search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
    X

    போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்

    • 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர்
    • ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

    போக்குவரத்துக்கு இடையோராக காற்றாலையுடன் லாரி நிற்பதால், அங்கு அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

    எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது குறித்த செய்தி மாலை மலரில் படத்துடன் வெளியானது.

    இதனையடுத்து வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் உத்தரவின்பேரில், திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் காளியப்பன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மொத்தம் 15 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கினர். மேலும் சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றியது, நீளமான காற்றாலை இறக்கைகள் எடுத்து செல்லும் வாகனங்கள் மற்றும் வரி செலுத்தாத வாகனங்கள் என 15 வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரி என ரூ.3 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    மேலும் இந்த வாகன தணிக்கை திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×