search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நாளில் 296 வாகனங்களுக்கு ரூ.25.22 லட்சம் அபராதம்
    X

    ஒரே நாளில் 296 வாகனங்களுக்கு ரூ.25.22 லட்சம் அபராதம்

    • கோவை உள்பட 3 மாவட்டங்களில் அதிகாரிகள் தணிக்கை சோதனை
    • போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை

    கோவை,

    கோவை, திருப்பூர், நீலகிரியில் உள்ள 11 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 5 பகுதி அலுவலகங்களை சேர்ந்த போக்குவரத்து துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு தணிக்கை குழுவி னர் நேற்று காலை முதல் மாலை வரை தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.

    இதில் மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராத மாக ரூ.25.22 லட்சம் விதிக்கப்பட்டு ள்ளது.

    இது தொடர்பாக கோவை மண்டல போக்கு வரத்து இணை ஆணையர் சிவகுமரன் கூறியதாவது:-

    அதிகம் பாரம் ஏற்றிய 53 வாகனங்கள், அதிக ஆட்களை ஏற்றிய 38 வாகனங்கள், வாகன காப்பீடு இல்லாத 45 வாகனங்கள், தகுதிச்சா ன்று இல்லாத 49 வாகனங்கள், புகை பரிசோதனை சான்று இல்லாத 13 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 41 வாகனங்கள், அனுமதி ச்சீட்டு இல்லாத 2 வாக னங்கள் என மொத்தம் 296 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்ப ட்டுள்ளது.

    இதில் பெரும்பாலா னவை லாரி, மேக்சி கேப், ஆட்டோ, சரக்கு ஆட்டோ, சுற்றுலா வேன் ஆகியவை ஆகும். தகுதிச்சான்று இல்லா மல் வாகனத்தை இயக்கி, வித்து ஏற்பட்டால் விபத்து காப்பீடு கிடை க்காது. அதோடு உரிய ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள் தான் வாகனத்தை இயக்க வேண்டும்.

    அதிக பாரம் ஏற்றி சென் றால் அபராத தொகை விதிக்கப்படும். எனவே அனுமதிக்கப்பட்ட எடையோடு தான் வாக னத்தை இயக்க வேண்டும்.

    இவ்வாறு இயக்குவது வாகனத்துக்கும், சாலை க்கும் பாதுகாப்பாக இரு க்கும்.

    விபத்துக்களையும் தவிர்க்க முடியும். இதுபோ ன்று தொடர்ச்சி யாக சோதனைகள் நடைபெறும் என்பதால், வாகன ஓட்டி கள் உரிய அனைத்து ஆவணங்களையும் வைத்தி ருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×