search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு
    X

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
    • மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு துணைத்தலைவர் பொன் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார்.

    துணைத்தலைவர் மோகனசுந்தரம் வர வேற்றார். செயலாளர் முத்துமாடன் அறிக்கை வாசித்தார். பொருளா ளர் திருமாவளவன் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் திரவியம், மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான், செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் தங்கவேலு ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

    கணேசன் செயலாளராகவும், ஞானசேகரன் மாவட்ட பிரதிநி தியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி இயக்கவேண்டும்.

    ராமேசுவரம் மார்கத்தில் இருந்து பகலில் ெரயில் வசதி இல்லாத நிலையில் காரைக்குடி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×