search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vijay mallya"

    வங்கிகளில் பெற்ற அனைத்து கடனையும் திருப்பி செலுத்த தயார் என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya

    லண்டன்:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா (62) வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று விட்டார். தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக முயற்சி மேற் கொண்டுள்ளது.

    இந்த நிலையில் அவர் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “நான் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்ட குற்றவாளி என அரசியல்வாதிகளும், ஊடகங்களும் உரத்த குரலில் கூறி வருகின்றனர். இவை அனைத்தும் தவறானவை.

    கடன் தொகையை செலுத்த கர்நாடக ஐகோர்ட்டு முன் ஒப்புக் கெண்டேன். அதன்பிறகும் என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனைஅளிக்கிறது.

    விமான எரிபொருள் விலை ஏற்றத்தின் காரணமாகவே எனது கிங் பி‌ஷர் விமான நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெய் விலை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பேரல் 140 அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்ததால் கிங் பி‌ஷர் விமான நிறுவனம் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டது.

     


    நஷ்டம் அதிகமானதால் வங்கியில் பணம் பெற வேண்டி வந்தது. தற்போது நான் கடன் பெற்ற அசல் தொகையில் 100 சதவீதத்தையும் திரும்ப செலுத்த தயாராக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மிகப்பெரிய மதுபான ஆலை குழுமத்தை நடத்தியிருக்கிறேன்.

    மாநில அரசுகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை வரியாக அளித்து இருக்கிறேன். கிங்பி‌ஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மாநிலங்களில் நல்லதொரு வருவாயை தந்துள்ளது.

    ஆனால் துரதிருஷ்டவசமாக விமான நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இருந்தாலும் தற்போது வங்கிகளுக்கு நான் பெற்ற கடன் தொகையை செலுத்த தயாராக இருக்கிறேன். அதனால் நஷ்டம் எதுவும் இல்லை.

    என்னை இந்தியாவுக்கு அழைத்து வர வேகமாக தீவிரம் காட்டப்படுகிறது. இது ஒரு சட்டப் பிரச்சினை. ஆனால் அதில் மிக முக்கியமானது மக்கள் பணம்தான். அதை 100 சதவீதத்தையும் முழுமையாக திரும்ப தருவதாக கூறுகிறேன். வங்கிகளும், அரசும் அதை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திரும்ப தரும் தொகையை ஏற்க மறுப்பது ஏன்?” என தெரிவித்துள்ளார்.

    விஜய் மல்லையா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிசெலை இந்தியாவுக்கு நாடு கடத்த துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது.

    நாடு கடத்தல் விவகாரத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இதேபோன்று மல்லையா, நிரவ்மோடி மற்றும் மெகுல் ஜோக்கி ஆகியோரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே விஜய் மல்லையா மீதான நாடு கடத்தல் வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. #VijayMallya

    விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற பலவற்றுக்காக அவரது உல்லாச படகை விற்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மால்டா கோர்ட்டில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. #VijayMallya
    லண்டன் :

    தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனை வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாச படகு ஒன்று மால்டா தீவில் கைப்பற்றப்பட்டது. விஜய் மல்லையா தரவேண்டிய கடன், வழங்கப்படாத சம்பளம் போன்ற பலவற்றுக்காக அந்த உல்லாச படகை விற்க முடிவு செய்யப்பட்டு, அதன்படி மால்டா கோர்ட்டில் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது.

    எனவே அந்த தொகையில் இருந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்பட அனைத்து இந்திய வங்கிகளும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. #VijayMallya
    விஜயமல்லையா வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். தற்போது லண்டனில் அடமானம் வைக்கப்பட்ட வீட்டை மீட்கும் முயற்சியில் மல்லையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. #vijaymallya

    லண்டன்:

    கர்நாடக தொழில் அதிபர் விஜயமல்லையா ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

    அங்கு ரீஜன்பார்க் என்ற இடத்தில் விஜயமல்லையாவுக்கு பிரமாண்ட பங்களா வீடு உள்ளது. இந்த பங்காள விஜயமல்லையா மற்றும் அவரது தாயார், மகன் பெயரில் நடத்தப்படும் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளது. இதை 2005-ம் ஆண்டு அவர்கள் வாங்கினார்கள்.

    2012-ம் ஆண்டு இந்த வீட்டை சுவிஸ் வங்கியான யு.பி.எஸ். வங்கியில் அடமானம் வைத்து ரூ.160 கோடி கடன் பெற்றனர். 5 ஆண்டுகளில் அதை இதை திருப்பி செலுத்துவதாக நிபந்தனையுடன் கடன் வாங்கினார்கள். ஆனால் பணத்தையும் திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் கட்டவில்லை.

    எனவே வீட்டை கைப்பற்றும் வகையில் சுவிஸ் வங்கி இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ராயல் கோர்ட்டில் நீதிபதி மாஸ்டர்மாஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.

    நேற்று இதன் விசாரணை நடந்தது. அப்போது விஜய மல்லையாவின் வக்கீல்கள் வங்கி எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. வீட்டை கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார்கள்.

    ஏற்கனவே கோர்ட்டு வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதிக்குள் முழு தொகையையும் கட்ட வேண்டும். இல்லை என்றால் வீட்டை வங்கியிடம் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று வக்கீல்கள் வாதாடினார்கள். அதையும் நீதிபதி ஏற்கவில்லை.

    குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்துவதற்கான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, இந்த கடன் நடைமுறையில் விஜய மல்லையா நிறுவனம் பல விதிமுறைகளை மீறி இருக்கிறது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

    வழக்கு செலவுக்காக குறிப்பிட்ட பணம் தர வேண்டும் என்று வங்கி கேட்டிருந்தது. அதன்படி 88 ஆயிரம் பவுண்டு பணத்தை (இந்திய பணம் மதிப்பு ரூ.80 லட்சம்) வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    மேலும் இந்த விவகாரத்தை கோர்ட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

    வழக்கு விசாரணையின் போக்கு விஜயமல்லையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் விஜய மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பும்படி மத்திய அரசு கேட்டுள்ள வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

    கடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்ததாக மும்பை கோர்ட்டில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya #ED #MumbaiCourt
    மும்பை:

    புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு தனது வக்கீல் மூலமாக விஜய் மல்லையா நேற்று பதில் அளித்தார்.

    அதில் அவர் கூறி இருந்ததாவது:-

    கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த நான் தொடர்ந்து முயன்று வருகிறேன். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்தது. பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறது. லண்டன் கோர்ட்டில், என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனவே, நான் இந்தியாவுக்கு வர மறுப்பதாக கூறுவது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அடுத்தகட்ட விசாரணையை, 28-ந் தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி ஒத்தி வைத்தார். #VijayMallya #ED #MumbaiCourt 
    விஜய் மல்லையா தனது லண்டன் வங்கி கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக்கு ரூ.170 கோடி பண பரிமாற்றம் செய்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. #vijayMallya #CBI
    புதுடெல்லி:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.

    வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதுபற்றி வழக்கு தொடர்ந்ததும் விஜய் மல்லையா கடந்த 2015-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்.

    மல்லையா செய்த மோசடி பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை சி.பி.ஐ. திட்டமிட்டு தப்ப விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

    மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்அவுட் நோட்டீசை திருத்தி சி.பி.ஐ. மெத்தனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை சி.பி.ஐ. அதிகாரிகள் மறுத்துள்ளனர்.



    இந்த நிலையில் விஜய் மல்லையா தனது லண்டன் வங்கி கணக்கில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிக்கு ரூ.170 கோடி பண பரிமாற்றம் செய்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு பொருளாதார பிரிவு அதிகாரிகள் மூலம் இந்த தகவல் சி.பி.ஐ.க்கு வந்துள்ளது.

    அதன்பேரில் மல்லையா மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதோடு மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. #VijayMallya #CBI
    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளித்துள்ளது. #VijayMallya #CBI

    புதுடெல்லி:

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார்.

    எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ‘லுக்அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி லண்டனில் இருந்து நாடு திரும்பினார். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்த போதும் அவரை சி.பி.ஐ. கைது செய்யவில்லை.

    இதுகுறித்து சி.பி.ஐ. மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் லுக் அவுட் நோட்டீசு திருத்தம் செய்யப்பட்டது.

     


    அதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மல்லையா அதே ஆண்டு நவம்பர் 21-ந்தேதி வழக்கு விசாரணையில் ஆஜராக நாடுதிரும்பினார். பின்னர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

    வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தார். அப்போது அவர் பாராளுமன்ற மேல்- சபையின் எம்.பி.யாக இருந்தார். எனவே தேடப்படும் நபராக அறிவித்த போதும் அவரை கைது செய்ய சட்ட ரீதியான போதிய காரணங்கள் இல்லை. அதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

    இந்தநிலையில் அவரை கைது செய்ய வசதியாக லுக் அவுட் நோட்டீசு திருத்தப்பட்டது. அதன் மூலம் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தகவலை குடியுரிமை துறை சி.பி.ஐ.க்கு தெரிவிக்க வேண்டும் என்ற திருத்தம் வெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. #VijayMallya #CBI 

    அருண் ஜெட்லி-விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #ArunJaitley #VijayMallya
    கர்னூல்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள கர்னூலில் நடைபெற்ற பொ துக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையா ஒரு திருடன் என்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். ஆனால், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு தெரிந்தே அவர் தப்பி ஓடினார். ஏதோ ஒரு பிரதிபலனுக்காக அவர் தப்பிக்க அருண் ஜெட்லி அனுமதித்தார். அதற்காக அருண் ஜெட்லி-விஜய் மல்லையா இடையே ஒரு பேரம் உண்டானது.



    அருண் ஜெட்லிக்கு தெரிந்தே விஜய் மல்லையா தப்பி ஓடியும், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிக்கிறார். அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அருண் ஜெட்லியை அவர் நீக்க வேண்டும்.

    பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக் கொள்கிறார். ஆனால், இரவு நேரத்தில் திருடர்களுக்கு கதவு திறந்து விடும் காவலாளியாக அவர் இருக்கிறார்.

    முந்தைய காங்கிரஸ் அரசு, தலா ரூ.526 கோடி மதிப்பில் ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க திட்டமிட்டது. ஆனால், அந்த விலையை மோடி அரசு தலா ரூ.1,600 கோடியாக உயர்த்தி உள்ளது. மேலும், அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை எந்த முன்அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்துள்ளது.

    பிரதமர் எப்போதும் மேலே பார்க்கிறார். கீழே குனிந்து வலது புறமும், இடது புறமும் பார்க்கிறார். ஆனால், என் கண்களைப் பார்க்க மறுக்கிறார்.

    மன்மோகன் சிங் அரசு, ஆந்திராவுக்கு 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முன்வந்தது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா, 10 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதியை மீறி விட்டார்.

    சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததுடன், ஆந்திர தலைவர்களை அவமரியாதை செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும். மேலும், விவசாய கடன்களை ரத்து செய்யும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    கர்னூலில், மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தாமோதரம் சஞ்சீவய்யா இல்லத்துக்கு ராகுல் காந்தி சென்றார். மற்றொரு முன்னாள் முதல்-மந்திரி கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், கர்னூலில், கல்லூரி மாணவர்களுடனான ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில், ஜி.எஸ்.டி., ரபேல் போர் விமான விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்பட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். 
    ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக, விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. #VijayMallya #CBI #Chargesheet
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது சி.பி.ஐ. 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

    ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி கடன் பெற்று விட்டு திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக 2015-ம் ஆண்டு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளிடம் ரூ.6 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக 2016-ம் ஆண்டு ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ரூ.6 ஆயிரம் கோடி மோசடி பற்றிய வழக்கில், முதல்கட்ட விசாரணை முடிந்து விட்டது. எனவே, ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். அதன்பிறகும், விசாரணை தொடர்ந்து நடக்கும்.

    இந்த குற்றப்பத்திரிகையில், கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் பதவிகளில் இருந்த விஜய் மல்லையா, ஏ.ரகுநாதன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவர். அதுபோல், கடன் கொடுக்கும் பணிகளை கவனித்த வங்கி உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்றுவிட்ட வங்கி அதிகாரிகள் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்படுவர். அவர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

    அதுபோல், கடன் கொடுக்குமாறு வங்கி அதிகாரிகளை மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் நிர்பந்தம் செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களின் பங்கு பற்றியும், எந்த அளவுக்கு பங்கு இருந்தது என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

    விஜய் மல்லையா எந்த காரணத்துக்காக கடன் வாங்கினாரோ, அதற்கு பணத்தை செலவிடாமல், வேறு காரியங்களுக்கு செலவிட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #VijayMallya #CBI #Chargesheet 
    விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார். #Mayawati #VijayMallya
    லக்னோ:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் வசித்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு லக்னோ நகரில் புது வீட்டில் குடியேறிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடாளுமன்றம் மற்றும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, மாநில சட்டசபை தேர்தல்கள் என்றாலும் சரி எங்களுக்கு மதிப்பளித்து கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையென்றால் பகுஜன் சமாஜ் தனித்தே களம் இறங்கும்.

    நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு சம பொறுப்பு உள்ளது. இதனால்தான் சில தொழில் அதிபர்கள் தொழில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டை கொள்ளையடித்து விட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடியதற்கும் இந்த 2 கட்சிகளுமே முக்கிய காரணம்.



    பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இது ஜனநாயகத்தின் மீது படியும் கறை ஆகும். இப்பிரச்சினையில் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இதே தந்திரத்தை கையாள முயற்சிக்கிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. வாஜ்பாய் உயிருடன் இருந்தவரை ஒரு நாளும் பா.ஜனதா அவருடைய வழியை பின்பற்றி நடந்தது இல்லை. தற்போது பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், தங்களது தோல்விகளை மறைக்க வாஜ்பாயின் பெயரை பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Mayawati #VijayMallya
    விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பியோடிய விவகாரத்தில் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #JaiveerShergill #VijayMallya
    புதுடெல்லி:

    இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய விவகாரம் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. நாட்டை விட்டு வெளியேறும்முன் அவர், நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்தது தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இதைப்போல மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ. வெளியிட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸ் திருத்தப்பட்ட விவகாரத்தையும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துள்ளது. ‘மல்லையாவை பார்த்தால் பிடித்து கொடுக்க வேண்டும்’ என்று விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், பின்னர் அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திருத்தப்பட்டு இருந்தது.



    இந்த நோட்டீசை திருத்தியது, சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே.சர்மா என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மல்லையாவின் லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தி அவரை தப்பியோட அனுமதித்து இருக்கிறார், சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே.சர்மா. குஜராத் பிரிவு அதிகாரியான இவர்தான் சி.பி.ஐ.யில் பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி. இவர்தான் நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தப்பியோடும் திட்டத்துக்கான பொறுப்பாளர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்ஜில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய் மல்லையா தப்பியோடிய விவகாரத்தில் சி.பி.ஐ. இணை இயக்குனர் ஒருவரின் பங்களிப்பும் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அரசு அல்லது விசாரணை நிறுவனங்களின் விசாரணையை நம்ப முடியாது. எனவே இந்த விவகாரத்தை கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சுதந்திரமாக விசாரிக்க வேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளில் வங்கி மோசடி தொடர்பாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. மோடி அரசின் மெத்தனத்தை பயன்படுத்தி 23 குற்றவாளிகள் தப்பியோடி இருக்கின்றனர்.

    மோடி அரசில் உள்ள யாரெல்லாம் இந்த குற்றவாளிகள் தப்புவதற்கு உடந்தையாக இருந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணம் ரூ.90 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது, அதில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியது அனைத்துக்கும் பிரதமரும், நிதி மந்திரியும் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு ஜெய்வீர் செர்ஜில் கூறினார்.   #JaiveerShergill #VijayMallya
    மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் லுக்அவுட் நோட்டீசை திருத்தி தவறாக கணித்து விட்டோம் என்று சிபிஐ போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. #vijaymallya #cbi #lookoutnotice

    புதுடெல்லி:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் உள்ளது.

    டிசம்பர் மாதம் 10-ந்தேதி இது தொடர்பாக வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. அப்போது தான் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டுக்கு வந்த விஜய் மல்லையா நிருபர்களிடம் பேசுகையில் புதிய பூகம்பம் ஒன்றை கிளப்பினார். அவர் கூறுகையில், “நான் லண்டனுக்கு வருவதற்கு ஒருநாளைக்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்து பேசி விட்டுதான் வந்தேன்” என்று கூறினார்.

    இதையடுத்து மல்லையா தப்பி செல்ல நிதி மந்திரி அருண்ஜெட்லி உடந்தையாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். மல்லையா தப்பி செல்ல உதவியதால் அருண்ஜெட்லி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.


    ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து ராகுல் மீது பரபரப்பு புகார்களை கூறி வருகிறார்கள். மல்லையாவின் விமான நிறுவனத்திற்கு சாதகமான இருந்தது முந்தைய காங்கிரஸ் அரசு தான் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் மல்லையாவின் விமான நிறுவனத்தில் ராகுல் காந்திக்கு பங்கு இருந்த தாகவும் பா.ஜ.க.வினர் குற்றம் சுமத்தி உள்ளனர். இப்படி மல்லையா விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் பட்டியலை வாசித்தப்படி உள்ளனர்.

    இதற்கிடையே விஜய் மல்லையா தப்பி செல்வதற்கு சி.பி.ஐ. மெத்தனமாக இருந்ததும் ஒரு காரணமாகும் என்று பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்லையா கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஒரு முதல் “லுக்அவுட்” நோட்டீசை சி.பி.ஐ. வெளியிட்டது.

    அதில், “மல்லையா வெளி நாட்டுக்கு செல்ல இருந்தால் பிடிக்க வேண்டும்“ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த லுக்அவுட் நோட்டீஸ் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது.

    அந்த திருத்தத்தில் விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு சென்று வரும் தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவித்தால் போதும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் மல்லையாவை வெளிநாட்டுக்கு தப்பி செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நீர்த்து போய் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது:-

    மல்லையாவை கண்காணிக்கவே நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம். எனவே அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.

    விஜய் மல்லையா மீது வங்கி கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு 2015-ம் ஆண்டு தீவிரமான போது அவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி போவதும் வருவமாகவும் இருந்தார். 3 தடவை அவர் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அதன்பிறகும் கூட அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

    விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. மேலும் அவர் பாராளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்ய நாங்கள் யாருக்கும் லுக்அவுட் நோட்டீசை வழங்கவில்லை.

    மல்லையா வி‌ஷயத்தில் நாங்கள் எடுத்த முடிவுகள் தவறானவையாகும். அவர் 2015-ம் ஆண்டு இறுதியில் மிக சகஜமாகவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். மேலும் அவரை கைது செய்யும் எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் எப்படி கைது செய்ய முடியும்?

    இதுதவிர விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி மல்லையாவின் மோசடி குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில் நாங்களாகவே வழக்குப்பதிவு செய்து இருந்தோம்.

    எந்த வங்கியும் எங்களை அணுகவில்லை. இந்த நிலையில் அவர் தப்பி சென்றதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க இயலாது.

    மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன்சாமி சி.பி.ஐ. அமைப்பை கடுமையாக குறை கூறி உள்ளார்.

    சி.பி.ஐ. தனது லுக்அவுட் நோட்டீசை திருத்தியதின் மூலம் அது நீர்த்து போய்விட்டது. இதனால்தான் மல்லையா எளிதில் தப்பி சென்று விட்டார் சுப்பிரமணியன்சாமி குற்றம் சுமத்தி உள்ளார்.


    மேலும் சுப்பிரமணியன்சாமி கூறுகையில், “மல்லையா தப்பி செல்லும் முன்பு அருண்ஜெட்லியிடம் நெருக்கமாக அமர்ந்து பேசியது உண்மைதான். அருண்ஜெட்லியிடம் சொல்லிவிட்டு தான் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றுள்ளார்.

    2016-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அவர்கள் இருவரும் சந்தித்து பேசினார்கள். மார்ச் 2-ந்தேதி மல்லையா தப்பி உள்ளார். இதிலிருந்து அருண்ஜெட்லிக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது” என்று சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். #vijaymallya #cbi #lookoutnotice

    நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார். #VijayMallya #ArunJaitley
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

    நேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.

    இதனால், அருண் ஜெட்லியை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்ற மத்திய ஹாலில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாக காங்கிரஸ் எம்.பி புனியா இன்று தெரிவித்துள்ளார்.

    சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் அது உண்மை என தெரியவரும் எனவும் புனியா கூறியுள்ளார். 
    ×