என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tuticorin firing"
ஒமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு எம்.எல்.ஏ., நிருபரிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் மிகுந்த துயரத்தோடும், துன்பத்தோடும் கடந்த 100 நாட்களாக அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 100-வது நாள் அந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அமைதியாக மனுகொடுக்கும் நிகழ்வை அரசு முன்கூட்டியே உளவுத்துறை மூலம் கண்டறிந்து அந்த மனுவின் மீது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயரசம்பவம் நடந்திருக்காது. ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் அறவழி போராட்டத்தை நடத்திவந்தனர். இதில் 13 பேரை சுட்டு வீழ்த்திய இந்த தமிழக அரசு அந்த மக்களை கையாண்ட முறை வேதனையளிக்கிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு முதல்வர் தரும் இழப்பீடு குறைவானது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயிரை கொடுத்து உருவாக்கிய அரசு இந்த அ.தி.மு.க அரசு. தற்பொழுது பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து இனிமேல் இதுபோல சம்பவம் நடக்காது என உறுதி கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உறுதியளிக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை குமாரசாமி கொடுக்கா விட்டால் அவருடைய அரசு நீடிக்காது, உச்சநீதிமன்றமும் கர்நாடக அரசுகுக்கு துணைபோனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை போல் வன்முறை போராட்டத்தை தமிழக மக்கள் கையில் எடுப்பார்கள். உலகத்திலேயே எந்த அரசும் பொதுமக்களுக்கு கொடுக்காத சுமையை மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு கொடுத்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலையை வரலாறு காணாத விலையேற்றத்தை மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பெறமுடியாத சூழ்நிலை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலை:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட் டோர் பஸ்களை மறித்து போராட்டம் செய்தனர். எ.வ.வேலு உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி தலைமையில் தி.மு.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தி.மு.க.வினர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டம் செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம் தெரிவித்து அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வர்த்தகக்கழக தலைவர் மெட்ரோமாலிக் தலைமை வகித்தார்.
திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசன் மற்றும் பல்வேறு கட்சியினர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொதுச்செயலாளர் ராஜாராமன் வரவேற்று பேசினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன், நகர செயலாளர் எம்.எஸ்.கார்த்திக், உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி புதிய கலெக்டராக பதவி எற்ற சந்தீப் நந்தூரி கவலரம் தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தின் போது 102 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 14 பேர் உள்பட 19 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போலீஸ் தரப்பில் 10 பெண்கள் உள்ளிட்ட 34 பேர் காயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் நிலவி வரும் பதட்டமான சூழலில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்புவது தொடர்பாக வர்த்தகர்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
அதுதொடர்பாக பரிசீலித்து வருகிறோம். மேலும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் மருத்துவமனையில் நோயாளிகளுடன் உள்ளவர்களுக்கு உணவு, பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசின் முடிவும் அதுவே என முதல்வர் அறிவித்து உள்ளார்.
அதன்படி முதல்கட்டமாக ஆலைக்கு செல்லும் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்படும் உரிமம் புதுப்பித்தல் சான்று இதுவரை வழங்கப்படவில்லை. அந்த சான்று இருந்தால்தான் ஸ்டெர்லைட் ஆலை செயல் பட முடியும்.
ஆலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். இயல்புநிலை திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் டேவிதார், வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூறியதாவது:-
இதன் சேதமதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதவிர 35 கார்கள் ஓரளவு சேதமாகி உள்ளது. இதில் 19 கார்கள் அரசுக்கு சொந்தமானவை. 13 இருசக்கர வாகனங்கள் பாதியளவு சேதமடைந்துள்ளன. இதன் சேத மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும்.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.#bansterlite #sterliteprotest
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சின்னசாமி, மாதேஸ்வரன், கந்தசாமி, காதர், மாது, விஸ்வநாதன், கமலாமூர்த்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். பொதுமக்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டக்குழுவினர் கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஈரோடு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத் தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழ்ந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
ஸ்டெர்லெட் ஆலையை மூட வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்தும் முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி நின்றிருந்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன், மாநகர மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே ஒன்றாக திரண்டனர். பின்னர் போலீசாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் டீச்சர் காலனி பிரிவில் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பெருந்துறைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை:
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாரின் அராஜக செயலை கண்டித்து அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டம், மறியல்கள் நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் ஆகியோர் பேசினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழுவை ரத்து செய்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
சென்னையில் தலைமை செயலகம் முன்பு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து கடலூரில் நகர தி.மு.க. அலுவலகம் முன்பு நகர செயலாளர் ராஜா தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், தொ.மு.ச. தலைவர் பழனிவேல், மாணவரணி அகஸ்டின் உள்பட பலர் திரண்டனர். அவர்கள் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் புதுநகர் போலீசார் அங்கு வந்தனர்.
மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்