50). இவர் மதுரை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் வேலை பார்த்தார்.

    அவர் நேற்று இரவு முழுவதும் அலுவலகத்தில் தங்கி வேலை பார்த்ததாக தெரிகிறது. இன்று காலை அலுவலகத்துக்கு வந்து பணிகளை தொடங்கிய போது சண்முகவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    வலியால் துடித்த அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''கருவூலத்துறை சர்வரில் கோளாறு இருப்பதால் பில் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து கருவூலத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

    ஆனாலும் சர்வர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக சண்முகவேல் இரவு முழுவதும் வேலை செய்ய நேரிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரண மாக அவர் மாரடைப்பால் உயிர் இழக்க நேரிட்டது என்றனர்.

    • அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
    • இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள். இவரது மகன் செல்வகுமார்(வயது33). இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களை விடுமுறை நாட்களில் செல்வகுமார் பார்க்க செல்வதுண்டு. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு செல்வ குமார் மோட்டார் சைக்கி ளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மது குடித்திருந்த தாக தெரிகிறது. சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது செல்வகுமார் சாலை யோரத்தில் மோ ட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரது தந்தை நாராயண பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு மூலம் செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5-ம் வகுப்பு மாணவி கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார்.
    • சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் வசித்து வருபவர் தீபா. இவரது 10 வயதுடைய மகள் அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், கிள்ளை பூவாராகசாமி மண்டபம் வீதியில் உள்ள செண்பகவள்ளி என்பவரிடம் டியுஷன் படித்து வருகிறார். வழக்கம் போல கடந்த 3-ந் தேதியன்று மாலையில் டியுஷனுக்கு 5-ம் வகுப்பு மாணவி சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த போது சீறுநீர் கழிக்க அந்த வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த டியுஷன் மாஸ்டரின் தந்தை தீயணைப்புத் துறையில் இருந்து ஒய்வு பெற்ற தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாய் தீபாவிடம் நடந்ததை கூறினார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தகவலறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும்.
    • காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர், நவ.24-

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம் இன்று தஞ்சை இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் அம்சராஜ் தொடக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி மகளிர் அறிக்கையும் தாக்கல் செய்து பேசினர்.

    மாநில செயலாளர் கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் மகேஷ், செந்தில்குமார், தமிழ்வாணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர் ‌‌.

    இந்த பேரவை கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் , சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    பள்ளி சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

    கொரோனா காலத்தில் முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் கோட்டத் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

    • புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
    • வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவர்கள் வசித்து வந்த வீடு தற்சமயம் பழுது அடைந்திருப்பதால் வீட்டை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து அவர்கள் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருந்து பழுது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    • தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தாராபுரம் :

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டியக்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிபிஎஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.நவீன் தலைமை வகித்தாா்.

    இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன் பேசியதாவது:- இந்தியாவில் ராஜஸ்தான், சட்டீஸ்கா் பிகாா், ஜாா்கண்ட் மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறாா்.திமுக கட்சிஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் கடந்த தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆகவே, தோ்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.இந்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

    • சிதம்பரம் அருகே அரசு ஊழியர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.
    • செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோழன் (வயது 45). இவர் காட்டுமன்னார்கோவில் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வந்தார். மேலும் செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமராட்சியில் உள்ள ராஜன் வாய்க்காலுக்கு தனியாக குளிக்க சென்றார். பின்னர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரின் வேகம் அதிகரித்து எதிர்பாராத விதமாக சோழன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    குளிக்கச் சென்ற சோழன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் ராஜன் வாய்க்கா லுக்கு சென்று அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டு புதரில் மாட்டி இருந்த சோழனின் உடலை போராடி மீட்டனர். பின்னர் சோழ னின் உடலை குமராட்சி போலீஸ் நிலையத்திடம் ஒப்ப டைத்தனர். குமராட்சி போலீசார் சோழனின் உடலை பிரேத பரிசோ தனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    ×