search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yashasvi Jaiswal"

    • டெஸ்ட் மேச்களில் 15 இந்திய வீரர்கள் சிக்சர் அடித்து 100-ஐ கடந்துள்ளார்கள்
    • ஜெய்ஸ்வால், டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து 100 ரன்களை கடந்தார்

    டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் குவிப்பது அவருக்கும் அவரது நாட்டிற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பெருமையை தரும் நிகழ்வு.

    90 ரன்களை தாண்டிய நிலையில், பேட்ஸ்மேன்கள், 100 ரன்களை குறி வைத்து நிதானமாக விளையாட முற்படுவது இயற்கை.

    தவறாக ஆடி விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்கவும், 4 அல்லது 6 அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்காமல் இருக்கவும் அதிக கவனம் எடுத்து கொள்வார்கள்.

    அபூர்வமாக ஒரு சில பேட்ஸ்மேன்கள், 90களை கடந்தாலும், பதட்டமின்றி, துணிச்சலுடன் சிக்சர் அடித்து முக்கிய 3 இலக்க மைல்கல்லான 100-ஐ கடப்பதுண்டு.

    டெஸ்ட் போட்டிகளில் 90களை தாண்டி விளையாடும் போது, சிக்ச்ர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்கள், 15 பேர் உள்ளனர்.

    சச்சின் டெண்டுல்கர் (6 முறை), ரோகித் சர்மா (3 முறை), கவுதம் கம்பீர் (2 முறை) கே எல் ராகுல் (2 முறை), ரிஷப் பண்ட் (2 முறை) ஆகியோருடன் பாலி உம்ரிகர், கபில் தேவ், முகமது அசாருதீன், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பத்தான், மகேந்திர சிங் டோனி, ஹர்பஜன் சிங், ஆர் அஸ்வின் மற்றும் சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 1 முறை நேரடியாக சிக்சர் அடித்து 100-ஐ தொட்ட இந்திய வீரர்கள்.

    பிப்ரவரி 2 அன்று விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 2-வது டெஸ்ட் மேட்சில், இந்திய இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal), டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து நூறு ரன்களை குவித்தார்.

    இப்போட்டியில், ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சென்சுரி அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சிக்சர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தை பிடித்தார், ஜெய்ஸ்வால்.

    • இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.
    • தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன்.

    இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 179 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு கொடுத்துள்ளனர் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஒவ்வொரு செஷனாக விளையாட விரும்பினேன். அவர்கள் நன்றாகப் பந்துவீசும்போது, நான் அந்த ஸ்பெல்லைக் கடக்க விரும்பினேன். ஆரம்பத்தில், விக்கெட் ஈரமாக இருந்தது மற்றும் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருந்தது. சிறிது சீம் இருந்தது. அதில் நான் சுமாரான பந்துகளை அடித்து கடைசி வரை விளையாட முயற்சித்தேன். இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.

    குறிப்பாக தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன். காலையில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பிட்ச் பின்னர் செட்டிலானது. இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்றச் சொன்னார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருங்கள் என ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு நம்பிக்கை அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது.
    • ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 257 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 179 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

    அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கும் சுனில் கவாஸ்கரின் (179) சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். முதல் இடத்தில் கருண் நாயர் உள்ளார். அவர் 2016-ம் ஆண்டு ஒரே நாளில் 232 ரன்கள் குவித்திருந்தார். 3-வது இடத்தில் முகமது அசாருதீன் (175) உள்ளார்.

    இந்திய மண்ணில் ஜெய்ஸ்வால் முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் இளம் வயதில் சதம் அடித்த 3-வது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஸ்வால் (22 ஆண்டுகள் 36 நாட்கள்) படைத்துள்ளார். இவருக்கு முன்னர் சச்சின் (19 ஆண்டுகள் 293 நாட்கள்) மற்றும் வினோத் காம்ளி (21 ஆண்டுகள் 32 நாட்கள்) உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக 150+ ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்கள் முறையே கம்பீர் (179 ரன்கள் மொகாலி 2008), கேஎல் ராகுல் (199 ரன்கள் சென்னை), ரோகித் சர்மா (161 ரன்கள் சென்னை).

    • இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    • இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான், பஷிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. ரஜத் படிதார் முதன்முறையாக இந்திய அணியில் அறிமுகம் ஆனார். மேலும் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்களிலும், அடுத்து வந்த சுப்மன் கில் களம் 34 ரன்களிலும் ஷ்ரேயஸ் அய்யர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் தனது 2-வது சதத்தை விளாசினார்.

    ஜெய்வாலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடிய ராஜத் பட்டிதார் 32 ரன்னில் பரிதாபமாக ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அக்ஷர் படேல் (27) மற்றும் பரத் (17) கட் ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷிர், ரெஹான், 2 விக்கெட்டும் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பர்றினர். ஜெய்ஸ்வால் 170 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வீரர்கள் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார்.
    • இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீரர்களான அக்சர் படேல் மற்றும் ஜெய்ஸ்வால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், தனது சிறந்த தரநிலையான 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இந்திய வீரர்களில் கெய்க்வாட் 9-வது இடத்தில் உள்ளார்.

    டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் மாற்றமின்றி அதே வீரர்களே தொடருகின்றனர். ஆனால் 5-வது இடத்தில் இருந்த இந்திய வீரரான ரவி பிஷ்னோயை பின்னுக்கு தள்ளி சக நாட்டவரான அக்சர் படேல் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அவுட்டானார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதமடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. திபேந்திர சிங் 32 ரன்னும், சந்தீப் ஜோரா, குஷால் மல்லா 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நேபாளம் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிக்வாட், ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் ஜெயிஸ்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 ரன்கள் எடுத்திருந்த கெயிக்வாட் அவுட்டானார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெயிஸ்வால் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    • 15.3 ஓவரில் 165 ரன்கள் குவித்தனர்
    • இந்தியா 17 ஓவரில் 179 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று புளோரிடாவில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சுப்மான் கில்- ஜெய்ஸ்வால் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    15.3 ஓவரில் இந்த ஜோடி 165 ரன்கள் குவித்தது. ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் அடித்தனர். சுப்மான் கில் 47 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 51 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 179 இலக்கை 17 ஓவரிலேயே எட்டியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய சுப்மான் கில் அதிரடி வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

    இந்த நிலையில் அப்போதைய சச்சின் டெண்டுல்கர்- சவுரவ் கங்குலி ஜோடியை போன்று இந்த ஜோடியால் ஆக முடியும் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

    இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் சமமான திறனைப் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய வகையில், ஒருவருக்கொருவர் பேட்டிங் செய்ய முடியும். அதற்கான வழியை அவர்கள் தேடுவது அவசியம். அவ்வாறு செய்தால், இந்திய அணியின் அபாயகரமான தொடக்க வீரர்களாக பல ஆண்டுகள் நீடிப்பார்கள். அவர்கள் சச்சின் டெண்டுல்கர்- கங்குலி போன்று சிறந்த ஜோடியாக திகழ்வார்கள்.

    அவர்கள் ஆட்டத்தின் சில பிரச்சனைகளை அவர்கள் கண்டுபிடித்து, அதை சரியான முறையில் செய்தால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பலனாக அமையும்'' என்றார்.

    • பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார்.
    • இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்ததன் மூலமாக 15 ஆண்டுகால சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்து வளர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 18-வது வயதில் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதில், அவர் 3 போட்டிகளில் 40 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தனது 19-வது வயதில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்கள் குவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 10 போட்டிகளில் விளையாடி 258 ரன்கள் குவித்தார்.

    இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் மட்டும் அவர் 87 பவுண்டரி மற்றும் 26 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 15 ஆண்டுகாலம் நீடித்த ஒரு சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்து, சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008-ம் ஆண்டு ஷான் மார்ஷ் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை 21 வயதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    • ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
    • எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஐபிஎல் தொடரில் அதிவேக அரைச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    இந்த போட்டியில் 2-வது ராஜஸ்தான் அணி விளையாடியது. இதன் முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா வீசினார். அதில் 26 ஓட்டங்களை ராணா வழங்கியிருந்தார்.

    ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும் என கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியுள்ளார்.

    இது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா கூறியிருப்பதாவது:-

    ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆட்டத்தில் அவர் என்ன நினைத்தாலும் அது நடந்தது. இந்த மைதானத்தில் 180 ரன்கள் அடித்தால் சரியாக இருக்கும் என்று ராசின் போது கூறினேன். ஆனால் எங்களது பேட்டிங் இன்று சிறப்பாக அமையவில்லை. இறுதியில் இரண்டு புள்ளிகளை நாங்கள் இழந்து விட்டோம்.

    ஜெய்ஸ்வால் இந்த தொடர் முழுவதுமே துவக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே இந்த போட்டியில் ஒரு பார்ட் டைம் ஸ்பின்னராக முதல் ஓவர் வீசுவதில் அவ்வளவு பாதகம் இருக்காது என்று நினைத்தேன்.

    மேலும் பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரில் சுதாரித்து ஆடுவார்கள் என்று திட்டமிட்டேன். ஆனால் ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே இப்படி ஆடுவார் என்று எனக்கு தெரியாது.

    இவ்வாறு நிதிஷ் ராணா கூறினார்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் நேற்று 56-வது லீக் போட்டியில் கொல்கத்தா -ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 149 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ராஜஸ்தான் அணி 6-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.

    முன்னதாக இந்த போட்டியில் சரவெடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதமடித்தது போலவே சதத்தையும் நெருங்கினார். அந்த நிலைமையில் சூயஸ் சர்மா வீசிய 12.3 -வது பந்தில் பவுண்டரி அடித்த அவர் 4-வது பந்தில் ரன்கள் எடுக்காத நிலையில் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 94* ரன்களை எட்டினார். அந்த நிலைமையில் கடைசி பந்தை எதிர்கொண்ட சஞ்சு சாம்சன் தாம் 48* ரன்களில் இருந்த போது அரை சதமடிக்கலாம் என்ற சுயநலமின்றி அப்படியே தடுத்து நிறுத்தி அடுத்த பந்தில் சிக்சர் அடித்து சதமடிக்குமாறு ஜெயிஸ்வாலுக்கு கையை உயர்த்தி மகிழ்ச்சியுடன் சிக்னல் கொடுத்தார்.

    குறிப்பாக 2014 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றியை உறுதி செய்த விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது புதிதாக களமிறங்கிய கேப்டன் டோனி ஒரு ஓவரின் கடைசி பந்தில் அடிப்பதற்கேற்றார் போல் பந்து நன்றாக வந்தும் அப்படியே தடுத்து நிறுத்தி விராட் கோலிக்கு ஃபினிஷிங் செய்யும் வாய்ப்பு கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல இந்த போட்டியில் பெருந்தன்மையுடன் சுயநலமின்றி கேப்டனுக்கு அடையாளமாக சஞ்சு சாம்சன் செயல்பட்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்து பாராட்ட வைத்தது.

    ஆனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க கூடாது என்பதற்காக அதே கடைசி பந்தை வேண்டுமென்றே சூயஸ் சர்மா ஒய்ட் போல லெக் சைட் வீச முயற்சித்தார். இருப்பினும் அந்த சமயத்தில் சுதாரித்த சஞ்சு சாம்சன் இடது புறமாக நகர்ந்து சென்று அடிக்காமல் ஒய்ட் பந்தாக மாறாமல் தடுத்து நிறுத்தினார். அதற்கடுத்த ஓவரில் ஜெய்ஸ்வால் பவுண்டரி மட்டுமே அடித்து 98* ரன்கள் எடுத்து சதத்தை நழுவ விட்டது வேறு கதை. ஆனால் ஒய்ட் போட்டு அதில் 1 ரன் எக்ஸ்ட்ரா வழங்கி மீண்டும் பந்து வீசினால் சஞ்சு சாம்சன் வெற்றி பெறும் ரன்களை எடுப்பார். அதனால் ஜெய்ஸ்வால் சதமடிக்க முடியாது என்ற எண்ணத்துடன் வேண்டுமென்றே கடைசி பந்தை ஒய்ட் போல வீசிய சூயஸ் சர்மாவை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அத்துடன் ஏற்கனவே ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக இதே போல் கடைசி பந்தில் சதமடிக்கும் வாய்ப்பை பெற்ற சேவாக் சிக்சர் அடித்து 100 ரன்களை தொட்ட போதிலும் சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே நோபால் வீசி அதை தடுத்த கேவலமான திட்டத்தை யாராலும் மறக்க முடியாது.

    கிட்டத்தட்ட இந்த போட்டியில் தங்களது பிளே ஆப் சுற்று வாய்ப்பைப் பறித்த ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கொல்கத்தா மற்றும் சூயஸ் சர்மா அவ்வாறு செயல்பட்டதால் ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    • கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் 6-வது வெற்றி பெற்றது.
    • கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் 13.1 ஓவரில் ஒரு விக்கெட் டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

    ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்கள் குவித்தார். அவர் 13 பந்தில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ஆட்டநாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    மைதானத்துக்குள் சென்று நன்றாக விளையாட வேண்டும் என்று என் மனதில் எப்போதும் இருக்கும். நாங்கள் வெற்றி பெற்றது நல்ல உணர்வை அளிக்கிறது. எல்லாம் சரியாக நடந்தது போல் இல்லை. ஆனால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

    செயல்முறை மிகவும் முக்கியம். கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றிபெற கற்றுக் கொண்டுள்ளேன். ரன் ரேட்டை உயர்த்த விரும்பினேன். சதத்தை பற்றி நான் யோசிக்கவில்லை.

    இதுபோன்று நடப்பது இயல்பு. சஞ்சு சாம்சன் என்னிடம் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். சிறந்த வீரர்களுடனும் விளையாடுவது பாக்கியம். இளம் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஒரு சிறந்த தளமாக இருக்கிறது என்றார்.

    ×