search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vivek"

    எழுமின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட பேசிய விவேக்கின் கோரிக்கையை அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் உடனே ஏற்றுக் கொண்டிருக்கிறார். #Ezhumin
    ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார். 



    18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.

    அதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.



    மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

    விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.
    நடிகர் விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ திரைப்படம் விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘வட சென்னை’ திரைப்படத்துடன் மோத இருக்கிறது. #Ezhumin
    வையம் மீடியாஸ் சார்பில் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.

    முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி 2” திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. #Ezhumin #Vivek
    வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த இவர், இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படம் சென்சாரில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.



    இதையடுத்து அக்டோபர் 5ம் தேதி இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 
    மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும் என்று எழுமின் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்தார். #Ezhumin #Vivek #HipHopAdhi
    “வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் நடைபெற்றது.

    இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.



    “எழுமின் முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது. இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன். காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது” என்று பேசினார். #Ezhumin #Vivek #HipHopAdhi

    பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோரை பிரசார தூதர்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்திருக்கிறார். #PlasticAwareness
    சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழக அரசு வருகிற 2019 ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையிலும், இது தொடர்பாக அரசுத் துறைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” இலச்சினை, மற்றும் வலைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

    பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களையும் வெளியிட்டார்.

    திரைப்பட பிரபலங்கள் மூலமாக மக்களிடையே பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள், சணல் பைகள், காகித பைகள் போன்றவற்றை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

    இதன் தொடாச்சியாக, மாவட்ட அளவில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” பிரச்சாரத்தை வருகிற 25-ந்தேதி மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் துவக்கி வைப்பார்கள்.



    மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் தட்டு, கோப்பை போன்ற பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிகத்துறை மூலமாக மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான 21 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை 5 தொழில் முனைவோர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூறியதாவது:-

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் சுகாதாரமான வாழ்க்கையை நாம் அடைய முடியும். பிளாஸ்டிக் பொருட்களினால், பொது மக்களுக்கு பல்வேறு இன்னல்களும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்ற காரணத்தினாலே இதை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

    பிளாஸ்டிக்கை முழுமையாக தடை செய்வதற்கு விளம்பரத் தூதுவர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்திக், நடிகை ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

    சூர்யா, கார்த்திக், ஜோதிகா ஆகியோருக்கு படப்பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Goundamani
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் கவுண்டமணி, விவேக், வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Goundamani #Vivekh

    தற்காப்பு கலையை மையமாக வைத்து விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். #Ezhumin #Dhanush
    தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”,  “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

    இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய வி.பி.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

    நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார். அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் வி.பி.விஜி. மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.



    தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி முதன்மைக் கதாபாதிரங்களாக நடித்திருக்கிறார்கள். வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.
    விவேக் மற்றும் தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படக்குழுவினரை கேரள அமைச்சர் அழைத்து பாராட்டி இருக்கிறார். #Ezhumin #Vivek
    வையம் மீடியாஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. இப்படத்தில் விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

    இந்நிலையில் “எழுமின்” திரைப்படத்தின் டிரைலரை பார்த்த கேரள விளையாட்டு மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. A.C. மொய்தீன், கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் அவர்களின் உள்துறை செயலாளர் திரு. M.V. ஜெயராஜன் ஆகியோர் படக்குழுவினரை அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.



    மேலும், இதுபோல சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் கூறும் படங்களைத் தொடர்ந்து எடுக்க வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். தற்காப்பு கலையை மையமாக மைத்து உருவாகி இருக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 
    சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விசுவாசம்’ படத்தில் நான்கு வருடங்களுக்குப் பிறகு பிரபல நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார். #Ajith #Viswasam
    சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 27ம் தேதி தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

    இந்த படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்துடன் நடிகர் விவேக் இணைந்து நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அஜித்துடன் நடிகர் விவேக் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருக்கிறார். நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.



    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    அரசு பள்ளி ஆசிரியர் பகவான் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். அவரை ஏ.ஆர்.ரகுமான், ஹிருத்திக் ரோஷன், விவேக் உள்ளிட்டோர் பாராட்டினர். #TeacherBhagavan #ARRahman #HrithikRoshan #Vivek
    பள்ளிப்பட்டு:

    மக்களிடையே தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் அரசு பள்ளிகளை தற்போது புறக்கணித்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து சில அரசு பள்ளிகளை மூடுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    அதே சமயம் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு ஒரு காலத்தில் தனி மரியாதை இருந்து வந்தது. ஆனால் இப்போது ஆசிரியர்-மாணவர்கள் உறவு மெச்சத்தக்கவகையில் இல்லை. இருப்பினும் இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்.

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பகவான். பாடம் எடுக்கும் அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட அக்கறை போன்ற காரணங்களால் இப்பள்ளி மாணவர்களுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. மேலும் பகவானின் அயராத முயற்சியால் இந்த பள்ளி ஆங்கிலத்தில் 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

    இந்த சூழ்நிலையில் பகவானுக்கு, திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்ய உத்தரவு வந்தது. இதை அறிந்த மாணவ-மாணவிகள் அவரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாது என பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் அரசு உத்தரவின் பேரில் வேறு வழியின்றி பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்க வந்த பகவானை, வெளியே செல்ல விடாமல் மாணவ-மாணவிகள் தடுத்து கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதையடுத்து பகவான் அதே பள்ளியில் 10 நாட்கள் பணிபுரிய அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

    மாணவர்கள் - ஆசிரியர் இடையே நடந்த இந்த பாச போராட்ட காட்சிகள் பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது. இது வழக்கமான இடமாற்றம் தான். ஆனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் மாணவர்களின் அன்பால் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. பகவானை கட்டிப்பிடித்து மாணவர்கள் அழுத காணொலியை கண்ட பலரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆசிரியர்-மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற படத்தில் மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருந்தது. அன்று திரையில் நிகழ்ந்தது, தற்போது வெளியகரம் அரசு பள்ளியில் நிஜமாகி இருக்கிறது.

    பகவான் பற்றிய செய்தியை பார்த்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குரு-சிஷ்யர்கள் என்று பாராட்டி பூங்கொத்து படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.



    இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் டுவிட்டரில், ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த இந்த பாசப்பிணைப்பு நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது, ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.

    நடிகர் விவேக் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒரு ஆசிரியரின் இடமாற்றம், மாணவர்களை கதறி அழ செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்து பாருங்கள். அவருக்கு சிறந்த ஆசிரியருக்கான (நல்லாசிரியர்) ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். பணிமாறுதலை 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் விவேக் மற்றொரு பதிவில், ‘சூப்பர். பள்ளிக்கல்வித்துறை மற்றும் அதன் அமைச்சருக்கும், உயர்கல்வி அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    இதேபோல சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இதனிடையே திருத்தணி கல்வி மாவட்ட அதிகாரி அருட்செல்வன் நேற்று வெளியகரம் பள்ளிக்கு திடீரென சென்று ஆவணங்களை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளின் மனநிலையை அவர் கேட்டறிந்தார். ஆசிரியர் பகவான் உள்பட அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

    கூட்டம் முடிந்ததும் மாவட்ட கல்வி அதிகாரியை செய்தியாளர்கள் சந்தித்து, ஆசிரியர் பகவான் தொடர்ந்து இதே பள்ளியில் நீடிப்பாரா? அல்லது வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவாரா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அதை முதன்மை கல்வி அதிகாரி தான் முடிவு செய்வார் என கூறிவிட்டு சென்றார்.  #TeacherBhagavan #ARRahman #HrithikRoshan  #Vivek
    சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்க பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், நடிகர் விவேக் பிரேசில் போல் அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். #Vivek
    சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.

    ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.



    இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து நடிகர் விவேக் மீள முடியாமல் இருக்கிறார். #Vivek
    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

    ‘ஏன் tweet செய்வதில்லை என்று கேட்கிறார்கள். மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள, நாட்கள் ஆகலாம். சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களைக் கீறி விட்டு விட்டனவே’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ×