search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர் மர்ம சாவு
    X

    அரசு ஊழியர் மர்ம சாவு

    • அரசு ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.
    • இதுகுறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் நாராயணபெருமாள். இவரது மகன் செல்வகுமார்(வயது33). இவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விவசாய துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகின்றனர். அவர்களை விடுமுறை நாட்களில் செல்வகுமார் பார்க்க செல்வதுண்டு. இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு செல்வ குமார் மோட்டார் சைக்கி ளில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது மது குடித்திருந்த தாக தெரிகிறது. சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் விலக்கு பகுதியில் சென்ற போது செல்வகுமார் சாலை யோரத்தில் மோ ட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரது தந்தை நாராயண பெருமாளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சு மூலம் செல்வகுமார் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×