என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
8 டிரைவர்களுக்கு ரூ.34 ஆயிரத்து 800 அபராதம்
- லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பிராணிகள் வதை தடுப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜன் தலைமையிலான போலீசார் லாரிகளில் அதிகளவில் கால்நடைகளை ஏற்றி செல்லும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கு
இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவி உள்பட 8 டிரைவர்கள் மீது நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லாரிகளில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்றதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட கோர்ட்டு 8 டிரைவர்களையும் நேற்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட்டு விஸ்வ நாதன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.
அபராதம்
இருதரப்பு வாதங்க ளையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் ரவிக்கு ரூ.5 ஆயிரம், ஓலப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமிக்கு ரூ.4.800, ஈரோடு மணிகண்டனுக்கு ரூ.4,200, சத்தியமங்கலம் முருகேசனுக்கு ரூ.6 ஆயிரம், குணசேகரனுக்கு ரூ.6,600, ஈரோடு ஜெபருல்லா என்பவருக்கு ரூ.2 ஆயிரம், நீலகிரியை சேர்ந்த கலிமுல்லாவுக்கு ரூ.3 ஆயிரம், கேரளாவை சேர்ந்த ரகிம்மோன்ட் என்பவருக்கு ரூ.3,200 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மொத்தமாக 8 டிரைவர்களுக்கும் ரூ.34 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்