என் மலர்
நீங்கள் தேடியது "erode collector office"
- கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
- அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், 7 தளங்கள் உள்ளடக்கிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு தினமும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டருக்கு நேற்று மாலை தபால் வந்தது. அதனை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.
அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு சிலர் திட்டமிடுவதாகவும், இந்த மாதத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், அந்த நபர்கள் குறித்த தகவல் தனக்கு தெரியும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்தால் அவர்கள் குறித்த விபரத்தை தெரிவிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.
அனுப்பியவர் முகவரியில் வக்கீல் ஒருவரின் பெயர் இடம் பெற்று இருந்தது. இக்கடிதத்தை அடிப்படையாக கொண்டு, ஈரோடு சூரம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், அடையாளம் தெரியாத நபர் கடிதம் எழுதியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அக்கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் தென்காசியில் இருந்து அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவு நிபுணர்கள், மோப்பப்படை பிரிவினர் வந்து சோதனையிட்டனர். மோப்பப் படை பிரிவு பவானி நாய் வரவழைக்கப்பட்டது. முதலில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கார் பார்க்கிங் பகுதி, ஒவ்வொரு அலுவலகமாக சென்று சோதனையிட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகம் இன்று பரபரப்பாக காட்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொருத்தரமாக சென்று வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
- போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
ஈரோடு:
கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து பேங்க் ஆபரேட்டர்கள் திரண்டு வந்தனர்.
அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் தூய்மை பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் முழு நேர பணி செய்வதால் பணி வரன்முறை செய்து மாதம் குறைந்தபட்சம் ரூ.18,000 சம்பளம், இதரப்படிகள் முறையாக வழங்க வேண்டும்.
கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் படி வேலைப்பளு கூடியதால் பணி வரன்முறை செய்து மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம், இதரப்படிகள் வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதம் 10 ஆயிரம் சம்பளம், வருகை பதிவேடும், குழு காப்பீடும் செய்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெற்ற, ஓய்வு பெறுகின்ற கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்சம் பணிக்கொடையும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலிறுத்தி போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். உங்கள் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது .கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
பவானி தாலுகா மயிலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சித்தோடு கோணம் வாய்க்கால் பிரிவு பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை தற்போது பவானி மயிலம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட போத்த நாயக்கன் புத்தூரில் நெடுஞ்சாலை ஓரம் உள்ள பகுதியில் அமைய உள்ளது.
போத்த நாயகன் புத்தூர் சுற்றி சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம் மேலும் இப்பகுதியில் கல்வாநாயக்கனூரில் தொடக்கப்பள்ளியும் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கி வருகிறது.
இதனால் இந்த பகுதியில் எப்போதும் பெண்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
எனவே மேற்படி இடத்தில் டாஸ்மாக்கடை வந்தால் இந்த பகுதி நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் மேலும் கல்லூரி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அச்சத்துடனேயே பள்ளிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும். எனவே இந்த பகுதிக்கு வர இருக்கும் டாஸ்மாக் கடையை வேறு ஒரு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர். #tamilnews
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு பற்றி பேசியபோது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது.
தா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
ஈரோடு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத் தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழ்ந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
ஸ்டெர்லெட் ஆலையை மூட வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்தும் முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி நின்றிருந்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன், மாநகர மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே ஒன்றாக திரண்டனர். பின்னர் போலீசாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் டீச்சர் காலனி பிரிவில் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பெருந்துறைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






