என் மலர்
கிரிக்கெட் (Cricket)

1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால்- வைரலாகும் வீடியோ
- ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
- 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் 175 ரன்னை எடுத்தார்.
புதுடெல்லி:
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது.
ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (87 ரன்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.
இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.
போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் இந்த ரன்னை எடுத்தார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
அவர் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கூட பிரகாசமாக இருந்தது. அதனையும் அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம்.
4-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார். 96.1-வது ஓவரில் இந்திய அணி 350 ரன்னை தொட்டது.






