என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Plastic Awareness"
- பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.
புதுச்சேரி:
பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரி ஆரோக்கியம் கிளாண்டின் வரவேற்றார். வெற்றிவேல் நோக்கவுரை வழங்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் 50 பேர் பாகூர் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள குளத்தைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பேரணியாகச் சென்று பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கும்படி எடுத்துக்கூறி–னர்.
10 சாக்குகளில் சேகரித்த பிளாஸ்டிக் குப்பைகளை பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி முன்னிலையில் ஒப்படைத்தனர். முடிவில் மனையியல் விரிவுரையாளர் அகிலா நன்றி கூறினார்.
- கலெக்டர் உத்தரவின்பேரில் குப்பம்மாள்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி கொடைக்கானல் கீழ்மலை கே.சி.பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம்மாள்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா இளையராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது. முடிவில் ஊராட்சி செயலர் ரெங்கராஜேந்திரன் நன்றி கூறினார்.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குப்பைகளை தரம் பிரித்து தர வலியுறுத்தல்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சென்னாவரம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவையற்ற பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது துணிப்பை மட்டும் உபயோகிக்க வேண்டும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்