என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » green corridor
நீங்கள் தேடியது "Green Corridor"
சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்க பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில், நடிகர் விவேக் பிரேசில் போல் அமைக்க வாய்ப்பிருக்கிறதா என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். #Vivek
சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலை என்ற பெயரில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரம், திருவண்ணாமலை, அரூர் வழியாக இந்த புதிய சாலை அமைகிறது. தற்போது சேலம் செல்ல 4 வழிச்சாலைகள் உள்ளன. இவை 330 கிலோ மீட்டர் தூரம் கொண்டவை.
ஆனால் பசுமை வழிச்சாலையின் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். அதே போல் பயண நேரமும் வெகுவாக குறையும். தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகிறது. பசுமை வழிச்சாலை அமைந்தால் பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும். கிராமங்களும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இந்த வழித்தடத்தில் உள்ள 8 மலைகளை உடைத்தும் 3 இடங்களில் மலைகளை குடைந்து குகை வழியாகவும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் இயற்கை வளங்கள் அழியும் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன். pic.twitter.com/MXTQpFZ6fn
— Vivekh actor (@Actor_Vivek) June 20, 2018
இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தேசக்கட்டுமானம் முக்கியம் தான். ஆனால் காடுகள்,வயல்கள் அழிவது மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரும் அபாயம் அல்லவா? பிரேசில் போல் மாற்று ஏற்பாட்டில் பாலமாக போட இயலுமா? பொறியியல் வல்லுனர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
நோயாளியின் அறுவை சிகிச்சைக்காக மதுரையில் இருந்து டெல்லிக்கு பறந்து வந்த இதயத்தை, விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு சாலை வழியாக 13 நிமிடங்களில் எடுத்துச் சென்றனர். #Delhi #Airport #Hospital #Heart
புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்த 45 வயது ஆசாமிக்கு இதயத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கங்காராம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அவருக்கு பொருத்துவதற்கான இதயம் மதுரையில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, மதுரையில் இருந்து டெல்லிக்கு தனி விமானம் மூலம் இதயம் பறந்து வந்தது. டெல்லி விமான நிலையம் வந்த இதயம் டாக்டர்கள் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது கங்காராம் மருத்துவமனை. எனவே, இதயத்தை பாதுகாப்பாகவும், விரைவாகவும் கொண்டு வந்து நோயாளிக்கு பொருத்த முடிவு செய்தனர். இதற்காக போக்குவரத்து போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர்.
அதன்படி, இதயத்தை சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் மருத்துவமனை சென்று சேருவதற்கு வசதியாக போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. இதனால் 13 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 11 நிமிடங்களில் கடந்த இதயம் கங்காராம் மருத்துவமனையை அடைந்தது. அதன்பின் டாக்டர்கள் இதய் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
மதுரையில் இருந்து டெல்லி மருத்துவமனைக்கு வந்த இதயத்தை, விரைவாக கொண்டுவர உதவிய நல் உள்ளங்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #Delhi #Airport #Hospital #Heart
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X