search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complaint petition"

    • லெனின் தர்மராஜ், சண்முகவேல் ஆகியோர் ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது
    • சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளத்தை சேர்ந்த லெனின் தர்மராஜ் மற்றும் ஆய்க்குடியை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கோவில் விழா காலங்களில் பொழுது போக்கிற்காக ராட்டினம் அமைத்து அதன் மூலம் தொழில் செய்து வந்தனர்.

    இந்நிலையில் வாசுதேவ நல்லூரில் உள்ள சிந்தாமணிநாதர் கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவிற்கு ராட்டினம் இயக்குவதற்கு அரசு துறைகளில் அனுமதி பெற்று, முன்கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பொதுப்பணி துறையை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களுக்கு பணம் மட்டுமே ராட்டினத்தை இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்ததாக அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    இதுதொடர்பாக ராட்டின உரிமையாளர் சண்முகவேல் கலெக்டர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்துள்ளார். அதில், ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குகிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அலைக்கழித்ததாகவும், இதனால் சுமார் ரூ.40 லட்சம் தங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
    • 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தவெளி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரர்களை நேரில் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 19 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மனு அளித்து விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட சுமார் 80 நபர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் சட்டம் ஒழுங்கு, நில அபகரிப்பு மற்றும் பணமோசடி, தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் அளித்த மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டதா, மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதா என்பன போன்ற பல்வேறு விபரங்களை போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கேட்டறிந்தார். தொடர்ந்து சுமார் 21 நபர்களின் மனுக்களை மீண்டும் மறு விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜய் கார்த்திக் ராஜா, கள்ளக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    • பண்ருட்டி பகுதியை சேர்ந்த மகன்- மருமகள் கொலை மிரட்டல் விடுப்பதாக பெற்றோர் புகார் மனு அளித்தனர்.
    • கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.

     கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 75). அவரது மனைவி ரோஜாவர்ணம் . இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் . அனைவருக்கும் திருமணம் நடந்து தனித்தனி குடும்பம் நடத்தி வருகின்றனர். எனது 3 மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் தனித்தனியாக வீடு கட்டி அவர்கள் பாகத்தில் குடியிருந்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் செல்வதற்கு பொதுப்பாதை அமைத்து கொடுத்துள்ளேன். இதில் தனசேகரன் என்பவர் பொதுப்பாதையில் மற்றவர்கள் செல்லும் வழியில் கார் மற்றும் இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைக்கின்றார். இது சம்பந்தமாக நாங்கள் கேட்ட போது என்னையும் எனது மனைவியையும் மூத்த மகன் சந்திரசேகரன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி இருவரும் சேர்ந்து கடந்த 23- ந்தேதி தேதி 2 பேரும் இரும்பு பைப்பு மற்றும் கட்டையை எடுத்து வந்து கொன்றுவிடுவோம் என மிரட்டினர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருக்கிறது.

    கணவருடன் தன்னை சேர்த்து வைக்ககோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கர்நாடக பெண் புகார் மனு அளித்துள்ளார்.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (வயது 35). இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

    எனக்கும் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் டெலிபோன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு லக்‌ஷனா, லட்சுமணா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். தற்போது என் குழந்தைகள் 4-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் என் கணவரது வீட்டார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். என் குழந்தைகளையும் அவர்கள் வைத்துள்ளனர்.

    இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் கணவரை என்னோடு சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    பின்னர் மனுவை அனிதா கலெக்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் போட்டார். #tamilnews
    தமிழக காங்கிரசுக்கு எழுச்சியூட்டும் தலைமை வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் இளங்கோவன் ஆதரவாளர்கள் மனு அளித்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் இளங்கோவன் இடையேயான கோஷ்டிபூசல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    இந்த நிலையில் இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், வசுந்தராஜ் ஆகியோர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸ் செயல்பாடு பற்றி 3 பக்க புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் தோல்விகளையும், சோதனைகளையும் சந்தித்து வருகிறது. ஆனாலும் தொண்டர்கள் உற்சாகம் இழக்காமல் இருந்தார்கள். ஆனால் இப்போது சோர்வுடனும், விரக்தியுடனும் இருக்கிறார்கள்.

    ஜி.கே.வாசன் பிரிந்து சென்றபோது காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்றார்கள். ஆனால் கட்சி எவ்வித சேதாரமும் இல்லாமல் இருந்ததை திருச்சி மாவட்டத்தில் கொட்டும் மழையில் நினைந்தபடி நீங்களே பார்த்து பாராட்டினீர்கள்.

    2004-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய தமிழக காங்கிரசே காரணமாக இருந்தது. அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைத்ததும் மாநில தலைவராக இருந்த இளங்கோவன் சென்று பேசினார். 2 முறை மத்தியில் காங்கிரஸ் அரசு மலர்ந்தது. ஆனால் இப்போது தோழமை கட்சிகளை எரிச்சலூட்டும் நிகழ்வுகள்தான் நடக்கிறது.

    மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து டெல்லி தலைமை அறிவிக்கும் போராட்டங்களை தொண்டர்கள் எழுச்சியுடன் நடத்தினார்கள்.

    தற்போது தமிழ்நாட்டில் குழப்பமான, தெளிவற்ற நிலையில் அரசியல் உள்ளது. அ.தி.மு.க. உடைந்து பா.ஜனதாவின் எடுபிடி கட்சியாக இருக்கிறது.

    நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளார்கள். இதனால் அரசியலில் தாக்கம் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

    இந்த நேரத்தில் வேகமாக செயல்பட்டால்தான் காங்கிரசை பலப்படுத்த முடியும். ராஜீவ்காந்தி இருந்தபோது 22 சதவீத செல்வாக்குடன் இருந்த கட்சியின் செல்வாக்கு தற்போது 5 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

    தொண்டர்களும், நிர்வாகிகளும் முடங்கி கிடக்கிறார்கள். காரணம் தினந்தோறும் நிகழும் அரசியல் மாற்றங்களை சந்திக்காதது தான். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே உள்ளாட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராட வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை. கூட்டணி கட்சியான தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் தலைவர் மட்டுமே கலந்து கொள்கிறார்.

    அன்றாடம் பா.ஜனதா அ.தி.மு.க. எழுப்பும் குரல்களுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் காங்கிரஸ் முடங்கி கிடக்கிறது. செயல்படாத அரசை கண்டித்து செயல்படும் நிலையில் காங்கிரஸ் இல்லை.

    சத்தியமூர்த்தி பவனை விட்டு காங்கிரஸ் வெளியே சென்று கவுரவ பிரச்சனையை மறந்து செயலாற்ற வேண்டும். அதற்கு செல்வாக்குள்ள எழுச்சியூட்டும் தலைமை தேவைப்படுகிறது.

    ஜெயலலிதாவை கூட எதிர்த்து களம் கண்டது காங்கிரஸ் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேலை செய்ய தொண்டர்களும், நிர்வாகிகளும் தயாராக இருக்கிறோம். இதை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த நடவடிக்கை தேவை. உடனடியாக நடவடிக்கை எடுத்து பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    டெல்லியில் இளங்கோவன் ஆதரவாளர்கள் நேரில் புகார் செய்து இருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Congress #RahulGandhi
    ×