search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் அருகே வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு அரசு ஊழியர் பலி
    X

    சிதம்பரம் அருகே வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு அரசு ஊழியர் பலி

    • சிதம்பரம் அருகே அரசு ஊழியர் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.
    • செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோழன் (வயது 45). இவர் காட்டுமன்னார்கோவில் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றி வந்தார். மேலும் செயற்கைக் கால் பொருத்திய மாற்று திறனாளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குமராட்சியில் உள்ள ராஜன் வாய்க்காலுக்கு தனியாக குளிக்க சென்றார். பின்னர் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரின் வேகம் அதிகரித்து எதிர்பாராத விதமாக சோழன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    குளிக்கச் சென்ற சோழன் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் வீட்டில் உள்ளவர்கள் ராஜன் வாய்க்கா லுக்கு சென்று அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டு புதரில் மாட்டி இருந்த சோழனின் உடலை போராடி மீட்டனர். பின்னர் சோழ னின் உடலை குமராட்சி போலீஸ் நிலையத்திடம் ஒப்ப டைத்தனர். குமராட்சி போலீசார் சோழனின் உடலை பிரேத பரிசோ தனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    Next Story
    ×