search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உரிய ஆவணம் இல்லாமல் இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்
    X

    உரிய ஆவணம் இல்லாமல் இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்

    • நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் கழிவுநீர் வாகனங்களை இயக்குவ தற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிய ஆவ ணங்கள் மற்றும் அனு மதியின்றி இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் ஏற்க னவே நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா எச்ச ரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க ளில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து நேற்று இரவு திருவேற்காடு நகராட்சி சுகாதார அலு வலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த கழிவுநீர் அகற்றும் லாரி குறித்து விசாரித்தனர். விசாரணை யில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த கழிவுநீர் அகற்றும் வாகனம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த வாகனத்தின் உரிமை யாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அந்த மருத்துவ மனை வளாகத்தில் தேவையின்றி வைக்கப்பட்டி ருந்த பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தேவையற்ற அந்த பொருட்களை அங்கி ருந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வா கத்திற்கு அறிவு றுத்தப் பட்டது. தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் அந்த மருத்துவ மனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×