என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருங்கல் அருகே அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லாரி டிரைவர்-உரிமையாளர் மீது வழக்கு
- அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
- லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
கன்னியாகுமரி :
கன்னியாமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு அளவுக்கு அதிகமாக கனிம வளம் ஏற்றிச் செல்லும் லாரிகளை சோதனையிடும் பணி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடை பெற்று வருகிறது.
கருங்கல் அருகே மானான்விளை பகுதியில் கல்குளம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர்.
பின்னர் லாரியை எடை போடுவதற்காக லாரியுடன் உதவியாளர் அசோக்குமார் என்பவரை தனி வட்டாட்சி யர் ரமேஷ் அனுப்பி வைத்தார். இதற்கு லாரி டிரைவர் எதிர்ப்பு தெரிவித்து அசோக்குமாரை தகாத வார்த்தைகள் பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக தனி வட்டாட்சியர் ரமேஷ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்