search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவேக்
    X

    தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் விவேக்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து நடிகர் விவேக் மீள முடியாமல் இருக்கிறார். #Vivek
    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

    ‘ஏன் tweet செய்வதில்லை என்று கேட்கிறார்கள். மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள, நாட்கள் ஆகலாம். சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களைக் கீறி விட்டு விட்டனவே’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    Next Story
    ×