search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்ஸ்வால்"

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    • ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 2 இரட்டை சதம் உள்பட மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 2 இரட்டை சதம் அடித்தார். 5 டெஸ்டில் மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது பேஸ்பால் யுக்தி என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடியதற்காக எங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த மட்டமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன், ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடுவதை கற்றுக் கொண்டார் என தக்க பதிலடி கொடுத்தார்.

    இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

    நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கடந்த 9 மாதத்தில் என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு கேப்டன ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம்.

    வீரர்களின் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். நான் இந்த இருவரிடமும் நிறைய பேசி இருக்கிறேன். அவர்களது ஆலோசனை பெரிதும் உதவியது என தெரிவித்தார்.

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
    • இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்தார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.

    சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
    • 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெய்ஸ்வால். அதில், "இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

    நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.

    இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார். 

    • டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர்
    • கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் திணறடித்தனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர் என தெரிவித்தார்.

    பின்னர், ஓய்வு அறிவிப்பு குறித்து ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ''எப்போது எனது ஆட்டம் போதுமானதல்ல என்று தோன்றுகிறதோ, அன்றைய நாளில் உடனடியாக ஓய்வை அறிவித்துவிடுவேன். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எனது ஆட்டத்தை மெருகேற்றி இருக்கிறேன். என் வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை ஆடி வருவதாக உணர்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த அவர், தற்போது 17ஆவது சீசனில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ரோகித் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித், கில் சதம் அடித்து அசத்தினர்.
    • ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான், படிக்கல் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோரின் அரைசதங்களால் முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய ரோகித், கில் சிறப்பாக சதம் அடித்து அவுட் ஆகினர். இதனையடுத்து வந்த சர்ப்ராஸ் கான், படிக்கல் அரை சதம் அடித்து அவுட் ஆனார்கள். இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, சுப்மன் கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து 218 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது.

    தர்மசாலா:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்களும், பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடியதால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக விளையாடி அரை சதமடித்த ஜெய்ஸ்வால் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோகித் சர்மாவும் அரைசதம் அடித்தார்.

    இறுதியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்களை எடுத்துள்ளது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது இங்கிலாந்து அணியை விட 83 ரன்கள் இந்திய அணி பின்தங்கி உள்ளது.

    • இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
    • ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 11-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 2-ம் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். டாப் 10 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 10-ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். விராட் கோலி 1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் ரோகித் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் 4-ம் இடத்திற்கும், நாதன் லையன் 6-ம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
    • விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

    2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

    முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.

    இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.

    அதில், "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
    • ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.

    இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.

    முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.

    டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுமையாக ஆடிய துருவ் ஜுரல் அரை சதம் கடந்தார். 8வது விக்கெட்டுக்கு துருவ் ஜுரல், குல்தீப் யாதவ் ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் 28 ரன்னில் அவுட்டானார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார்.
    • டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார்.

    5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும்

    சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர், 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 774 ரன்கள் குவித்ததே இதுவரை தனிப்பட்ட இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    மேலும், டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 219 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், 2ம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×