search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    • ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர்.

    ஈரோடு:

    திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் திருச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை ஈரோடு சோலார் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் வழியாக ரெயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அப்பகுதியில் இருந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்ததால் ரெயிலின் டிரைவர் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். தொடா்ந்து எந்தவித சிக்னலும் இல்லாததால் ரெயில் புறப்படுவதற்கு தாமதம் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் ரெயில் பாதை அருகே குப்பைகள் அப்புறப்படுத்தும் போது, ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர். முன்னதாக எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தபின் திருச்சி-பாலக்காடு ரெயில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிக்னல் கோளாறுக்கு காரணமான முத்துக்கவுண்டன் பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
    • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1 -0 என முன்னிலையில் உள்ளது.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

    • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது.
    • குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகரை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை இல்லா தெருக்கள், சாலைகளை மாற்றி அழகுப்படுத்தப்படுகிறது.

    சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இயற்கை உரம், பயோகியாஸ் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் தனியார் நிறுவனங்கள் பிளாண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது. வீடுகள், ஓட்டல்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என தனித்தனியாக பிரித்து குப்பைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கின்ற குப்பைகள் இயற்கை உரம், இயற்கை எரிவாயு மற்றும் மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் குப்பை கிடங்குகளில் குவியும் குப்பை குறைக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.

    அந்த வகையில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்குகிறார்கள். மக்கும் குப்பைகள் தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் பெறப்படுகிறது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வகையாக பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தனித்தனி பைகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதன்மூலம் எளிதாக தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள பிரதான குப்பை கிடங்கில் மொத்தமாக கொட்டப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு, பயோகியாஸ் தயாரிக்கப்படுவதால் குப்பைகள் தேக்கம் ஆவது இல்லை.

    இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து குப்பைகளை பிரித்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. வீடுகளில் தேங்கிய தேவையற்ற கழிவுகளை மக்கள் கொட்டினார்கள். குப்பைகளை பிரித்து வழங்காமல் மொத்தமாக கொட்டி வருகின்றனர்.

    இதனை தவிர்க்க மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. "என் குப்பை என் பொறுப்பு" என நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

    அதில் குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குற்றாலம் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து வாலிபரை தேடிவந்தனர்.
    • சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியை அடுத்த குற்றாலம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் அபாயகரமான முறையில் வாலிபர் ஒருவர் சென்று வந்துள்ளார். மேலும் அந்த நபர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்தபடி சுற்றித்திரிந்து உள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், மேற்கொண்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு அந்த வாலிபரை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குற்றாலம் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சோதனை செய்து அந்த நபரை தேடி வந்த நிலையில், தென்காசி மலையான் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுஜித் (வயது 23) என தெரியவந்தது.

    இதுகுறித்து சுஜித் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.

    இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.

    ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

    இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • கோவை உள்பட 3 மாவட்டங்களில் அதிகாரிகள் தணிக்கை சோதனை
    • போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

    கோவை, 

    கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 5 பகுதி அலுவலகங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு தணிக்கை குழுவி னர் நேற்று காலை முதல் மாலை வரை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.

    இதில் மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராத மாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து இணை ஆணையர் சிவகுமரன் கூறியதாவது:-

    அதிகம் பாரம் ஏற்றிய 53 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றிய 38 வாகனங்கள், வாகன காப்பீடு இல்லாத 45 வாகனங்கள், தகுதிச்சா ன்று இல்லாத 49 வாகனங்கள், புகை பரிசோதனை சான்று இல்லாத 13 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 41 வாகனங்கள், அனுமதி ச்சீட்டு இல்லாத 2 வாக னங்கள் என மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ப ட்டுள்ளது.

    இதில் பெரும்பாலா னவை லாரி, மேக்சி கேப், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை ஆகும். தகுதிச்சான்று இல்லா மல் வாகனத்தை இயக்கி, வித்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடை க்காது. அதோடு உரிய ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.

    அதிக பாரம் ஏற்றி சென் றால் அபராத தொகை விதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட எடையோடு தான் வாக னத்தை இயக்க வேண்டும்.

    இவ்வாறு இயக்குவது வாகனத்துக்கும், சாலை க்கும் பாதுகாப்பாக இரு க்கும்.

    விபத்துக்களையும் தவிர்க்க முடியும். இதுபோ ன்று தொடர்ச்சி யாக சோதனைகள் நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் உரிய அனைத்து ஆவணங்களையும் வைத்தி ருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • குமரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை

    நாகர்கோவில், நவ.26-

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 391 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் வாரத்தில் 3 நாட்கள் கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்கள் மற்றும் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. கடைகளில் இருந்த ஒரு கிலோ 750 கிராம் புகையிலை பாக்கெட்டு களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈத்தாமொழி, சுண்டப்பற்றிவிளை பகுதியில் சோதனை நடந்தது. இதேபோல் தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா? அங்கு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 97 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 9½ கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், குமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடைகளில் குட்கா, புகையிலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறையாக பறிமுதல் செய்யப்பட்டால் ரூ.5 ஆயிரம், 2-வது முறையாக ரூ.10 ஆயிரம், 3-வது முறையாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும்.

    பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தால் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்

    • 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர்
    • ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்துக்கு இடையோராக காற்றாலையுடன் லாரி நிற்பதால், அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த செய்தி மாலை மலரில் படத்துடன் வெளியானது.

    இதனையடுத்து வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மொத்தம் 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றியது, நீளமான காற்றாலை இறக்கைகள் எடுத்து செல்லும் வாகனங்கள் மற்றும் வரி செலுத்தாத வாகனங்கள் என 15 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி என ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் இந்த வாகன தணிக்கை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் கழிவுநீர் வாகனங்களை இயக்குவ தற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிய ஆவ ணங்கள் மற்றும் அனு மதியின்றி இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் ஏற்க னவே நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா எச்ச ரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க ளில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து நேற்று இரவு திருவேற்காடு நகராட்சி சுகாதார அலு வலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த கழிவுநீர் அகற்றும் லாரி குறித்து விசாரித்தனர். விசாரணை யில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த கழிவுநீர் அகற்றும் வாகனம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த வாகனத்தின் உரிமை யாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அந்த மருத்துவ மனை வளாகத்தில் தேவையின்றி வைக்கப்பட்டி ருந்த பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தேவையற்ற அந்த பொருட்களை அங்கி ருந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வா கத்திற்கு அறிவு றுத்தப் பட்டது. தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் அந்த மருத்துவ மனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் அழிக்கப்பட்டது.
    • அபராத தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம், வெளி ப்பாளையம், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நிறுவனம் சுகாதாரமான முறையில் பேக்கரியை பராமரிக்க வில்லை.

    உணவு தயாரிப்பு இடம் சுகாதாரமற்று இருந்தது தெரிய வந்தது.

    ஆனால் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தனர்.

    பின்னர் அங்கிருந்த காலாவதியான மற்றும் தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

    ஒருவார காலத்திற்குள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தப்படுத்தி, குறைகள் சரிசெய்து, வெள்ளையடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    சுகாதாரக் கேட்டிற்கான அபராதத் தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    • லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பிராணிகள் வதை தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் தலைமையிலான போலீசார் லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு

    இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவி உள்பட 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட கோர்ட்டு 8 டிரைவர்களையும் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு விஸ்வ நாதன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

    அபராதம்

    இருதரப்பு வாதங்க ளையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவிக்கு ரூ.5 ஆயிரம், ஓலப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமிக்கு ரூ.4.800, ஈரோடு மணிகண்டனுக்கு ரூ.4,200, சத்தியமங்கலம் முருகேசனுக்கு ரூ.6 ஆயிரம், குணசேகரனுக்கு ரூ.6,600, ஈரோடு ஜெபருல்லா என்பவருக்கு ரூ.2 ஆயிரம், நீலகிரியை சேர்ந்த கலிமுல்லாவுக்கு ரூ.3 ஆயிரம், கேரளாவை சேர்ந்த ரகிம்மோன்ட் என்பவருக்கு ரூ.3,200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மொத்தமாக 8 டிரைவர்களுக்கும் ரூ.34 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும்.
    • புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும். ஸ்டாப் கடிகாரங்களின் அறிமுகம் தற்போது சோதனை அடிப்படையில் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்.

    புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். அப்படி தயாராகத பட்சத்தில், ஒரு இன்னிங்சில் இதேபோல் மூன்றாவது முறை நிகழும்போது 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

    ×