search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யஷஸ்வி ஜெய்ஸ்வால்"

    • நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
    • இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜெய்ப்பூர்:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.

    ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு  உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
    • மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணிக்கு பிரச்சினையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கிளப் பிரையர் ஃபயர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு பிரச்சினையாக உள்ளார் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து பேசிய அவர், "இங்கிலாந்து அணிக்கு அவர் பிரச்சினை என்று நான் சொல்வேன். அவர் நம்பவே முடியாத வீரர். நான் அவரை மும்பையில் சந்தித்தேன், மறுநாளே அவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிராக சதம் விளாசினார். தற்போது அவர் உலகின் சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசி இருக்கிறார்," என்று தெரிவித்தார்.

     


    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய மூன்றாவது இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக வினோத் காம்ப்ளி தனது 21 ஆண்டுகள் 35 நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 224 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து சுனில் கவாஸ்கர் தனக்கு 21 ஆண்டுகள் 283 நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 220 ரன்களை விளாசினார். இவர்கள் வரிசையில் தற்போது ஜெய்ஸ்வால் தனது 22 ஆண்டுகள் 37-வது நாளில் இரட்டை சதம் விளாசியுள்ளார். 

    • டெஸ்ட் மேச்களில் 15 இந்திய வீரர்கள் சிக்சர் அடித்து 100-ஐ கடந்துள்ளார்கள்
    • ஜெய்ஸ்வால், டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து 100 ரன்களை கடந்தார்

    டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் குவிப்பது அவருக்கும் அவரது நாட்டிற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பெருமையை தரும் நிகழ்வு.

    90 ரன்களை தாண்டிய நிலையில், பேட்ஸ்மேன்கள், 100 ரன்களை குறி வைத்து நிதானமாக விளையாட முற்படுவது இயற்கை.

    தவறாக ஆடி விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்கவும், 4 அல்லது 6 அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்காமல் இருக்கவும் அதிக கவனம் எடுத்து கொள்வார்கள்.

    அபூர்வமாக ஒரு சில பேட்ஸ்மேன்கள், 90களை கடந்தாலும், பதட்டமின்றி, துணிச்சலுடன் சிக்சர் அடித்து முக்கிய 3 இலக்க மைல்கல்லான 100-ஐ கடப்பதுண்டு.

    டெஸ்ட் போட்டிகளில் 90களை தாண்டி விளையாடும் போது, சிக்ச்ர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்கள், 15 பேர் உள்ளனர்.

    சச்சின் டெண்டுல்கர் (6 முறை), ரோகித் சர்மா (3 முறை), கவுதம் கம்பீர் (2 முறை) கே எல் ராகுல் (2 முறை), ரிஷப் பண்ட் (2 முறை) ஆகியோருடன் பாலி உம்ரிகர், கபில் தேவ், முகமது அசாருதீன், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பத்தான், மகேந்திர சிங் டோனி, ஹர்பஜன் சிங், ஆர் அஸ்வின் மற்றும் சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 1 முறை நேரடியாக சிக்சர் அடித்து 100-ஐ தொட்ட இந்திய வீரர்கள்.

    பிப்ரவரி 2 அன்று விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 2-வது டெஸ்ட் மேட்சில், இந்திய இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal), டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து நூறு ரன்களை குவித்தார்.

    இப்போட்டியில், ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சென்சுரி அடித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் சிக்சர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தை பிடித்தார், ஜெய்ஸ்வால்.

    • முதலில் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அவுட்டானார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை நடைபெற்ற முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் சதமடித்து அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 15 பந்தில் 37 ரன்கள் சேர்த்தார்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி களமிறங்கியது. திபேந்திர சிங் 32 ரன்னும், சந்தீப் ஜோரா, குஷால் மல்லா 29 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், நேபாளம் 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதமடித்தார்.

    பீஜிங்:

    ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

    இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிக்வாட், ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் ஜெயிஸ்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 ரன்கள் எடுத்திருந்த கெயிக்வாட் அவுட்டானார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெயிஸ்வால் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

    • ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
    • இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13.1 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 98 ரன்களும், சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 48 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார்.

    மேலும், கே.எல்.ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் 14 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.

    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார்.
    • ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி சதத்தால் 212 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

    ஜெய்ஸ்வால் சதம் அடித்ததன் மூலம் ஐபிஎல்லில் இளம் வயதில் சதமடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 21 வயது 123 நாட்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்துள்ளார். இதன்மூலம் 22 வயதில் சதமடித்த சஞ்சு சாம்சனை 5-ம் இடத்திற்கு தள்ளி 4-ம் இடத்தை பிடித்துள்ளார். மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய மூவரும் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    அவர் 62 பந்தில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 124 ரன்களை குவித்தார். தேசிய அணியில் இடம்பிடிக்காத ஒரு வீரர் ஐபிஎல்லில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் இரட்டை சதமடித்தார்.
    • இரண்டாவது இன்னிங்சில் 144 ரன்கள் குவித்தார்.

    இரானி கோப்பை போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    ரஞ்சி தொடரின் முன்னாள் சாம்பியன் அணியுடன், மற்ற அணிகளை சேர்ந்த வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி என்ற பெயரில் மோதும் போட்டி இரானி கோப்பை போட்டி ஆகும். அந்தவகையில் மத்திய பிரதேசம் மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டி குவாலியரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அபிமன்யூ ஈஸ்வரனும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 2-வது விக்கெட்டுக்கு 371 ரன்களை குவித்தனர். சதமடித்த அபிமன்யூ ஈஸ்வரன் 154 ரன்கள் அடித்தார். அபாரமாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 213 ரன்களை குவித்தார். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 484 ரன்களை குவித்தது.


    இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி, யஷ் துபேவின் சதத்தால்(109) 294 ரன்கள் அடித்தது. மற்ற வீரர்கள் யாரும் பெரிய பங்களிப்பு செய்யாததால் அந்த அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.

    190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் சிறப்பாக பேட்டிங் ஆடி சதமடித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 144 ரன்களை குவிக்க, 2-வது இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 246 ரன்கள் அடித்தது. மொத்தமாக 436 ரன்கள் முன்னிலை பெற, மத்திய பிரதேச அணி 437 ரன்கள் என்ற கடின இலக்கை ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிர்ணயித்தது.

    இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இரட்டை சதம்(213) மற்றும் 2-வது இன்னிங்சில் சதமடித்ததன் (144) மூலம், இரானி கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் மற்றும் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

    இரானி கோப்பையின் ஒரு பதிப்பில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இரானி கோப்பை போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.

    ×